<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-153842835912349353</id><updated>2012-02-01T10:00:23.587-08:00</updated><category term='பெண்ணியம்'/><category term='விளையாட்டு'/><category term='கதை'/><category term='புகைப்படம்'/><category term='வெட்டி'/><category term='பொன்னியின் செல்வன்'/><category term='புலம்பல்'/><category term='விமர்சனம்'/><category term='அனுபவம்'/><category term='அறிமுகம்'/><category term='பெங்களூரு'/><category term='சுயம்'/><category term='ஒட்டியது'/><category term='நட்சத்திரம்'/><category term='பினாவானா'/><category term='சுற்றுலா பெங்களூரு'/><category term='கடவுள்'/><title type='text'>மோகனம்</title><subtitle type='html'>தமிழின் மேன்மை அதன் தொன்மையில் மட்டும் இல்லை - தொடர்ச்சியிலும் உள்ளது</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://malargall.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/153842835912349353/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://malargall.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>மோகனா</name><uri>http://www.blogger.com/profile/10206294980960996941</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_9nysbCErfEE/SCc0lV224EI/AAAAAAAAENE/T09e-Q_vDbE/S220/DSCF0066.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>41</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-153842835912349353.post-8278645265543627148</id><published>2012-02-01T01:09:00.000-08:00</published><updated>2012-02-01T01:48:51.576-08:00</updated><title type='text'>கோபல்ல கிராமம்</title><content type='html'>தன் கணவன் இன்னொரு திருமணம் செய்துகொண்டுவிடுவாரோ என்று சந்தேகப்பட்டு வீட்டில் சண்டை போட்டுக்கொண்டு காட்டில் ஒற்றையாக வரும் கர்பிணிப்பெண்ணின் காதணிக்கு ஆசைப்படும் ஒரு கொலையாளி அவளைக் கொல்லும் சமயம் அங்கே வரும் கோட்டையாரிடம் மாட்டிக்கொள்வதில் தொடங்கும் நாவல், அந்த கொலையாளியை கழுவிலேற்றுவதில் முடியும் வரை சுவாரஸ்யம் குறையாமல் இருக்கின்றது.இந்த புதினம் கோபல்ல கிராமம் என்ற ஒரு கிராமம் உருவான விதத்தை கதை சொல்லி வாயிலாகவும், இறந்த காலம் கோட்டையார் வீட்டு மூத்த கிழவி மங்கையதாயாரு அம்மாள் தன் ஒன்பது வயதில் நடந்தவைகளை பாதி மறந்த நிலையில் தன் கற்பனை கலந்து மிகைபடுத்தி கூறுவது போலவும், நிகழ் காலம் கோட்டையார் பார்வையில் கூறுவது போலவும் எளிமையான வட்டார மொழியிலும், மிகைபடுத்தப்பட்ட மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கற்பனைகளாலும் வார்த்தைப்படுத்துகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த கிராமத்தின் கலாச்சாரம், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் நம் முன்னே அழகாக வார்த்தைகளால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. துளுக்க அரசனின் கண்ணில் படும் ஒரு அழகான பெண்ணிற்காக இடம் பெயரும் ஒரு பெரிய குடும்பத்தின் எண்ணமே மிகவும் ஆச்சரியப்படுத்தியது,(எதோ ஒரு கதையில் இதே சூழ்நிலையில், இதே மாதிரியான ஒரு அழகான பெண்ணை ஒரு அரசனிடம் இருந்து காப்பாற்ற அவளின் தந்தை மற்றும் சகோதரர்கள் மண்ணில் உயிருடன் புதைப்பதாக கதைபடுத்தியிருந்தது என்னை வெகுவாக பாதித்திருந்தது. இந்த கதையை படித்தபின் நான் சற்று சமாதானமாக உணருகிறேன், கதைகளில் மிகவும் ஒன்றி இப்படி நான் பாதிப்படைவது மிகவும் சாதாரணமான ஒன்று.)அப்படி இடம் பெயரும் குடும்பம் ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து, அங்கு நிலங்களை செப்பணிட்டு வாழத்தொடங்குவதில் இருந்து, அந்த கிரமாத்திற்கு ஆங்கிலேயர்கள் வரும் வரை நான்-லீனியர் முறையில் ஆசிரியர் கதைப்படுத்தியுள்ளார். கீழ் வருபவை நான் ரசித்த சில பகுதிகள்...&lt;br /&gt;&lt;br /&gt;கோட்டையார் குடும்பத்து சகோதரர்களைப்பற்றிய வார்த்தைப்பாடுகள் மிகவும் அழகு, நகைச்சுவையுடன், குறும்புடன், வீரத்துடன் மற்றும் நியத்துடன் இருக்கும் அந்த சகோதரர்களின் பங்கு புதினத்தில் அதிகம் நிறம்பி உள்ளது. புதினத்தின் முக்கியமான பகுதிகள் அவர்கள் வீட்டு கிழவி கூறுவதாக இருப்பதாலும், கொலைகாரனை கோட்டையார் பிடிப்பதாலும், இந்த புதினத்தின் கதை இந்த குடும்பத்தைச் சுற்றியே வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த கொலைகாரனுக்கான பஞ்சாயத்துக்காட்சியில் அனைவரையும் அறிமுகப்படுத்துவது மிகவும் அழகு, அவர்களின் பெயர்கள், காரணப்பெயர்கள் மற்றும் அதற்கான காரணங்கள் மிக சுவாரஸ்யமானவை. அந்த கிரமத்தில் அனைவரும் கதைக்குள் வந்து போக இயலாததை அந்த பஞ்சாயத்து காட்சி நிறைவு செய்கிறது, கோபல்ல கிராமத்தின் பெரும்பாலான/சுவாரஸ்யமான மக்களை இந்த இடத்தில் ஆசிரியர் அறிமுகப்படுத்துகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அழகான பெண்களைப்பற்றி வர்ணிப்பது மிகவும் அழகு. ஒரு வழிபறி கொல்லைக்காரன் அவளைப்பார்த்து வணங்கி, அவர்களை பாதுகாப்பாக அனுப்பிவைப்பது, நீலமான கூந்தல் மற்றும் அதை பாதுக்காக்கும் விதத்தினைப்பற்றி கூறியிருப்பது அனைத்துமே அழகாகவும் சற்று மிகைப்படுத்தியும் வார்த்தைப்படுத்தப்பட்டுள்ளது. நன்றாக சமைக்கும் பெண்ணை பற்றிய தகவல்களும் இதே வகையைச் சேரும்.&lt;br /&gt;&lt;br /&gt;இரவு கொள்ளைக்காரர்களைப்பற்றியும், அவர்களின் தந்திரங்கள் மற்றும் அவர்களை தடுக்க கிராமத்தினரின் தந்திரங்கள் பொன்றவை அழகாக வார்த்தைபடுத்தப்பட்டுள்ளன. கொள்ளைக்காரர்களை கொல்லும் வழக்கம் இல்லாததை இந்த புதினம் கோடிட்டுக்காட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கோபல்ல கிராமத்து திருமண சடங்குகளைப்பற்றிய  வார்த்தைப்பாடுகள் மிகவும் அழகு. திருமணத்திற்கு மட்டுமே தாடியை எடுப்பது, மனைவி கர்ப்பமாக இருந்தால் முடிகளை நீக்காமல் இருப்பது(இப்போது கூட சிலர் இதை கடைபிடிக்கிறார்கள்) என்ற வழக்கங்களை  வார்த்தைப்படுத்தியுள்ளார். பலதார மணமும், அப்படி பலதார மணம் செய்ய விரும்பாதவர்களின் நிலையையும், அதை பெண்கள் எடுத்துக்கொள்ளும் விதத்தையும் ஆசிரியர் அழகாக கையாண்டுள்ளார், எதையும் சரியென்றோ, தவறென்றோ நிறுவாமல், ஆசிரியரும் ஒரு பார்வையாளராகவே இருப்பது மிகவும் அழகு.&lt;br /&gt;&lt;br /&gt;பொறாமையில் நன்றாக விழந்திருக்கும் சோளக்காட்டை விழுதுவிடுவதும், பின்னர் அடுத்த பெய்த மழையில் அது இன்னும் பெருகி வளர்ந்திருப்பதும், அது தான் இன்றைய “பயிருழவு”க்கு அடிப்படை என்றும் மற்றும் ஒற்றை கலப்பையிலிருந்து ஒன்றுக்கு மேற்பட்ட கலப்பை உழ உபையோகிக்க அவர்கள் கண்டுபிடித்த விதத்தையும் ஆசிரியர் கூறியுள்ள இடங்களில் கற்பனை ஏற்றுக்கொள்ளும் விதமாக இருந்தாலும், அந்த கால கட்டத்தில் அவை வழக்கிலில்லையா, இருந்ததா என்பது அறிந்துகொள்ளவேண்டிய ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;கன்றையிழந்த பசுவையையும், தாயை இழந்த கன்றையும் இணைப்பதும், கோயிலுக்கு நேர்ந்து விட்ட காளையும், அவர்களுக்கு அது கிடைத்தவிதம், அதன் மீதான பிணைப்பு மற்றும் இருதியில் அதன் திமிரைகுறைக்க அனைவரும் முடிவுசெய்யும் இடங்களும் மிக அழகாக வார்த்தைப்படுத்தப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;மழைக்காலங்களுக்குத் தாயாராகும் விதமும், அவர்களின் மருத்துவம் மற்றும் சில அலங்கார முறைகளும் புதிய தகவல்களாக இருந்தது. அந்த காட்டை செப்பணிடும் விதமும், நிறைய உறுப்பினர்கள் இருந்த வீடுகளில், அதிக பரப்பளவிலான நிலங்களை செப்பணிட முடிவதால், பெரிய குடும்பங்களுக்கு பெரிய நிலங்கள் கிடைத்ததாக கூறும் காரணமே சமுதாய ஏற்றத்தாழ்வுகளுக்கு தொடக்கமாக அமைந்ததோ என்று எனக்கு தோன்றியது, ஆனாலும் அப்படி அமைந்திருந்தால் அது எதார்த்தம் தான் என்றும் நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;புதினத்தின் முடிவில், பஞ்சாயத்தில் முடிவு செய்ததைப்போல் அந்த கொலைகாரனை கழுவிலேற்றி, அவன் தாகம் என்று கத்தும் போது, தாகத்துக்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது என்று சட்டம் இல்லை என்று கூறி நீர் கொடுக்கும் இடம், மற்றும் ஆங்கிலேயர் வருகையை பெரிய பாதிப்பாக எடுத்துக்கொல்லாமல், அவர்களின் பிரதினிதியாக ஊர் பெரியவரை இருக்க சம்மதிப்பதும், அந்த கிராமத்து மனிதர்களின் அன்பை, எதார்த்த குணத்தை அறிந்து கொள்ளமுடிகிறது. துளுக்க அரசன் போல ஆங்கிலேயர்கள் பெண்டாலவில்லை என்பதே கிராமத்தினர்க்கு போதுமானதாக இருப்பதாக வார்த்தைப்படுத்தியுள்ளது மிகவும் எதார்த்தம், மற்றும் அது புதினம் கதையுடனேயே நேர் கோட்டில் பயணிப்பதின் ஒரு சாற்று.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த புதினத்தில் ரசிக்கக்கூடிய சில பகுதிகளின் தொகுப்பே இது, சராசரியாக 17-18ம் நூற்றாண்டு மக்களின் வாழ்க்கையை இந்த புதினம் மிகவும் அழகாக வார்த்தைப்படுத்துகிறது, புதினம் முழுவதும் ஒரே நேர் கோட்டில் பயணிக்கிறது, எங்கும் விலகாமல், நம் கவனத்தையும் விலக்காமல் கதையாசிரியர் நம்முடனேயே பயணிக்கிறார். ஒரு கிராமம் நம் முன்னே விரிகின்றது, அதன் நீள அகலங்கள், ஏரிகள், விலங்குகளுடன் இந்த கோபல்ல கிராம கதைமாந்தர்களுள் ஒருவராக, கிரமத்தினருடன் பயணித்தது போன்ற உணர்வுடன் புதினம் முடிகிறது. படித்துக்கொண்டிருந்த போது புத்தகத்தை அவ்வப்போது பாதியில் கீழே வைக்க நேரிட்ட போதும், எப்போது மீண்டும் தொடர்வோம் என்று புத்தகத்திலேயே எண்ணம் இருந்தது, இத்தனை ஈடுபாட்டுடன் ஒரு புத்தகம் படித்தது நல்ல அணுபவமாக இருந்தது. &lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/153842835912349353-8278645265543627148?l=malargall.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://malargall.blogspot.com/feeds/8278645265543627148/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=153842835912349353&amp;postID=8278645265543627148' title='2 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/153842835912349353/posts/default/8278645265543627148'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/153842835912349353/posts/default/8278645265543627148'/><link rel='alternate' type='text/html' href='http://malargall.blogspot.com/2012/02/blog-post.html' title='கோபல்ல கிராமம்'/><author><name>மோகனா</name><uri>http://www.blogger.com/profile/10206294980960996941</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_9nysbCErfEE/SCc0lV224EI/AAAAAAAAENE/T09e-Q_vDbE/S220/DSCF0066.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-153842835912349353.post-2933712311852757431</id><published>2012-01-06T10:35:00.000-08:00</published><updated>2012-01-06T10:35:35.839-08:00</updated><title type='text'>2011 ல் படித்த புத்தகங்கள்</title><content type='html'>புத்தகங்களைப்போல் எனக்கு நெருக்கமான விசயம் எதுவுமே இல்லை, ஆனால் இந்த அவசர மற்றும் போட்டி உலகத்தில் பணம் மற்றும் தொழில் சார் அறிவின் முக்கியத்துவத்தால் நான் புத்தங்களை மற்றும் இது மாதிரியான பதிவுகளை இழந்து வந்துள்ளேன். உறவுகளும் கூட இந்த விடயத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது, 13 முதல் 24 மாத குழந்தையை வைத்துக்கொண்டு, வேலைக்கும் சென்று கொண்டு புத்தகத்தை எடுத்துக்கொண்டு அமர மனம் வருவதில்லை. ஆனாலும் ரொம்பவே முயன்று சென்ற வருடத்தில் சில புத்தங்களை விரும்பிப் படித்தேன், அதை பதிவு செய்வதின் மூலம் அவற்றை நியாபகப்படுத்திக்கொள்ளவும் முடியும் மற்றும் எணணாங்களை தொடர்ந்து பதிய விரும்பும் எனக்கு இது ஒரு தொடக்கமாகவும் அமையும்.&lt;br /&gt;&lt;br /&gt;கட்டுரையும் கட்டுக்கதையும் - பிரேம் - ரமேஷ்&lt;br /&gt;&lt;br /&gt;பாடபுத்தகங்களுக்குத் தரும் ஒருமுக சிந்தனையுடன் படிக்கவேண்டியதாகவே உள்ளன இவர்களின் அனைத்து நூல்களும். ஆனால் ”சொல் என்றொரு சொல்”லிலிருந்தே இவர்களின் நூல்களின் மீதான ஒரு ஈர்ப்பு என்னுள் ஒரு போதை போல் உறைந்து கிடக்கிறது. போதைக்கு எனக்கு சுயஅனுபவம் கிடையாது, ஆனால் இவர்களின் வார்த்தைகளை படிக்கும் போது ஒரு மாதிரியாக போதையை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. சில புத்தகங்கள் நம்மை பாதிக்கும், ஒரு நாளோ, இரண்டு நாளோ அல்லது நினைக்கும் போதெல்லாம், ஆனால் இவர்களின் எழுத்து தான் இலக்கியங்களின் மீதான் நம் பார்வையை, விமர்சனங்களை, புரிதல்களை ஏன் நம் இலக்கிய வாசிப்பு ரசனையையே கூட கேள்விக்குட்படுத்தும். Not so good and not common as well வகையான எனக்கு, இவர்களின் புத்தகங்களின் மீதான ஈர்ப்பு என் வாசிப்பை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திச் செல்கின்றன/செல்வதாக நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பசித்த மானிடம் - கரிச்சான்குஞ்சு &lt;br /&gt;&lt;br /&gt;என்னை மிகவும் பாதித்த ஒரு புத்தகம், கசப்பான பல யதார்த்தங்களை ஜீரணிக்க முடியாமல் சிரமப்பட வேண்டியிருக்கிறது. பாலுறவுப் பிரச்னைகள் கதையில் சுவை கூட்டிச் சுவாரஸ்யம் சேர்த்தாலும், காமம் என்பதையும் மீறி பெரும்பாலும் அவை நம்மை யோசனையில் ஆழ்த்திவிடுகிறது. நீதி ஒழுக்கம் எதையும் பொருட்படுத்தாமல் வாழ்ந்து போகும் கதாபாத்திரங்கள் அன்று கதைகளுக்குள் பெரும்பாலுமும், நிஜத்தில் குறைவாக இருந்த போதும், இன்று பல இடங்களிலும் ஏன் நம் உறவுகளுக்குள்ளும் மற்றும்  நமக்குள்ளும் கூட வந்து விட்டது. நாவலில் `காமம்' வெறித்தனமாக, மறைமுகத்துடன் சொல்லப்பட்டிருக்கிறது. நயத்தக்க நாகரிகம் இதில் பளிச்சிடுகிறது. மிகச் சிறந்த நவீனம். &lt;br /&gt;&lt;br /&gt;உறுபசி - எஸ்.ராமகிருஷ்ணன்&lt;br /&gt;&lt;br /&gt;உறுபசி எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய மூன்றாவது நாவல். இதை 2006ல் உயிர்மை பதிப்பகம் வெளியிட்டது. இந்நாவல் ஒரு தனிமனிதனின் வாழ்க்கையை பல்வேரு மனிதர்கள் அவன் இறந்தபின்னர் நினைவுகூர்வதுபோல அமைக்கபப்ட்டிருக்கிறது. அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் அவன் வாழ்க்கையின் ஒரு பகுதியைச் சொல்கிறார்கள். ஒட்டுமொத்தமாக தெரிந்தும் தெரியாததுமான ஒரு வாழ்க்கை உருவாகிவருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;புனலும் மணலும் - ஆதவன்&lt;br /&gt;&lt;br /&gt;இந்நாவல் திருவனந்தபுரம் கரமனை ஆற்றில் மணல் அள்ளி வாழும் மக்களைப்பற்றிய கதை. பாச்சி என்ற மையக்கதாபாத்திரம் அழகற்ற குரூபி. அவளை அவள் தந்தை வெறுக்கிறார். அவள் அவரை நேசித்து பாதுகாத்து வந்தபோதிலும்கூட வெறுப்பு கூடிக்கூடி வருகிறது. காரணம் அவளுடைய அழகின்மைதான். கடைசியில் அவள் கரமனை ஆற்றில் மூழ்கிச்சாக தந்தையே காரணமாக அமைகிறார். வாழ்க்கையை உள்ளபடியே சொல்ல முயலும் இயல்புவாத அழகியல் கொண்ட நாவல். காமத்தையும் வன்முறையையும் அப்படியே சொல்கிறது. நீதி ஒழுக்கம் என எதையும் முன்வைப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வேள்வித் தீ - எம்.வி. வெங்கட்ராமன்&lt;br /&gt;&lt;br /&gt;எம்.வி. வெங்கட்ராமனின் ''வேள்வித் தீ'' தமிழ் நாவல்களில் மிக அரிதாகவே பேசப்பட்ட செளராஷ்டிரா என்ற ஒரு சமூகத்தைப் பற்றிய நாவல். ஒரு திறமையான நெசவாளியாக கண்ணன் உருவானவிதத்தை நினைவோட்ட உத்தியில் சொல்கிறார், ஒரு நெசவாளியின் கஷ்ட ஜீவனத்தை ஆழ அகலங்களுடன் சொல்லும் இதில் மூன்று கதாபாத்திரங்களுக்கும் இடையிலான மனப்போராட்டத்தை நுட்பமாகவும் நேர்த்தியாகவும் குறிப்பாக யதார்த்தமாகவும் கூறியிருக்கிறார். அழகான குடும்பத்தில் அடியெடுத்து வைத்து இருதியில், இன்ப துன்பங்களில் மற்றும் முக்கியமாக குடும்பத்தலைவனின் முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகிக்கும் குடும்ப தலைவி இறக்க காரணமாகி, அடுத்த நளே அந்த குடும்பத்தலைவனுடன் வாழ திட்டம் தீட்டும் ஒரு விதவை கதாபாத்திரத்தின் யதார்த்தம் ஜீரணிக்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கரைந்த நிழல்கள் - அசோகமித்திரன்&lt;br /&gt;&lt;br /&gt;சினிமா என்னும் அதிசய ஊடகத்தின் மாய வலையினுள் உருக்குலைந்து போன மனிதர்களின் ஏமாற்றம், இழப்பு, வலி, இயலாமை, தோல்வி என்று நம்மால் சிறிதும் கற்பனை செய்ய முடியாத வாழ்க்கையையும், பரிதாபத்தையும் பதிவு செய்திருக்கிற உருக்கமான நாவல். படத் தயாரிப்பாளர் , புரொடக்ஷன் மானேஜர், டைரக்டர், காமிராமேன், நடிகைகள், துணை நடிகைகள், ஸ்டூடியோ கம்பனிக்கு கார் ஓட்டுபவர்கள் என பலரது வாழ்க்கையையும் ஆசிரியர் தனது இயல்பான நடையில் வாழச்செய்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;நிழல் முற்றம் - பெருமாள் முருகன்&lt;br /&gt;&lt;br /&gt;சமூகத்தின் விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றிய படைப்புகள் வாசிப்பவனுக்குள் ஏற்படுத்தும் தாக்கமும் வீச்சும் அபரிமிதமானது. பெருமாள் முருகனின் நிழல் முற்றம் அரை இருளில் வாழும் மனிதர்களின் வாழ்க்கையை மிக நெருக்கமாக அணுகியிருக்கிறது. ஒரு சிறு நகரத்தில் இருக்கும் சினிமா கொட்டகையையும் அதைச் சார்ந்த மனிதர்களையுமே கதையின் பிரதான பாத்திரங்களாகக்கொண்டு உயிரோட்டமாக எழுதப்பட்டுள்ள மிகச் சிறந்த நாவல் இது.&lt;br /&gt;&lt;br /&gt;நடந்து செல்லும் நீரூற்று - எஸ்.ராமகிருஷ்ணன்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றாட வாழ்வின் சொல்லப்படாத துக்கங்களும் தொடப்படாத தனிமைகளும் எஸ்.ராமகிருஷ்ணனின் இக்கதைகளை ஆற்றுப் படுத்த முடியாத கேவல்களின் சித்திரங்களாக மாற்றுகின்றன. ஆழம் காண முடியாத இருளில். உடைந்த மனோரதங்களுடன் வாழ்வைக் கடந்து செல்லும் இக்கதைகளின் பாத்திரங்கள் யார்மீதும் எந்தப் புகார்களும் கொண்டவையல்ல. மாறாக அவை தம் மறைவிடங்களில் தீமைகளின் இடையறாத பேச்சினைக் கேட்டபடி இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;கனவுப் புத்தகம் - ஜே.பி.சாணக்யா&lt;br /&gt;&lt;br /&gt;காலச்சுவடு, தீராநதி, தலித் போன்ற இதழ்களில் வெளிவந்த கதைகள் இவை.கடவுளின் நூலகம்,கோடை வெயில்,பதியம், கண்ணாமூச்சி, கறுப்புக் குதிரைகள், ஆண்களின் படித்துறை, இரண்டாவது ஆப்பிள், அமராவதியின் பூனை, மஞ்சள் நீலம் வெள்ளை,கனவுப்புத்தகம் ஆகிய பத்து சிறுகதைகளைக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;படிக்கவேண்டும் என்று முடிவெடுத்திருந்த பல புத்தகங்களை 2011ல் படிக்க இயலவில்லை. இந்த வருடம் எத்தனை புத்தகங்கள் படிக்கமுடிகிறதென்று தெரியவில்லை. ஆனால் அதற்கான விருப்பம் கொஞ்சமும் குறையாது என்பது நிதர்சனம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/153842835912349353-2933712311852757431?l=malargall.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://malargall.blogspot.com/feeds/2933712311852757431/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=153842835912349353&amp;postID=2933712311852757431' title='2 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/153842835912349353/posts/default/2933712311852757431'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/153842835912349353/posts/default/2933712311852757431'/><link rel='alternate' type='text/html' href='http://malargall.blogspot.com/2012/01/2011.html' title='2011 ல் படித்த புத்தகங்கள்'/><author><name>மோகனா</name><uri>http://www.blogger.com/profile/10206294980960996941</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_9nysbCErfEE/SCc0lV224EI/AAAAAAAAENE/T09e-Q_vDbE/S220/DSCF0066.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-153842835912349353.post-4316205305178339118</id><published>2008-01-21T23:25:00.000-08:00</published><updated>2008-01-20T21:56:53.044-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுயம்'/><title type='text'>ஒரு துன்பமான நாளின் முடிவில்</title><content type='html'>ஒரு துன்பமான நாளின் முடிவில்... &lt;br /&gt;&lt;br /&gt;நிதர்சனமில்லா கால வெளிக்குள் என் கனவுகள் தூங்கிக்கொண்டுள்ளன, தன்னை உணர்த்தா இயலாமையின் நிழல் இருளாக எங்கும் பரவி கனவுகளின் தூக்கத்திற்கு போர்வை சாத்துகின்றன... எல்லையில்லா கால பெருவெளிக்குள், வாழ்வின் பற்றின்மையால் நீந்திக்கொண்டுள்ளேன். உறவுகள் வந்து போகின்றன, போவதற்காகவே வருகின்றன... போகக்கூடிய உறவுகளிலும் ஒரு இன்பம் இருக்கத்தான் செய்கின்றது, துன்பத்தை நிலை நிருத்திப்போனாலும் கூட... எந்த உறவுகளும் என்னை ஈர்க்கவில்லை, நான் நீந்திக்கொண்டிருப்பதே சமாதானம் அவைகளுக்கு, ஏனென்றால் ஈர்க்கப்படக்கூடிய எந்த காரண காரியங்களும் என்னிடம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா உறவுகளும் மீண்டும் என் தேடுதலை வலியுருத்துகின்றன, தெடு என்று சொல்லி பந்தாடப்படும் என் எண்ணங்கள் பயணிக்கும் தொலைவு முடிவில்லாததாகிறது. தேடுதல் முடியும் எல்லையில்(முடிவதாக நான் நினைத்துக்கொள்ளும் எல்லையில்) எனக்கான இன்னொரு பயணம் மௌனமாக காத்திருக்கின்றது. பயணம் இல்லாத என் நிலை உருதிபட வேண்டுமென்றால் எனக்கான என்னை ஈர்க்க நிரந்தரமாக ஒரு சவக்குழி வெட்டப்பட்டுள்ளது, நான் அங்கு செல்ல வேண்டியது தான் எந்த இடையூரும் இல்லை(தற்போது), அவ்வப்போது அதன் ஈர்ப்பு அதிகமாக இருக்கும், என் ஆசைகள் அவற்றிற்கு இடையூராக இருந்து என்னை மிதக்கவிடும். &lt;br /&gt;&lt;br /&gt;என் உறவுகளுடனான சமாதனப் பேச்சுவார்த்தைகள் தோல்வியையே சந்திக்கின்றன. என்னை நானே சமாதானப்படுத்தும், படுத்திக்கொள்ளும் மற்றும் நான் விட்டுக்கொடுக்க வேண்டிய சராசரி விகிதம் எல்லா பேச்சுவார்த்தைகளிலும் ஏறிக்கொண்டே போகின்றது....&lt;br /&gt;&lt;br /&gt;.........&lt;br /&gt;&lt;br /&gt;அவளின் நாட்குறிப்பு பேசுகின்ற கோணங்கள் எனக்கு பரிட்சயமானவை தான், என்னை ஒரு துடுப்பாக பயன்படுத்திக்கொள்ளும் அவளின் பயணம் ஒரு குட்டையில் ஆனால் கடலில் பயணம் செய்வதாய் இருக்கும் அவளின் மனப்பாடு என்னை பயமுருத்துகின்றது. என் வலிகள் அவளுக்குத் தெரிவதில்லை. என் உதவிகள் அவளுக்கு பயணம் முடியும் வரைதான், என் வலிகளும் அவள் பயணம் முடியும் வரைதான். &lt;br /&gt;&lt;br /&gt;அவளின் பயணம் நீண்டதாக இருக்க போவதில்லை, இருக்கக்கூடிய சாத்தியங்களும் இல்லை. ஆனால் அவள் பயணங்கள் சின்ன சின்னதாக தொடர்ந்து இருந்து கொண்டேயிருப்பது தான் என் கவலை, வலி. அவளின் குழப்பங்கள் எல்லா பயணங்களையும் தோல்வியுறச்செய்கின்றன, வெற்றி தோல்வியின் கணக்கீடு அவளின் ஒவ்வொரு பயணங்களிலும் மாறிக்கொண்டேவருகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;வெற்றி என்று சமாதனப்படுத்தப்படும் அவளுக்கு, ஏதோ ஒரு எல்லையில் வலி காத்திருக்கின்றது.  குறைந்த பச்ச வலி, அல்லது சரி பாதி வலி, அல்லது முக்கால் வலியைக்கூட தாங்கிக்கொள்ளும் அவளுக்கு எப்போதும் காத்திருப்பது 95% சதவீத வலிகளெனவே அவள் எல்லா பயணங்களிலும் தோல்வியுருகின்றாள். &lt;br /&gt;&lt;br /&gt;அவளின் நாட்குறிப்பை படிப்பதின் தாக்கம் எனக்கு இரு நாட்கள் இருக்கும். புத்திசாலித்தனத்தை அவள் வலிகளைக் கண்டெடுப்பதற்கே பயன்படுத்துவதாகத்தோன்றும். அவளின் நாட்குறிப்புகளில் இருக்கும் தொடர்ச்சியின்மை, கிருக்கல்கள், வலிகள், கவிதைகள் என எல்லாமே என் ஒரு பார்வையில் முடிவு பெற்றதாய் உணருகின்றேன். அவை என் பார்வைகளால் சமாதானமடையும், என் தொடுதல்களால் பூர்த்தியடையும்... &lt;br /&gt;&lt;br /&gt;இப்படித்தான் ஒரு சமாதானமான ஓரு நாளில், சந்தோசமான மனநிலையில் அவளின் நாட்குறிப்பை எழுத்தப்பட்டவற்றை படிக்கும் போது, அந்த நாள் துன்பமாய் முடிய, ஒரு துன்பமான நாளின் முடிவில் என்று தொடர்ந்து எழுதுகின்றேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/153842835912349353-4316205305178339118?l=malargall.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://malargall.blogspot.com/feeds/4316205305178339118/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=153842835912349353&amp;postID=4316205305178339118' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/153842835912349353/posts/default/4316205305178339118'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/153842835912349353/posts/default/4316205305178339118'/><link rel='alternate' type='text/html' href='http://malargall.blogspot.com/2008/01/blog-post_21.html' title='ஒரு துன்பமான நாளின் முடிவில்'/><author><name>மோகனா</name><uri>http://www.blogger.com/profile/10206294980960996941</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_9nysbCErfEE/SCc0lV224EI/AAAAAAAAENE/T09e-Q_vDbE/S220/DSCF0066.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-153842835912349353.post-5262978878841447682</id><published>2008-01-17T13:00:00.000-08:00</published><updated>2008-01-17T00:09:32.546-08:00</updated><title type='text'>பெண்கள், முரண்பாடுகள் : இது ஆண் கட்டமைத்த சமுதாயத்தின் தோல்வி!</title><content type='html'>பேராசை பிடித்த அமெரிக்க மருமகள்கள், என்ற  வசந்தம் ரவியின் கட்டுரையை படித்த பிறகு ஒரு ஈயக்கட்டுரை எழுத வேண்டுமென்று ஆரம்பித்துவிட்டேன். ரவி மனைவிகள், கணவன்மார்களை அவன் வீட்டிற்கு உதவ விடுவதில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார். பெண்கள் பேராசைப்பிடித்தவர்களாக இருக்கின்றார்கள் என்றும் கூறியிருந்தார். நானும் சட்டென யோசித்தேன், ஆம் நமக்கு அந்த அளவு வீட்டிற்கு (கணவன் மற்றும் என்) செய்ய மனம் வருவதில்லையோ? ஏன் அப்படி என்று. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பெண்ணிற்கு முரண்பாடுகளும், ஏற்றத்தாழ்வுகளும் அதிகம். ஒரு பெண் புகுந்த வீட்டிற்கு வரும் போது, பெற்றோரிடம் இருந்து கொண்டுவரத்தான் பழக்கியுள்ளார்கள். அதன் பின் அவளின் எல்லா சக்தியும், உழைப்பும், இன்ன பிறவும் அவளின் கணவனுக்காகவும் மற்றும் அவளின் குழந்தைக்காகவுமே செலவிடப்படுகின்றது. அவளின் பிறந்த வீட்டில் கூட அவளை முன்னிலைப்படுத்தி எடுக்கப்படும் பணம் சார்ந்த முடிவுகளும், பேச்சு வார்த்தைகளும் குறைவு தான். &lt;br /&gt;&lt;br /&gt;அதற்கான முக்கியக்காரணம் அவளால் பொருள் ஈட்ட முடியாதது தான், அது மாத்திரம் அல்ல அவள் பொருள் ஈட்டினால் கூட ஆண்களை முன்னிருத்தியே பழக்கப்பட்ட சமுதாயம் இது, சம்பாதித்தால் நீ புருசனுக்கு தரப்போகின்றாய் எங்களுக்கு எங்கே தரப் போகின்றாய் என்ற மனப்பாடும், ஆண் குழந்தை எனக்கு இதை செய்தான் அதை செய்தான் என்பதில் பெற்றோருக்குள்ள ஒரு கௌரவமும் தான் மிகப்பெரிய காரணம். &lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஒரு பெண்ணை, அவளின் மனப்பாட்டை அவளுக்கு நிறைய கொடுத்தும், அவளிடமிருந்து எதிர்பார்க்காமலுமே பழக்கிவிட்டார்கள். அவள் புகுந்த இடம் சென்றாலும் அந்த பழக்கம் வரத்தான் செய்யும் என்று நினைக்கின்றேன். சம்பாதிக்கும் எத்தனைப் பெண்களை திருமணத்திற்கு பின் பெற்றோர்கள் தன் வீட்டிற்கு பணம் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள்? நான் ஏதாவது இப்போது கூட வாங்கித்தருகின்றேன் என்றால் அம்மா வேண்டாம் என்கின்றார்கள் என்ன செய்ய? ஆனால் இந்த மனப்பாட்டை ஆணிடம் சென்ற பின் மாற்றிக்கொள்ளவேண்டுமென்பது முரண்பாடானாது, எதிர்பார்ப்புகள், மற்றும் தேவைகள் எல்லாமும் முரண்பாடாகின்றது இதுவும் ஒரு அறியாமைதான். இதுவும் ஒரு அறியாமைதான். &lt;br /&gt;&lt;br /&gt;மனைவி ஏன் கணவனின் வீட்டிற்கு அதிகம் செய்ய விடுவதில்லை, ஏன் பேராசைக்காரியாய் இருக்கின்றாள் என்றால் அதற்கு ஒரே காரணம் அவளின் அறியாமையாகத்தான் இருக்கும். பெண்ணின் அம்மாவே(அவளும் ஒரு ஆணின் அம்மாவாக இருந்தாலும்) பையன் வீட்டிற்கு செய்யவிடாதே என்று கூறுவதும் அப்படிப்பட்ட மனநிலையில் பெண்கள் இருப்பதும், இருக்க வைப்பதும் அறியாமை என்று கூறாமல் எப்படிக் கூறுவது? பெண்களின் அறியாமைதான் இங்கே பேரின்பம் என்று, வேலைக்கு செல்லாத, படிக்காத பெண்ணை தான் திருமணம் செய்வேன் என்று அடம் பிடிக்கும் ஆண்கள், அவளை எதிர்கொள்ள திறமையில்லாமல் துன்பப்படுவார்கள் என்று நினைக்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதை விட்டுவிட்டு, பெண் வீட்டிற்கும் தான் ஆண்(கணவன்) எதையும் செய்யவிடுவதில்லை என்பதும், இல்லை, இல்லை ஆண் தான் அவளை அடக்கப்பழக வேண்டும் என்பதும், ஆண் தான் பெண்ணை முன்னிருத்தி எதையும் பெற்றோருக்கு செய்வதில்லை என்பதும் தற்காலிகமான ஒரு சமாதான கருத்தாகத்தான் இருக்கும். என்னால் எந்த பெண்ணையும் சமாளிக்க முடியும் என்று நம்புபவர்கள் திருமணத்திற்கு பிறகு வீடிற்கு செய்வதைப்பற்றி யோசிக்கமுடியும் அவ்வளவு தான். &lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் கணிணி திறமை மற்றும் பொது அறிவு திறமை எல்லாம் அறியாமையான ஒரு பெண்ணின் முன் எம்மாத்திரம் என்று அப்படி ஒரு சூழ்நிலை வந்தாலேயொழிய புரியாது. இப்படி ஆரம்பம் முதலே ஆண் கட்டமைத்த இந்த சமுதாயம் பெண்களை அறியாமைக்கடலில் மூழ்க வைத்திருக்கும் வரை பெண்களால் வரும் சிற்சில பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். நீங்கள் சிறு வயதிலிருந்தே பெண்களுக்கு ஊட்டும் பழக்க வழக்கங்கள் மற்றும் கொடுக்கும் படிப்பினைகள் சார்ந்தது தான் அவை. &lt;br /&gt;&lt;br /&gt;மற்றபடி கருப்பான பெண்களுக்கு ஆண் கிடைப்பதில்லை, மென் துறை தவிர எவருக்கும் பெண் கிடைப்பதில்லை மற்றும் பெண்கள் புத்திசாலிகளாய் இல்லை என்றெல்லாம் கூறிக்கொண்டு திரியும் ஆண்களே, இது தொடக்கத்திலிருந்தே இருந்து வந்த கலாச்சாரத்தின் தாக்கம், ஆண் கட்டமைத்த இந்த சமுதாயத்தின் ஒவ்வொரு தோல்வி அவ்வளவு தான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/153842835912349353-5262978878841447682?l=malargall.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://malargall.blogspot.com/feeds/5262978878841447682/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=153842835912349353&amp;postID=5262978878841447682' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/153842835912349353/posts/default/5262978878841447682'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/153842835912349353/posts/default/5262978878841447682'/><link rel='alternate' type='text/html' href='http://malargall.blogspot.com/2008/01/blog-post_17.html' title='பெண்கள், முரண்பாடுகள் : இது ஆண் கட்டமைத்த சமுதாயத்தின் தோல்வி!'/><author><name>மோகனா</name><uri>http://www.blogger.com/profile/10206294980960996941</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_9nysbCErfEE/SCc0lV224EI/AAAAAAAAENE/T09e-Q_vDbE/S220/DSCF0066.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-153842835912349353.post-7444727439139808607</id><published>2008-01-12T18:00:00.000-08:00</published><updated>2008-01-12T04:30:36.423-08:00</updated><title type='text'>PIT ஜனவரி மாத புகைப்படப் போட்டிக்கு</title><content type='html'>அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த மாதப் போட்டிக்காக என் படங்கள் அனைத்துமே அறிவித்த பிறகு எடுக்கப்பட்டவை.&lt;br /&gt;&lt;br /&gt;போட்டி படம் #1 : &lt;br /&gt;&lt;br /&gt;இரவு விளக்கும், கடிகாரமும். புகைப்படம் எடுத்த நேரத்தைப்பாருங்கள், என் புகைப்பட ஆர்வம் தெரியவரும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://picasaweb.google.com/agnichaaral/XaKyCH/photo#5154540996278446066"&gt;&lt;img src="http://lh3.google.com/agnichaaral/R4ibueddZ_I/AAAAAAAACpo/4AM4PrWvZ2s/s400/Picture%20019.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;போட்டி படம் #2 : &lt;br /&gt;&lt;br /&gt;அந்த பர்னரில் எரியும் நெருப்பிற்கு தனி அழகு, நான் நினைத்த மாதிரி வரவில்லை.. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://picasaweb.google.com/agnichaaral/XaKyCH/photo#5154540433637730258"&gt;&lt;img src="http://lh4.google.com/agnichaaral/R4ibNuddZ9I/AAAAAAAACpc/ARkWo9NfrXs/s400/DSCF0760.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மற்றவை...&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாதிரி நான் வைத்திருப்பதைப் பார்த்தே நிரைய பேர் வளையல் வாங்க ஆசைப்படுவார்கள். :)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://picasaweb.google.com/agnichaaral/XaKyCH/photo#5154235795902392066"&gt;&lt;img src="http://lh6.google.com/agnichaaral/R4eGJeddZwI/AAAAAAAACnA/UDLjMVLt4Q0/s400/DSCF0757.JPG" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://picasaweb.google.com/agnichaaral/XaKyCH/photo#5154560645753825314"&gt;&lt;img src="http://lh6.google.com/agnichaaral/R4itmOddaCI/AAAAAAAACrA/nnf7PZugqwI/s400/DSCF0770.JPG" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://picasaweb.google.com/agnichaaral/XaKyCH/photo#5154560727358203954"&gt;&lt;img src="http://lh5.google.com/agnichaaral/R4itq-ddaDI/AAAAAAAACrI/OHEqETyIcnI/s400/DSCF0772.JPG" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://picasaweb.google.com/agnichaaral/XaKyCH/photo#5154560564149446674"&gt;&lt;img src="http://lh3.google.com/agnichaaral/R4itheddaBI/AAAAAAAACq4/ErimZc5kqMs/s400/DSCF0769.JPG" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/153842835912349353-7444727439139808607?l=malargall.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://malargall.blogspot.com/feeds/7444727439139808607/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=153842835912349353&amp;postID=7444727439139808607' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/153842835912349353/posts/default/7444727439139808607'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/153842835912349353/posts/default/7444727439139808607'/><link rel='alternate' type='text/html' href='http://malargall.blogspot.com/2008/01/pit.html' title='PIT ஜனவரி மாத புகைப்படப் போட்டிக்கு'/><author><name>மோகனா</name><uri>http://www.blogger.com/profile/10206294980960996941</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_9nysbCErfEE/SCc0lV224EI/AAAAAAAAENE/T09e-Q_vDbE/S220/DSCF0066.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-153842835912349353.post-1411217996414319935</id><published>2008-01-11T13:06:00.000-08:00</published><updated>2008-01-10T23:39:35.983-08:00</updated><title type='text'>தற்கொலைக்கு முயலும் என் வார்த்தைகள்...</title><content type='html'>ஒரு இனிமையான மாலை நேரத்தில், மாடிப்படியில் அமர்ந்து என் நாட்குறிப்பை திறந்த போது, நாட்குறிப்பின் பக்கத்தை குறிக்க நான் பயன்படுத்தும் கயிறானது வார்த்தைகள் தற்கொலைக்கு முயன்றதைத் தெரிவித்தது. அந்த கயிறு குறித்த பக்கத்திற்கு சென்று பார்த்தேன், அனைத்து வார்த்தைகளும் தன் நடுவில், சிகப்பு நிற கோடுகளைக் கிழித்துக்கொண்டு பார்க்கவே பயங்கரமாய் காட்சியளித்தது. &lt;br /&gt;&lt;br /&gt;உடனே நான் பதறிப்போய், "எழுத்துக்களே நான் பிழையுடன் எழுதுகின்றேன் என்று தற்கொலைக்கு முயலாதீர்கள் நான் திருத்திக்கொள்கின்றேன்" என்றேன் வருத்தத்துடன். அவை என்னை முறைத்துவிட்டு "உன் பிழைகள், நீ எனக்கு கொடுக்கும் அழகான வடிவத்தில் மறைந்து போகின்றதென எத்தனை பேர் கூறினாலும் நம்ப மாட்டாயா" என்று கூறிவிட்டு இன்னும் இன்னும் அடித்துக்கொண்டன. &lt;br /&gt;&lt;br /&gt;வேறு என்ன தவறு செய்தேன் என்றேன் குழப்பமாக. "என் இருப்பின் அர்த்தம் விளங்கவில்லையெனவே அப்படிச்செய்கின்றேன்" என்ற வார்த்தைகளின் மனநிலையை என்னால் இனம் கான முடியவில்லை. "பைத்தியக்கார வார்த்தைகளே உனை படிப்பவருக்கே அது புரியும் உனக்கெப்படி புரியும்" என்றேன் எகத்தாளமாக. &lt;br /&gt;&lt;br /&gt;"நீ தான் படிக்கின்றாயே என்ன விளங்குகின்றது உனக்கு, நீ மாத்திரம் படிக்க எழுதுகின்ற வார்த்தைகள் போலில்லாமல் எழுதிவிட்டு, பின் அவற்றின் அர்த்தங்களை உன் மௌனத்தால் சிதைக்கின்றாயே. அது எனை நீ கொல்வது போலில்லையா? உனக்கேன் பாவம் என்று தான் நானே தற்கொலைக்கு முயல்கின்றேன்" என்றது அகங்காரத்துடன். &lt;br /&gt;&lt;br /&gt;"வார்த்தைகளே, கூறப்படும் வார்த்தைகளுக்குக் கூட அர்த்தம் இல்லாமல் போகலாம், உனக்கெப்படி உணர்த்துவேன்? உனை யோசித்தேன், வடுவமாக்கினேன் என்பதால் மாத்திரமே என்னால் உனை வெளிக்கொனற இயலாது,  கூறப்படும் வார்த்தைகள் எப்போதும் அபாயகரமானவை, இங்குள்ள உனைப்போன்ற வார்த்தைகள் கவித்துவமானவை, உணரமுடியவில்லையா உனக்கு?" என்றேன் சமாதானப்படுத்தும் நோக்கத்துடன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவை அமைதியாய் நின்றதைப் பார்க்க பரிதாபமாய் இருந்தது, சரி சரி உன்னில் சிலவற்றை வெளிக்கொனறுகின்றேன், ஆனால் தற்கொலைக்கு முயலுவதில்லை என்று சமாதானம் ஆகுங்கள்" என்றேன். அவையும் ஒப்புக்கொண்டு வருந்த, நான் மிகப்பாடுபட்டு அவற்றிற்கு புத்துயிர் தந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;இவற்றில் எவற்றையாவது வெளிக்கொனற வேண்டி, அந்த வார்த்தைகளின் சொந்தக்காரரிடமான உரையாடல், வார்த்தைப்பறிமாற்றங்களில் அவற்றை உபயோகித்தேன். அந்த வார்த்தைகளின் தாக்கம், அதன் அர்த்தங்களின் தாக்கம் அந்த உரையாடல்களில் பெரிய சுழியாக இருக்க, எப்படி உணர்த்த இந்த வார்த்தைகளுக்கு "வார்த்தைப்பறிமாற்றங்கள் வாழ்வை பணயம் வைத்து பரிமாறப்படுகின்றன" என்பதை, வார்த்தைகளைக் கையாள்வதின் பயம் என்னில் பலவகைகளில் வெளிவர அவை எல்லாவற்றையும் தலைகீழாக்கின. &lt;br /&gt;&lt;br /&gt;உணரப்படாத வருத்தம் என் மனதில் முள்ளாய் குத்த, வார்தைப்பறிமாற்றங்கள் தவறான பாதையில் சென்றன. அர்த்தங்கள் உணரப்படாத வார்தைகளில் அர்த்தங்கள் எப்போதும் வலியை மாத்திரமே உணர்த்துவதை தாங்கிக்கொள்ள முடியாமல், நாட்குறிப்பை எடுத்து  அர்த்தங்களை, அனர்த்தங்களாய் மாற்றினேன். சிகப்பு நிற எழுத்துக்களால் என் உணர்வுகளைப் பதிந்தேன். தற்கொலைக்கு முயலப்போகும் என் வார்த்தைகள் இந்த எழுத்துகளைப் பயன்படுத்திக் கொள்ளப்போவதை எப்படிக் காப்பாற்றுவேன் என்று யோசித்துக்கொண்டே, நாட்குறிப்பை மூடினேன். என் உறவு மூடப்படாமல் தடுப்பதற்காக.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/153842835912349353-1411217996414319935?l=malargall.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://malargall.blogspot.com/feeds/1411217996414319935/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=153842835912349353&amp;postID=1411217996414319935' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/153842835912349353/posts/default/1411217996414319935'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/153842835912349353/posts/default/1411217996414319935'/><link rel='alternate' type='text/html' href='http://malargall.blogspot.com/2008/01/blog-post_4046.html' title='தற்கொலைக்கு முயலும் என் வார்த்தைகள்...'/><author><name>மோகனா</name><uri>http://www.blogger.com/profile/10206294980960996941</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_9nysbCErfEE/SCc0lV224EI/AAAAAAAAENE/T09e-Q_vDbE/S220/DSCF0066.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-153842835912349353.post-4550116594367723209</id><published>2007-12-28T13:53:00.000-08:00</published><updated>2007-12-28T00:25:00.964-08:00</updated><title type='text'>Taare zameen par - குழந்தைகளின் கனவுலகம், கல்வி மாற்றங்களும்...</title><content type='html'>என் தாய், தந்தை, தாத்தா மற்றும் என் சித்தி என குடும்பத்தில் பலர் ஆசிரியர்களாக இருந்துள்ளதால் குழந்தைகளுடனான என் நெருக்கம் சற்று அதிகம். விடுதியில் தங்கும் குழந்தைகள் என்ற உடன், என் பள்ளியின் உள்ள மடத்தில் தங்கி படிக்கும் சிறுவர்கள் நியாபகம் வந்தது, என் தாத்தா அவர்களுக்கு சலவை செய்த துணிகளை வினியோகிக்கும் பொருப்பிலும் இருந்தார். காவேரிக்கரையோரத்தில் உள்ள அந்த மடத்தில் கைக்குத்தல் அரிசியும், 6 மணி பூஜையும்(அனைத்து மாணவர்களுக்கும்), அவர்களின் கதர் காவி உடையும் நமக்கு என்னவோ செய்யும். ஆண்டுவிழா வெகு விமர்சியாக நடக்கும் அது முடிந்ததும் பெற்றோர்கள் பிள்ளைகளை விடுமுறைக்கு அழைத்துச்செல்வார்கள் காலையில் அவர்கள் பெற்றோர்கள் வந்திராவிட்டால் அவர்கள் வாசலிலேயே காத்திருப்பது மனதை அப்படி வேதனிக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;நான், தம்பி மற்றும் பெற்றோர்கள் அங்கு சென்று தாத்தா அறையில் தங்குவது வழக்கம். அந்த மாணவர்கள் எங்களுடன் பழகவே மாட்டார்கள், வெகு சிலரே மிகவும் நட்புடன் பழகுவார்கள். அந்த விழாமுடிந்து திரும்பி வரும் அனைத்து முறையும் நான் அழுதுள்ளேன் என் பெற்றோர்கள் அதை கவனிக்க மட்டார்கள் ஏன் அழுவேன் என்று எப்போதும் எனக்கு தெரியாது, அதுதான் குழந்தை உள்ளம், எந்த ஒரு காரணம், லாஜிக் மற்றும் காரியமுமின்றி மனம் எதோ ஒன்றை நாடும். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த படம் ஆரம்பிக்கும் போதே தண்ணியில் இருக்கும் தலைபிரட்டையையோ, மீன் குட்டியையோ தர்ஷில் பிடித்து பாட்டிலில் போட்ட போது, என் வீட்டினருகில் சாக்கடையிலிருந்து தலைபிரட்டை எடுத்துவந்து வீட்டு பின்னால் வைத்திருந்த என் தம்பி தான் நியாபகத்திற்கு வந்தான், அதே போல் தம்பியும் 9 என்பதை தலைகீழாய் எழுதி மதிப்பெண் குறைவாய் வாங்கியதாய் அம்மா சொல்வது நியாபகம் வந்தது. அப்படி தர்ஷில் மாற்றி மாற்றி அல்லது தலைகீழாய் எழுதுவது அழகான அமைப்பு என்றாலும்... &lt;br /&gt;&lt;br /&gt;அவற்றையெல்லாம் ஆசிரியர்களோ, அம்மாவோ கவனிக்காமல் இருக்க வாய்ப்பே இல்லை, என் அம்மா பறிட்சை தாள்களைத் திருத்தும் போது நான் பார்த்துள்ளேன் நிறைய மாணவர்கள் அப்படி எழுதியிருப்பார்கள். அம்மா கூட கொஞ்சமாக நன்றாக படிப்பவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் இருக்கும், ஆனால் அம்மாவிற்கு யார் எப்படியென்று நன்றாகத் தெரியும். ஆசிரியர்களோ அல்லது அப்படி படித்த அம்மாவாக வரும் தர்ஷில் அம்மாவோ இதைக்கவனிக்காமலா இருந்திருப்பாரா என்பது மாத்திரம் தான் குறை. &lt;br /&gt;&lt;br /&gt;இருந்தாலும் ஆசிரியர்கள் மற்றும் அம்மாக்கள் மாணவர்கள் நன்றாகப்படிக்க வேண்டுமென்று எந்த போட்டியிலும் மற்றும் கலை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவிட்டாமல் செய்வதை நிறைய பார்த்துள்ளேன். ஆனால் என் பள்ளியில் விளையாட்டு, ஓவியம், பாடல் மற்றும் ஆடல் என்று அனைவரையும் ஊக்குவிப்பார்கள். தர்ஷில் போன்றவர்கள் நிறைய உண்டு அவர்கள் ஆசிரியர்களால் வெருக்கப்படுவார்கள், அவர்களைப் போன்றவர்களை என் பள்ளியில் போட்டியில் கலந்து கொள்ளவே அனுப்ப மாட்டார்கள்.. பள்ளி என்பது மிக முக்கியமான ஒன்று குழந்தைகளிடம் அங்கு நடப்பவற்றை வீட்டில் சொல்லப் பழக்க வேண்டும், பள்ளியைப்பற்றி குழந்தைகள் கூறப்பயப்பட்டால் நம் குழந்தைக்கு நாம் நல்ல சூழலை உருவாக்கவில்லை என்று தான் அர்த்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படம் ஒரு பெரிய உண்மை மற்றும் எதார்த்தத்தை சிறியதாக கூறியுள்ளது, நாம் பிள்ளைகளை அதிகமாக கண்டித்தால் அவர்கள் குறுக்கு வழியை நாடுவார்கள்., நான் பலமுறை இதை சந்தித்துள்ளேன், எந்த ஒரு பிரச்சனையையும் சந்திக்கும் துணிவை வளர்க்காமல், சந்திக்க இயலாத சூழலையே நான் குழந்தைக்கு கற்றுக்கொடுப்பேன் என்பது மிகப்பெரிய மூடத்தனம். "நீ எந்த மதிப்பெண் வாங்கினாலும் பரவாயில்லை, எங்கு தவறு என்று பார்க்கலாம் 0 எடுத்தால் கூட நீ அதற்கான காரணம் சொல் ஏற்புடையதோ இல்லையோ என்னிடம் சொல்" என்று கூறிப்பார்க்க வேண்டுமோ என்று தோன்றுகின்றது. என் அப்பா மதிப்பெண்ணையே பார்க்காம் கையெழுத்து போடுவார், நம் குழந்தைக்கு எவ்வளவு தெரியும் என்பது மதிப்பெண் மூலமாகத்தான் அறியமுடியுமென்றால் நாம் என்ன தான் குழந்தைகளைப் பார்த்துக்கொள்கின்றோம்? &lt;br /&gt;&lt;br /&gt;கடவுள் கோட்பாடுகளைப்போல் ஒழுக்கத்தை திணிக்கக்கூடாது, "பாரம்மா/பாரப்பா கை கழுவவில்லையென்றால் எத்தனை கிருமி உள்ளது" என்று டெட்டால் விளம்பரம் போடும் போது காட்டலாம். சீருடைகளின் பொருளை கூறி அவற்றை கழற்ற சொல்லலாம். இப்படி கவனமாக கையாளப்பட வேண்டிய குழந்தைகளை அலட்சியமாக கையாளைக்கூடாது என்று பல முறை யோசிப்பேன். &lt;br /&gt;&lt;br /&gt;எல்லா மாணவர்களும் முக்கியமானவர்கள் என்பது பெரும்பாலும் அனைத்து ஆசிரியர்களாலும் உணரப்படுவதில்லை, என் அம்மாவிடம் கேட்டால் அவர்களை அடித்து தான் வழிக்கு கொண்டுவர முடியும் என்பார்கள், "எல்லோருக்கும் ஒரே பாடம் தானே நடத்துகின்றேன், ஒரு போல் தானே சொல்லிக்கொடுக்கின்றேன் உனக்கு ஏன் ஏறவில்லை" இந்த டயலாக்கை பரவலாகக் கேட்டலாம், ஆனால் என் அம்மா சொல்வது போல் சில குழந்தைகள் கேட்க வெக்கப்படும், கும்பலில் கேட்க வெக்கப்படும் அல்லது பயப்படும்... இப்படி பல வகை, அதனால் அருகில் சென்று ஒவ்வொருவரிடமும் சென்று சொல்லிக்கொடுக்க வேண்டும் என்று கூறுவார்கள். அது போல் ஆசிரியர் கேட்டும் கேள்விக்கு பதில் தெரிந்திருந்தாலும் சொல்லாத தர்ஷில் அழகான அமைப்பு. &lt;br /&gt;&lt;br /&gt;அமீர்கானின் வருகை கொஞ்சம் ஓவராக சித்தரிக்கப்பட்டாலும், அப்படியும் சில வித்யாசமான ஆசிரியர்கள் இருப்பார்கள் தான், எங்கள் பாய்லர் வளாகத்தில் "அறிவாலயம்" என்று மனநலம் குன்றியவர்களுக்கான பள்ளி மற்றும் காப்பகம் உண்டு, அவர்களை வரிசையாக நிற்க வைத்து கோயில் கூட்டிசெல்வார்கள், அவர்கள் சந்தோசமாக தான் இருப்பார்கள்., அம்மா, அப்பாக்கள் சோகமாக இருப்பார்கள், அவற்றையெல்லாம் அருமையாக படமாக்கியுள்ளார் மற்றும் அமீர்கானின் பாத்திரப்படைப்பு அருமையானது, ஏதோ பொழுது போக்கிறாக, ஹீரோயிஸத்திற்காக மாத்திரம் இருப்பது போல் இல்லாமல் கண்ணில் ஒரு சோகத்துடன், சிறு வருத்தத்துடன் அமைதியாக அவர் இருப்பது அருமை, கடைசியில் அந்த ஓவியம் அவரின் நடிப்பு அப்பா, மிகவும் அருமை. கடைசியில் பரிசு வாங்க அவன் மேடைக்கு வர வெட்கப்பட்டது அழகான ஒரு அமைப்பு. &lt;br /&gt;&lt;br /&gt;வெற்றி பெற வேண்டுமென்ற திணிப்பு எனக்கு நன்றாக தெரியும், நான் விளையாட்டில் இருந்த போது மிகவும் "மன அழுதத்திற்கு" உள்ளாகியுள்ளேன். ஆனால் எனக்கு அவை தேவையில்லாத ஒன்றாகவே படும், வெற்றி பெருவதில் உள்ள இன்பம், அல்லது கலந்து கொள்வதில் உள்ள இன்பம் "ஒட்டுமொத்த" சாம்பியன் பட்டம் மேடையில் ஏறி பெற்றாலும் கிடைக்காது என்று எப்போதும், ஏன் இப்போதும் எனக்கு தோன்றும். இது என் உலகம், ஆனால் என் மீதான எதிர்பார்ப்பு எரிச்சலைக்கொடுக்கும், MCA அல்லது BSc சேர்ந்த பொழுதுகளில் முதல் 2, 3 செமெஸ்டர்கள் இன்பமாகப் போனது நல்ல மதிப்பெண், அதன் பின் என் மீதான் எதிர்பார்ப்பு சற்று என் ஆர்வத்தை குறைத்ததாக நினைத்தது, நினைப்பது ஏன் என்று எனக்கு புரிவதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஒத்துழைப்பது அல்லது சப்போர்ட் செய்வது என்பது வேரு திணிப்பது மற்றும் எதிர்பார்ப்பு என்பது வேரு என்று தான் எனக்குப்படும். ஒருவேளை நம்மால் முடியாதோ என்பதும், பயமும் என்னை நல்ல அளவில் போட்டியில் கலந்து கொள்ளவே அனுமதிக்காது. "Best Shots ever made while no one is near" என்பது போல், எனக்கே எனக்கான வாழ்க்கையை என்னால் அமைத்துக்கொள்ளமுடியும் எனக்குத் தேவை நல்ல வழிகாட்டி தான். எனக்கு நேராகக்கிடைத்த அறிவுரைகளை பின்பற்றுவதை விட, எனக்கு மறைமுகமாக விளக்கப்பட்ட அறிவுரைகளை தான் நான் நன்றாகப் பின்பற்றுவேன், ஏனென்றால் அவை நானே யோசித்து நல்லவை என்று முடிவு செய்து பின்பற்றப்போவதாக முடிவெடுத்த ஒன்றாவதால். அதுபோல் தர்ஷில்க்கு இருக்கும் விளையாட்டுத்தனம் சாதாரணமான ஒன்று அவற்றைக்கட்டுப்படுத்த விடுதியை நாடியது மற்றும் அதன் துன்பம் அழகான அமைப்பு. &lt;br /&gt;&lt;br /&gt;பெற்றோர்கள் அனைவரும் கண்டிப்பாகப்பார்க்க வேண்டிய ஒரு படம், முக்கியமாக ஆசிரியர்கள். தண்டனை கொடுப்பது எவ்வளவு மன பாதிப்பை உண்டாக்கும் என்பதை அவர்கள் அறிவதில்லை. நானும் என் தம்பியும் அதிக மதிப்பெண்ணெல்லாம் பெறவில்லை, நல்ல கல்லூரியும் இல்லை ஆனால் இன்று கணிணித்துறையில் நிறைய சம்பளத்தில்.. காரணம் கல்வி என்பது ஒரு அடிப்படை அதுவே உயிர் அல்ல, ஆனால் கல்வியில் முக்கியத்துவத்தை, அதன் மேன்மையை நாம் கதைகள் மூலமோ, புத்தகங்கள் மூலமோ குழந்தைகளுக்கு உணர்த்தலாம், குழந்தைகள் தன் மனதளவில் அதை உணர வேண்டும் அம்மாக்காக, அப்பாக்காக, மதிப்பெண்ணிற்காக, வேலைக்காக என்று எதற்காகவும் இல்லாமல் தன் சுயத்திற்காக என்று உணர்த்தலாம். இப்படி செய் என்று சொல்லாமல் நம் சின்னவயதில் பரிசுகளை வாங்கியதாக சொன்னால் பெரும்பாலான குழந்தைகள் அப்பாவைப்பொல் இருக்க வேண்டும் என்று விரும்புவதால்(ஆரம்பத்தில்) ஒரளவு சமாளிக்கால் என்று நினைக்கின்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;இப்போது கல்வியின் வடிவமும் அணுகு முறையும் முற்றிலுமாக தமிழகத்தில் மாற்றப்பட்டுள்ளது, 10ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி, 5ம் வகுப்பு வரை விளையாட்டாய் கற்றல் என்று பல மாற்றங்கள் இப்போது, அனைத்து ஆசிரியர்களுக்கும் எப்படி குழந்தைகளைக் கவனிக்க வேண்டுமென்று மாதத்தில் 2 முறை பயிற்சி வகுப்பு நடக்கின்றது. ஆனால் அந்த கல்வியை கற்பிக்க நிறைய வேலை செய்ய வேண்டுமென்று ஆசிரியர் சோம்பல் படுவதாய் அம்மா கூறினார், நல்ல தரமான ஆசிரியர்களும், பள்ளிகளும் இருக்கு போது இவை பெரிய விசயம் இல்லை. ஆனால் அது மீண்டும் அரசியல், அது இது என்று நீள்வதால் பெரிய முற்றுப்புள்ளி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/153842835912349353-4550116594367723209?l=malargall.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://malargall.blogspot.com/feeds/4550116594367723209/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=153842835912349353&amp;postID=4550116594367723209' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/153842835912349353/posts/default/4550116594367723209'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/153842835912349353/posts/default/4550116594367723209'/><link rel='alternate' type='text/html' href='http://malargall.blogspot.com/2007/12/taare-zameen-par.html' title='Taare zameen par - குழந்தைகளின் கனவுலகம், கல்வி மாற்றங்களும்...'/><author><name>மோகனா</name><uri>http://www.blogger.com/profile/10206294980960996941</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_9nysbCErfEE/SCc0lV224EI/AAAAAAAAENE/T09e-Q_vDbE/S220/DSCF0066.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-153842835912349353.post-374672337128258335</id><published>2007-12-26T15:03:00.000-08:00</published><updated>2007-12-26T02:23:37.910-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புலம்பல்'/><title type='text'>மௌனங்கள் எப்போதும் வலிப்பதில்லை.</title><content type='html'>நீயில்லா இந்த உலகத்தை, என் உணர்வுகள் ஏன் இப்படி மிகப்பெரிய வெறுமையாக மொழிபெயர்க்கின்றது? என் மொழிகள் உனக்கு மாத்திரமே அறியப்படுவதைப்போல் என் வார்த்தைகளில் ஏன் இந்த மௌனங்கள், நான் பேசிக்கொண்டே இருப்பது போலுள்ளது ஆனால் யாராலும் அறியப்படவில்லை, உனக்கு என் மொழி புரிகின்றதா அல்லது உனக்கு புரிகின்றது என்ற என் எண்ணமே என் மௌனத்தின் அர்த்தங்களா? இப்போது தான் அந்த ஒரு கோணத்தில் யோசிக்கின்றேன், நீயில்லா கணங்கள் என் கோணங்களை வேறுபடுத்துகின்றது, கோணலாகப்போகும் என் எண்ணங்களால் எனக்குத்தானே இழப்பு அதனால் தான் உன் அருகாமையை வேண்டுகின்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;மெல்ல யோசித்தால் என் மொழியின் கடுமை உன் கவனத்தை ஈர்க்க மறுக்கின்றதோ என்றும் தோன்றுகின்றது. என்ன செய்வது அடர்த்தி மற்றும் கடுமை மாத்திரமே முழுவதுமாக என் வார்த்தைகளின் பொருளாகிப்போனதால், மௌனம் மாத்திரமே நம் அன்பிற்கு போதுமென்ற உன் முடிவு என்னை எப்பொழுதும் வேதணிக்கின்றது, நான் என் பேச்சின் விசிறியாகிப்போயிருப்பதால். &lt;br /&gt;&lt;br /&gt;இவற்றையெல்லாம், இப்படியெல்லாம் இந்த நேரங்களிலெல்லாம் பேசலாம் என்ற என் கனவுகள் என்னை தூங்க விடுவதே இல்லை, உன்னருகில் இருக்கும் போதெல்லாம் அந்த கனவுகளை மாத்திரமே நினைத்துக்கொள்கின்றேன். உன் பற்றுதல்கள் இளகுகின்ற நேரங்களில் என் மௌனம் சத்தமாக என் மனதில் கதறுகின்றது, உனக்கு அவை கேட்டால் பதறிவிடுவாய், பின் மெதுவாக பைத்தியமென்பாய். நான் சட்டென பைத்தியம் என உணர்ந்து, பின் மெதுவாக பதறுவேன். &lt;br /&gt;&lt;br /&gt;உன் வார்த்தைகள், என்னை தாக்குவதற்காக மாத்திரம் கையாளப்பட்ட பொழுதுகளில் பூங்காக்களில் அமர்ந்து யோசித்துள்ளேன்.சவமாகக்கிடக்கும் கைப்பேசியை பார்க்கவே பயமாக இருக்கும் அதன் ஒளி, ஒலி அற்ற ஒரு மயான அமைதி என்னை இந்த உலகத்திலிருந்து தற்காலிகமாக விடுவித்திருப்பதைப்போல் இருக்கும். அவ்வப்போது வரும் சேவை அழைப்புகள் என்னை மேலும் பயுமுறுத்தும், அவை கூட யாருக்காவது என் எண்ணைக் கொடுக்க வலியுருத்துகின்றதோ என்று மனம் குழப்பத்தில் குதூகலிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;மிகவும் எச்சரிக்கையாக கையாளப்படும் வார்த்தைகளில் கைப்பேசியில் குறிப்புகளை அனுப்புவேன். அவை அதிர்ந்து எனக்கு தரும் செய்திகளை, அதிராமல் மனதில் குறிப்பெடுப்பேன், பேச அழைக்கும் பொழுதுகளில் பெரும்பாலும் நான் மௌனமாகவே இருப்பதின் அர்த்தம் எனக்கு விளங்குவதில்லை, ஆனால் அவை எனக்கு வலிக்காததால் அதுவே உகந்தது என்று முடிவு செய்துவிட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலும் மௌனமாக, தூரத்திலிருந்து உனை ரசிப்பதை பழகிக்கொண்டேன் வார்த்தைகள் உணர்த்தும் வலியை மௌனங்கள் உணர்த்துவதில்லை என்று கணக்கு போட்டுவிட்டேன். என் மௌனம் பழகிய உனக்கு இப்போதெல்லாம் என் வார்த்தைகள் பிடிப்பதில்லை., என் மௌனத்திலான இன்பங்களை வேறு இடங்களில் நீ வார்த்தகளாக பரிமாறுகின்றாய். நான் மௌனமாக இன்பங்களைப் பரிமாறுகின்றேன், நீ நான் பரிமாறுவதே இன்பமென நினைக்க வைக்க, நான் மௌனங்களை விடாப்பிடியாக பிடித்துக்கொண்டேன், அவை எப்போதும் வலிப்பதில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/153842835912349353-374672337128258335?l=malargall.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://malargall.blogspot.com/feeds/374672337128258335/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=153842835912349353&amp;postID=374672337128258335' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/153842835912349353/posts/default/374672337128258335'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/153842835912349353/posts/default/374672337128258335'/><link rel='alternate' type='text/html' href='http://malargall.blogspot.com/2007/12/blog-post_26.html' title='மௌனங்கள் எப்போதும் வலிப்பதில்லை.'/><author><name>மோகனா</name><uri>http://www.blogger.com/profile/10206294980960996941</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_9nysbCErfEE/SCc0lV224EI/AAAAAAAAENE/T09e-Q_vDbE/S220/DSCF0066.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-153842835912349353.post-2969046645816498891</id><published>2007-12-17T11:02:00.000-08:00</published><updated>2007-12-16T21:35:27.500-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பினாவானா'/><title type='text'>தேவைகள் நிரந்தரமாக்கப்படுகின்றன...</title><content type='html'>தன்னந்தனி வழியில் என்னுடன் நானே பேசிக்கொண்டு சென்று கொண்டிருந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;"ஏனிந்த வலி" என்கிருந்தோ ஒரு குரல். &lt;br /&gt;&lt;br /&gt;"அது வலியில்லை, வழி என்றிருக்க வேண்டும்" என்றேன் சத்தமாக.&lt;br /&gt;&lt;br /&gt;"உன் பாதங்களின் வழியை உணர்த்தவில்லை, உன் மனதின் வலியை உணர்த்தினேன்" என்றது அசரீதி.&lt;br /&gt;&lt;br /&gt;"உன்னிடம் வலிக்கின்றது என்று முறையிட்டேனா" என்றேன் கடுப்புடன்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு அந்த குரல் ஒலிக்கவில்லை, அப்பாடா நாமே பேசிக்கொள்வதின் சுகம் வேரு ஒருவருடன் பேசுவதில் கிடைப்பதில்லை என்று எண்ணிக்கொண்டே பயணத்தை தொடர்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வலியில் தேர்ந்தெடுத்த பயணம், இன்பமாக இருந்தாலும் என் இன்பத்தை என்னாலேயே சில சமயம் நியாயப்படுத்திக்கொள்ள இயலாத போது, மற்றவர்களிடம் எப்படி நியாயப்படுத்துவது? ஆனாலும் நான் இன்பமாகத் தான் இருக்கின்றேன். ஆம்...&lt;br /&gt;&lt;br /&gt;                             ******************&lt;br /&gt;&lt;br /&gt;எதிலும் அடங்காத அர்த்தங்களும், யாதார்த்தங்களின் கைகளில் சிக்கித்தவிக்கும் என் இன்பங்களும், இரவுகளில் போர்வைத்திரையில் கனவாக காட்சியிடப்பட்டு நினைவுகளை சூனியமாக்குகின்றன. வார்த்தைப்பறிமாற்றங்கள் வாழ்வை பணயம் வைத்து பரிமாறப்படுகின்றன, வார்த்தைகளைக் கையாள்வதின் பயம் என் கனவுத்திரைகளில், பூத எழுத்துக்களாக மாறி பின் பரிணாமமடைந்து என் தோட்டத்து பூச்செடிகளில் பச்சை நிற பூச்சியாகி கடித்து வைத்திருந்தன. ஒட்டடைப்போன்ற அதன் எச்சில் நூல்கள் என் கழுத்தை நெறிப்பதாய் வலித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;மொட்டுக்கள், இழந்த இலைகளுக்காக கண்ணீர் சிந்தியிருந்தது என்னை வேதனித்தது, கனவென நினைத்து விடமுடியாமல், எழுந்த மாத்திரத்தில் தோட்டம் செல்ல நினைத்து இழுத்து போர்த்திக்கொள்ள எத்தனித்த மாத்திரத்தில் மனம் உணர்ந்தது தன் வீட்டில் தோட்டம் இல்லாததை, அந்த நிமிடம் எதோ ஒன்று என்னிடமிருந்து விலகியது, கனவு விடுபட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;தோட்டம் ஒன்றை அமைத்துவிட வேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டு, எங்கோ பார்த்திருந்த செடிகள் விற்கும் தோட்டத்தை நினைத்துக்கொண்டேன், அதை கடக்கும் போதெல்லாம் உள்ளே செல்ல வேண்டுமென்ற உந்துதல் மாத்திரமே எதிர்படுகின்றது, கால்கள் தானாக கடந்து செல்கின்றன., இதையெல்லாம் மீறி அடுத்த நாள் போயே ஆகவேண்டுமென்ற என் தீர்மானங்கள் பெரும்பாலும் மறக்கப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;என் கைகள் தழுவும் மலர்கள், அதன் மென்மை, வாசம் இவற்றினால் உந்தப்பட்டு தோட்டம் போட பலமுறை எத்தனிப்பேன், நிறைய விதைகள், செடிகள் வாங்கி வந்துள்ளேன் விதைத்துள்ளேன், இரவுகளில் அவை தனக்குள் பேசிக்கொள்ளும் சத்தங்கள் கேட்டு வெளியே வந்து, அவற்றுடன் இப்படி கத்தலாமா என்று முறையிடுவேன். அவைகளோ தன்னை இப்படி விதைக்கலாமா என்று எதிர்த்து முறையிடும், என் மண்ணை முட்டி தன்னால் வெளிவர முடியவில்லை என்று விதைகளும், உன் சூழலில் என்னால் பசுமையாக இருக்கமுடியவில்லை என்று செடிகளும் மாறி, மாறி முறையிட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன செய்வது தோட்டமே என்று சரணடைந்த போது தான் எனக்கு இந்த வழி(லி)களை அவை பழகிக்கொடுத்தன, அவை சரியான ஒரு முடிவாக இருந்ததால் நானும் ஏற்றுக்கொண்டேன் அதன் படி,&lt;br /&gt;&lt;br /&gt;1. அவை எதோ ஒரு வீட்டில், வளரத்தகுந்த ஒரு சூழலில் விதைக்கப்படப் வேண்டியதாக முடிவெடுத்தன.&lt;br /&gt;2. நானும் என் விருப்பப்படி செடிகளை, விதைகளை அங்கே வைத்து பாதுகாத்துக்கொள்ளலாம்.&lt;br /&gt;3. அங்கே அவ்வப்போது வந்து இளைப்பாறிவிட்டோ, ரசித்துவிட்டோ நான் போகலாம்.&lt;br /&gt;4. பூக்களை நான் பறிக்கலாம் ஆனால் அதற்கு மிகப்பெரிய சட்டதிட்டங்கள் இருந்ததால் நான் அதை மறுத்துவிட்டேன்.&lt;br /&gt;5. தோட்டம் எங்கே என்று என் உறவினர்கள் கேட்டால் காட்டுவதற்கு சிறிய காகித பூங்காவை அமைத்துக்கொள்ள முடிவு செய்தேன்.&lt;br /&gt;6. தோட்டம் இல்லாத ஒரு வீட்டை கற்பனை செய்தும் பார்க்க முடியாத என் வாழ்வில், தோட்டத்திற்கான தேவைகள் அதிகரிக்கப்பட்டன. &lt;br /&gt;7. அதே சமயம் அதன் சாத்தியக்கூறு குறைந்து கொண்டே வருவதால் அதன் வலி அதிகரித்துக்கொண்டே போக, இதுவே நல்லதொரு முடிவென்று மனம் பற்றிக்கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;                             ******************&lt;br /&gt;&lt;br /&gt;அந்த தோட்டத்திற்கு செல்லும் வழியில் தான் அந்த அசரீதி ஒலித்தது, கனவுகளின் கொடூரங்களும், கேள்விகளின் பயமுருத்தல்களும், நினைவுகளில் என் பயணப் பாதைகளை தேர்ந்தெடுப்பதை எப்படி நிறுத்தமுடியும்? &lt;br /&gt;&lt;br /&gt;தோட்டம் போடவேண்டுமென்ற என் தேவைகள் நிரந்தரமாக தேவைகளாக தொடரப்போவதின் வலி என்னை எதார்த்தத்தின் கைகளில் பிடித்துக்கொடுத்து என் இன்பங்களை சூனியமாக்க முயலுகின்றன. தோட்டம் போட நான் பூங்காவிடம் வைக்கும் முறையீடுகள் தான் வார்த்தைப்பறிமாற்றங்கள், அவை வாழ்வை பணயம் வைத்து பரிமாறப்படுகின்றன, வார்த்தைகளைக் கையாள்வதின் பயம் என் கனவுத்திரைகளில், பூத எழுத்துக்களாக மாறி பின் பரிணாமமடைந்து என் தோட்டத்து பூச்செடிகளில் பச்சை நிற பூச்சியாகி கடித்து வைத்துவிடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அதனால் தான் அந்த வலி பழகிவிட்டது, தன்னந்தனியாக பேசிக்கொள்வதின் சுகம் பழகிவிட்டது, இப்போதெல்லாம் வார்த்தைகள் பரிமாறப்படுவதில்லை, யாரோ ஒருவரின் தோட்டமாக இருந்தாலும் எனக்கு நிச்சயம் இன்பம் கிடைக்கின்றது. என் இன்பத்தை என்னாலேயே சில சமயம் நியாயப்படுத்திக்கொள்ள இயலாத போது, மற்றவர்களிடம் எப்படி நியாயப்படுத்துவது? ஆனாலும் நான் இன்பமாகத் தான் இருக்கின்றேன். ஆம்... &lt;br /&gt;&lt;br /&gt;தொட்டம் போடுவதற்கான சாத்தியக்கூறுகள் மூடப்பட்டுவிட்டன, நானும் தனியாக பேசிக்கொண்டே அதே வழி(லி)யில் செல்கின்றேன், அதே அசரீதி ஆயிரம் முறை ஒலித்தாலும் உன்னிடம் முறையிட்டேனா என்று கடுப்படிக்கின்றேன், அதுவும் கேட்பதை நிருத்தவில்லை, நானும் பயணிப்பதை நிருத்தவில்லை. தோட்டம் போடவேண்டுமென்ற என் தேவை நிரந்தரமாக்கப்பட்டது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/153842835912349353-2969046645816498891?l=malargall.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://malargall.blogspot.com/feeds/2969046645816498891/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=153842835912349353&amp;postID=2969046645816498891' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/153842835912349353/posts/default/2969046645816498891'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/153842835912349353/posts/default/2969046645816498891'/><link rel='alternate' type='text/html' href='http://malargall.blogspot.com/2007/12/blog-post_16.html' title='தேவைகள் நிரந்தரமாக்கப்படுகின்றன...'/><author><name>மோகனா</name><uri>http://www.blogger.com/profile/10206294980960996941</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_9nysbCErfEE/SCc0lV224EI/AAAAAAAAENE/T09e-Q_vDbE/S220/DSCF0066.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-153842835912349353.post-5746755380076925356</id><published>2007-12-05T11:53:00.000-08:00</published><updated>2007-12-04T22:24:37.678-08:00</updated><title type='text'>யாரோ அவள், என்னவள்? (நச்சினு ஒரு கதை போட்டிக்கு)</title><content type='html'>அந்த கந்ததக பூமியில், அதிகாலை தென்றலின் சுகமாக பரவலுக்காக எத்தனை விரைவாகவும் எழலாம் என்று எண்ணிக்கொண்டே வாசலுக்கு வந்த கதிருக்கு அங்கு போடப்பட்டிருந்த கோலத்தில் மனம் நிலைத்தது, எத்தனை அழகான வளைவுகள், எத்தனை நேர்த்தியான வட்டங்கள் மற்றும் எவ்வளவு அழகான கோலம் என்று யோசித்துக்கொண்டே சாலையில் நடக்கலானான்.&lt;br /&gt;&lt;br /&gt;பட்டணத்திலேயே இருந்துவிட்டு கிராமத்தின் வாசம் அவனுக்கு புதிதாக தெம்பாக இருந்தது, சட்டென நினைவுக்கு வந்தவனாய் தான் ஏன் இவ்வளவு சந்தோசமாய் இருக்க வேண்டும் என்று யோசிக்கலானான், ஆம் இந்த வீட்டில் அவனை ஈர்க்கும் ஒரு சக்தி இருந்ததாகவே பட்டது. ருசியான சமையல் மற்றும் அட்டகாசமான கவனிப்பா அல்லது அழகான இளவயதில் உள்ள இரு அத்தை பெண்களா என்று யோசித்தான். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு எளிமையான, கலை நயத்துடனான கிராமத்து பெண்ணைத்தான் மணப்பது என்ற அவனின் முடிவிற்கு அவர்கள் இருவருமே பொருந்துவதாக நினைத்துக்கொண்டான். திரும்ப வீட்டிற்கு வந்த போது இளஞ்சூட்டில் குளிக்க வெந்நீரும், துண்டும் மற்றும் சொப்பும் தயாராக இருக்க உள்ளே சமையல் நடப்பதை வாசனையிலேயே அறிந்து கொண்டான். குளிக்கும் போது இத்தனையும் செய்வது இளையவளா? மூத்தவளா? என்று சிறு ஆராய்ச்சியே செய்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இளையவள் அழகு ஆனால் குறும்பு, தூங்கிய பின் தலைகாணியை எடுத்துச்செல்வது, செருப்பை சேராக்கி வைப்பது என்று அரண்ட வாலாக இருக்க, மூத்தவளோ வெளியே வர, பேசவும் தயங்குபவளாக இருந்தாள். குறும்பு என்பதால் இவையெல்லாம் செய்யத்தெரியாதவளாக இளையவள் இருப்பாள் என்றும் கூற முடியாது. அதே போல் கூச்ச சுபாவம் உள்ளதால் மாத்திரமே மூத்தவள் இவையெல்லாம் செய்ய மாட்டாள் என்றும் கூற முடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;சரி, கோலம் போடுவதாவது யார் என்று பார்க்கலாம் என்ற காரணத்திற்காகவும் நிறைய நாட்கள் அவன் அதிகாலையில் எழுந்துள்ளான் ஆனால் அவனால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. ஒருமுறை இளையவள் காப்பி நீட்டிய போது காப்பி அவள் கைகளில் வெண்மை ஒட்டியிருந்தது. அன்று அவன் தோட்டத்திற்கு போன போது அவள் செடிகளை நோண்டிக்கொண்டிருந்தாள், இவனைப் பார்த்ததும் ஒரு ரோஜாவைக்கிள்ளி தூக்கிப்போட்டாள், உள்ளேயிருந்து அதட்டல் வர "அவளுக்கு பொறாமை" என்று கத்திவிட்டு விரைவாக ஓடிப்போனாள்.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் வீட்டுக்குள் வந்த போது கீரைகள் ஆய்ந்து வைக்கப்பட்டிருந்தது, இவனைப்பார்த்த பின்பு ஒரு உருவம் உள்ளே மறைந்ததாய் அவனுக்குப்பட்டது, அதில் ஒரு ரோஜாப்பூவும் இருந்தது சிரித்துக்கொண்டே தன் அறைக்குச்சென்றான், பின்னாலேயே காப்பி வந்தது இந்தமுறை மூத்தவளே வந்து கொடுத்துவிட்டு, சிரித்துவிட்டுப்போனாள். இவனுக்கு ஒரே சந்தோசம் இருவரில் யார் தன்னை வெகுவாக காதலிக்கின்றார்களோ அவளையே திருமணம் செய்யலாம் என்று முடிவெடுத்து, ஊருக்கு கிளம்பத்தயாரானான். &lt;br /&gt;&lt;br /&gt;அன்று இரவு வண்டிக்கு, மாமாவே கொண்டு சென்று ஏற்றிவிடுவதாய் கூறியிருந்ததால் பொருமையாக கிளம்பிக்கொண்டிருந்தான், காலையில் சாப்பிட்ட பூரி ஏதோ செய்ய பின்னால் சென்று வீட்டு, முகம் கழுவிவிட்டு வந்தவனுக்கு கொடுக்கப்பட்ட காப்பி மிகவும் ருசியாக இருப்பதாய்ப்பட்டது. தன் பையில் இருந்த ஒரு ரோஜாவைக் கவனித்தபோது அது காலையில் தான் வைத்திருந்த ஒன்றாக அவனுக்குப்பட்டது. இது என்ன மெலிதாக ஒரு துன்பம் என எண்ணிக்கொண்டே, வெளியே வந்து பையெல்லாம் வைத்துவிட்டு உட்கார்ந்தான், மாமா ஏதோ பேசிக்கொண்டிருக்க யாராக இருக்கும் என்ற யோசனையுடன் அவன் அந்த சகோதரிகள் இருவரையுமே பார்த்துக்கொண்டிருந்தான், சிறியவள் இவனை சீண்டிக்கொண்டே இருந்தாள், மூத்தவளோ ஓரமாக நின்று கொண்டு ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"பாருங்க தம்பி, காலயில் பூரிமாவை வைத்துவிளையாடி கண்ணைக் கெடுத்துக்கொண்டாள், விளையாட்டுப்பிள்ளை ஏதாவது குரும்புத்தனம் செய்திருந்தால் மன்னிச்சிக்கொங்க" என்று அவர் கூற இவன் சிரித்துவைத்தான். மூத்தவளைப்பார்த்த போது ஏதோ ஒன்று குறைவதாகவே பட்டது. போதுவாகவே அவனுக்கு ஏதோ முக்கியமான ஒன்று குறைவதாகவே பட, அவனையும் அறியாமல் தேடினான், மாமா அழைத்தவுடன் எதையோ விட்டுச்செல்லும் மனப்பான்மையுடனேயே வண்டியில் ஏறிக்கொண்டான். மூத்தவளும், இளையவளும் வெளியே வந்து வழியணுப்ப, அது நிறைவாக இல்லாததால் தூரத்தில் எதையோ தேடினான்.&lt;br /&gt;&lt;br /&gt;கார் ஓடிக்கொண்டிருந்த அமைதியான சூழலில், மாமா ஏதேதோ பேசிக்கொண்டே வந்தார் எதையுமே கேட்காத அவன், சட்டென திடுக்கிட்டு "என்ன சொன்னீங்க" என்றான்..&lt;br /&gt;"என் மூன்றாவது மகளைப் பற்றித்தான் தம்பி, அவளுக்கு கால் ஊனம் வெளியே வரமாட்டாள் யாரையும் பார்க்கமாட்டாள், ரொம்ப திறமைசாலி சமையல், கோலம் என எல்லா வீட்டுவேலையும் அவள் தான் செய்வாள், அவளுக்கு ஒரு பையன் கிடைத்தால் நன்றாக இருக்கும், எனக்கும் பாரம் ஒழியும்..." என்று எதையோ கூறிக்கொண்டேயிருக்க இவனுக்கு தலை சுற்ற ஆரம்பித்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/153842835912349353-5746755380076925356?l=malargall.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://malargall.blogspot.com/feeds/5746755380076925356/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=153842835912349353&amp;postID=5746755380076925356' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/153842835912349353/posts/default/5746755380076925356'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/153842835912349353/posts/default/5746755380076925356'/><link rel='alternate' type='text/html' href='http://malargall.blogspot.com/2007/12/blog-post.html' title='யாரோ அவள், என்னவள்? (நச்சினு ஒரு கதை போட்டிக்கு)'/><author><name>மோகனா</name><uri>http://www.blogger.com/profile/10206294980960996941</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_9nysbCErfEE/SCc0lV224EI/AAAAAAAAENE/T09e-Q_vDbE/S220/DSCF0066.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-153842835912349353.post-1315976866649715494</id><published>2007-11-26T11:51:00.000-08:00</published><updated>2007-11-25T22:24:23.450-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கடவுள்'/><title type='text'>புனிதம், கலை மற்றும் பண்பாடு தெய்வத்தை மட்டுமே சார்ந்த ஒன்றா?</title><content type='html'>"விநாயகர் சதுர்த்தியில் நடைபெற்ற குறு மேடை விழாவில் அத்தனை அழகாக பரத நாட்டியம் ஆடிய குழந்தையின் மீதான அனைவரின் ஈர்ப்பு","புதிதாக வண்டி வாங்கின பின் அதை பூசை செய்யாமல் ஏன் இருக்கின்றாய்? என்ற என் வீட்டு சொந்தக்காரரின் கேள்வி", "சடங்குகள் இல்லாத திருமணத்தை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்ல, அது பிற்போக்கான மனப்பாடே என்றாலும்! என்ற ஒரு பதிவரின் பின்னூட்டம்" எல்லாவற்றிற்கும் மேலாக, "என் திருப்திக்காக இந்த சடங்குகளைச் செய்கின்றேன், கடவுள் நம்பிக்கையெல்லாம் இல்லை என்று சொல்லிக்கொண்டே தீபாவளி கொண்டாடிய என் அம்மா" என்ற எல்லாமே எனக்கு ஏற்படுத்தியது தான் இந்த எண்ணம் புனிதம், கலை மற்றும் பண்பாடு தெய்வத்தை அல்லது தெய்வ நம்பிக்கையை மட்டுமே சார்ந்த ஒன்றா? &lt;br /&gt; &lt;br /&gt;கலையில் பெரும் புகழை அடந்த சிலர் கண்மூடித்தனமாக தெய்வ நம்பிக்கை வைத்துள்ளதும் என்னை யோசிக்க வைக்கும், நம் தமிழகத்தில் இளையராஜா, ரஜினிகாந்த் மற்றும் ஏ.ஆர். ரகுமான் இவர்கள் உதாரணங்கள். படித்து, பயின்று, பழகி துன்பப்பட்டு வரும் சில விசயங்கள் உதாரணமாக தமிழ் இலக்கியம்,  கணக்கு, அறிவியல் மற்றும் ஆராய்ச்சியில் இருப்பவர்கள் பெரும்பாலும் தெய்வ நம்பிக்கை இல்லாதிருக்கின்றார்கள்.  அது போல் வட்டிக்கு விடுபவர்கள், நகை வியாபாரிகள் மற்றும் தன்னை, உழைப்பை மாத்திரம் நம்பி வாழாதவர்கள் பெரும்பாலும் தெய்வ நம்பிக்கை அதிகம் வைத்துள்ளார்கள். அதே சமயம் உழைப்பாளிகள் தன் உழைப்பில் வாழ்பவர்கள் கடவுளை அத்தனை பெரிதாக பெரும்பாலும் நம்புவதில்லை அல்லது எடுத்துக்கொள்வதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;கலையிலும் படித்து, பயின்று, பழகி எல்லாம் உண்டு என்றாலும் இவற்றால் மட்டுமே அல்லாமல் அதையும் மீறிய ஒன்று அவர்களை இயக்குகின்றது என்று நம்புகின்றார்கள், படித்த அறிவாளிகளும் கடவுள் என்ற ஒன்றை நியாயப்படுத்த இயலாவிட்டாலும் சில முறை கடவுளை ஆதரிப்பதும் நடக்கின்ற ஒன்று தான்(சுஜாதா), அவர்களுக்கு இரட்டை மனப்பாடு என்பதால் அவர்களால் இல்லை என்றும் மறுக்க முடியாது, என்றாலும் பொதுவாக அறிவாளிகள் என்று காட்டிக்கொள்பவர்கள் கடவுளை அத்தனை நம்பாதவர்களாக இருக்கின்றனர்.&lt;br /&gt; &lt;br /&gt;மேலும், வீட்டிலேயே இருக்கும் பெண்கள் தெய்வத்தின் பின்னால் ஒளிந்து கொண்டு அரசியல் செய்வதையும், அவர்களுக்கு  அதானால் மாத்திரமே மதிப்பு இருப்பதையும் பார்த்துள்ளேன், ஆனால் வேலைக்கு செல்லும் பெண்கள் தெய்வ நம்பிக்கை பெரும்பாலும் கொண்டிருப்பதில்லை, சடங்குகள் செய்ய நேரம் இல்லாததால் அவை தற்காலிகமாக நின்று, பின்னால் நிரந்தரமாக. ஆனாலும் அவர்களின் மதிப்பு குறைந்து போவதில்லை, என்றாலும் பொதுவாகவே பெண்களின் புனிதம் தெய்வத்தை சார்ந்த ஒரு விசயமாகவே காணப்படுகின்றது. நம்பாவிட்டாலும் கூட சடங்குகளின் கால்களைப்பிடித்துக்கொண்டு தொங்குகின்றது.&lt;br /&gt; &lt;br /&gt;ஒரு பெண்ணின்/ஆணின் நடவடிக்கைகளில் இல்லாத ஒரு புனித்தத்தை சில சடங்குகளோ, தெய்வ நம்பிக்கையோ கொடுக்க முடிகின்றது என்ற ஒன்று தான் இவர்களை இயக்குகின்றது. அல்லது இவை மூலமாகத் தான் அவர்களின் புனிதத்தை காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று பரைசாற்றுகின்றது, நம்பவும் வைக்கின்றது. எந்த ஒரு புனிதமும் தெய்வ பிம்பத்தைக் கொண்டுள்ளது, நான் காலையில் உடல் பயிற்சி செய்வேன், படிக்கும் முன் இரு நிமிடம் மௌனமாக இருப்பேன், ஆனால் காலையில் கோயில் செல்லும் பெண்களுக்கும், கடவுள் வாழ்த்து பாடும் பென்களுக்குமுள்ள ஒரு புனிதபிம்பம் என்னிடமில்லை. கிருஷ்ணா, கிருஷ்ணானு புல்லாங்குழல் கற்றுக்கொண்டு பாடும் போது எனக்கு கிடைக்கும் ஒன்று, அழகான சினிமா பாடல் இசைக்கும் போது கிடைப்பதில்லை பிறரிடமிருந்தும், என்னிடமேயும் கூட.&lt;br /&gt; &lt;br /&gt;கலைகளை எடுத்துக்கொண்டால் சிலைகளில் தெய்வ வடிவங்கள், பாடல்களில் தெய்வ பாசுரங்கள் இவை தான் பெரு மதிப்பை ஒரு புனித பிம்பத்தை பறைசாற்றுகின்றது. இவையில்லாத கலைகள் ஒரு செயற்கையை, புனிதமின்மையை தோற்றுவிக்கின்றது. கோயில்களிலுள்ள பல அழகான சிலைகளைக் காணும்போதெல்லாம் ஒரு கேள்வி வரும், &lt;strong&gt;தெய்வமில்லை என்று அந்த காலத்தில் அவர்கள் நினைத்திருந்தால் இப்படிப்பட்ட கலைகள் உருவாகியிருக்குமாவென்று&lt;/strong&gt;. தாஜ்மகால் போல் சில உருவாகியிருக்கலாம் என்று எண்ணினாலும், இப்படி பல இடங்களில், பல வகைகளில், அத்தனை நுணுக்கமாக, கலைத்திறனுடன் இருந்திருக்குமா, போட்டிபோட்டுக்கொண்டு கட்டியிருப்பார்களா? பரதநாட்டியத்தில் இருக்கும் மதிப்பு டிஸ்கோவில் இல்லாதது போல், பல உதாரணங்கள் கூறலாம். &lt;br /&gt; &lt;br /&gt;பண்பாடு என்பது தெய்வத்தை சார்ந்த ஒன்றாக அவ்வளவாக இருப்பதில்லை, என்றாலும் இது reverse engineering(சரியான தமிழ் வார்த்தை வேண்டும்) கடவுள் என்ற போர்வைக்குள் இருந்து கொண்டு பண்பாட்டுடன் இருப்பதாகக் காட்டிக் கொண்டுவிடலாம். கலை, இலக்கியம்,புனிதம் இவையெல்லாம் இல்லாமல் போணாலும் தெய்வம் என்ற போர்வைக்குள் இருந்து கொண்டு பண்பாட்டை நிலை நாட்டிவிட இந்த உலகில் முடிவது பெரிய ஆச்சரியமான ஒன்று. மனிதத்தன்மையில்லாத சிலர் கூட தெய்வத்தின் போர்வையில், நல்ல பெயருடன் பொருளுடன் வாழ வழியிருப்பது தான் போலி சாமியார்களின் வருகைகளுக்கு முக்கியமான காரணம். மற்றும் கடவுள், கடவுள் என்று கூறிக்கொண்டு மனிதத்தன்மையே இல்லாதவர்கள் எத்தனையோ உள்ளனர், திருட்டு தனம், அரசாங்கத்தை ஏமாற்றுதல், கள்ளத்தனம் மற்றும் பல வகையில் கெட்ட மனம் இருக்கும் கடவுள் ஆதரவாளர்கள், பக்தர்கள்/பக்தைகளைப் பார்க்கும் போது இந்த கடவுள் என்ற அமைப்பின் சாராம்சம் கூட பொய்யாகிப்போகின்றது(அதை ஒர் அரசியலாக மாத்திரமே பார்க்கும் போது)&lt;br /&gt;&lt;br /&gt;மனுவையும், வேதங்களையும் தெரிந்துள்ளார்களா, அவை உண்மையாக என்ன கூறுகின்றன என்று அறிந்துள்ளார்களா? மதத்தின் உண்மையான தோற்றமோ, கூறுகளோ தெரியுமா என்று பல கேள்விகள். கண் மூடித்தனமான பழக்கங்கள் மற்றும் அரைகுறையான புரிதல்களுடனான இந்த பக்தி முழுமையானதா? அப்படி படித்த பின்பும், தெரிந்து கொண்ட பின்பும் இவற்றை கடைபிடிப்பார்களா? கடைபிடிப்பதில் அர்த்தம் காண்பார்களா? என்றெல்லாம் யோசித்தாலும் எதெற்குமே விடையில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;கடவுள் உதவியுடனான நீதிக்கதைகள், ஒழுக்க முறைகள், புனித பார்வைகள் மற்றும் கலைத்திறன் இவை மூலமாக மட்டும் தான் சந்ததிகளுக்கு நல்ல சமுதாயத்தை, வழிகாட்டுதலைக் கொடுக்க இயலுமா? இந்த காரணத்தினால் தான் கடவுள் மறுப்பாளர்கள் கூட வீட்டில் கடவுள் கும்பிடுவதை தடுப்பதில்லையோ என்று பல கேள்விகள். இது ஒரு ஆழமான கட்டுரை இல்லையென்றாலும் இந்த கேள்வி என்னளவில் நியாயமான ஒன்றாகத்தான் படுகின்றது. புனிதம், கலை மற்றும் பண்பாடு தெய்வத்தை மட்டுமே சார்ந்த ஒன்றில்லையென்றால் வேரு எதைச் சார்ந்ததாக இருக்கலாம்?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/153842835912349353-1315976866649715494?l=malargall.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://malargall.blogspot.com/feeds/1315976866649715494/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=153842835912349353&amp;postID=1315976866649715494' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/153842835912349353/posts/default/1315976866649715494'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/153842835912349353/posts/default/1315976866649715494'/><link rel='alternate' type='text/html' href='http://malargall.blogspot.com/2007/11/blog-post_26.html' title='புனிதம், கலை மற்றும் பண்பாடு தெய்வத்தை மட்டுமே சார்ந்த ஒன்றா?'/><author><name>மோகனா</name><uri>http://www.blogger.com/profile/10206294980960996941</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_9nysbCErfEE/SCc0lV224EI/AAAAAAAAENE/T09e-Q_vDbE/S220/DSCF0066.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-153842835912349353.post-918433286339154699</id><published>2007-11-20T12:15:00.000-08:00</published><updated>2007-11-19T23:15:19.221-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பினாவானா'/><title type='text'>ஏமாற்றங்களின் உலகம்...</title><content type='html'>என் மௌனங்களின் காற்றலையில் உன் ஆதிக்கம் எனை சுற்றித் தீயாய் சூழ்கிறது,  என் வார்த்தைகளைப் பற்றிக் கொண்டுவிட்டால் அவை வெகுவாகப் பரவுமென மௌனமாகவே இருக்கின்றேன். உனைமீறி நகர்ந்தால், தீயாய் அனைத்தையும் கருக்கிவிடுவேனென்ற உன் பயமுறுத்தல்களால் என் இருப்பை உருதியாக்குகின்றாய், என்றாலும் தகிக்கின்றேன் என்று எனை நெருங்கவும் தயங்குகின்றாய். &lt;br /&gt;&lt;br /&gt;என்றோ யாரோ எனை குடிசையெரிக்க தூண்டினார்கள் என்று எனை கண்ணாடிக் கூண்டிற்குள் எரிய விட்டுள்ளாய், எனைத்தூண்டினால் பெரிதாக வருவேனென்றே எனை உன் உள்ளங்கையிலேயே அடக்கியுள்ளாய், ஆனாலும் சுடுகின்றேன், சுடுகின்றேன் என்று கதறுகின்றாய்.&lt;br /&gt; &lt;br /&gt;நான் உன்னளவில் தகிப்பதற்காய் நீ ஊறும் காரணங்கள்... &lt;br /&gt; &lt;br /&gt;- நான் என் புத்திசாலித்தனத்தால் உனை மீறி விடுவேன்.&lt;br /&gt;- உனக்கென நீ உருவாக்கியுள்ள போலி/தேவையற்ற ஒரு கௌரவத்தை தகர்த்துவிடுவேன்.&lt;br /&gt;- நீ செய்யும் தவறுகளுக்காய் நான் உனை தண்டிப்பேன்.&lt;br /&gt;- நீ புத்திசாலி என்ற உன் மாயையை கிளிப்பேன்.&lt;br /&gt;- உன் சந்ததிகளின் அறிவை சூனியமாக்குவேன்.&lt;br /&gt;- எனை மட்டுமே சார்ந்த ஒரு இன்பத்தை தேடத்துடங்குவேன்.&lt;br /&gt;- உன் அதிகாரத்தை உடைப்பேன். &lt;br /&gt;- உன் உறவினர் முன் உனை மதிப்பிழக்கச்செய்வேன்.&lt;br /&gt;- பிறர் ஏளனத்திற்கு உள்ளாக்குவேன்.&lt;br /&gt;- பொருளாதாரத்திற்காய் உனை நாட மாட்டேன்.&lt;br /&gt;- உன் நேரத்தையும், என் நேரத்தையும் வெருபடுத்துவேன்.&lt;br /&gt;- இன்முகம் மறப்பேன்.&lt;br /&gt;- பேச்சுக்கள் குறைப்பேன்.&lt;br /&gt;- கேட்பதைக் குறைப்பேன்.&lt;br /&gt;  &lt;br /&gt; &lt;br /&gt;என்று நீளும் உன் காரணங்கள், என் தகிப்பை உன் மனதளவில் உருதியுடன் நிரந்தரமாக்குகின்றது. தீயாய் சுடுவதில் ஏதுமில்லை என்றே விளக்காய் எரிகின்றேன். விளக்கேற்றி வைக்கும் போது கூட, எத்தனை மெல்லிதாய் முடியுமோ அத்தனை மெல்லிதாய் சுடரேற்ற கற்றுக்கொடுக்கப்பட்ட நான், என் தகிப்பை குறைக்க கற்றிறுக்க மாட்டேனா. &lt;br /&gt; &lt;br /&gt;உலகிற்கே வெளிச்சம் கொடுக்கவேண்டிய அவசியம் எனக்கு இருந்ததில்லை, தேவையுமில்லையென்றாலும் என் மீதான உன் ஆதிக்கம் வெளியுலகை நோக்கிய என் பயணத்தை தூண்டுகின்றது. உனைமீறி நகர்ந்தால், தீயாய் அனைத்தையும் கருக்கிவிடுவேனென்ற உன் பயமுறுத்தல்களால் என் இருப்பை உருதியாக்குகின்றாய், என்றாலும் தகிக்கின்றேன் என்று எனை நெருங்கவும் தயங்குகின்றாய். &lt;br /&gt; &lt;br /&gt;இன்று என் உருவம் மாறி, மின்விளக்காய், வண்ணங்களுடன் கொள்ளை அழகுடன் எரியும் போதும் மின்சாரமாய் என்னுள் ஒடுவதாய் ஒரு எண்ணத்திலிருக்கின்றாய், என் தகிப்பு இல்லை எனவே எனை சந்தேகிக்கின்றாய். என் மீதான உன் ஆதிக்கமும், பயமுறுத்தல்களும் தளம் மாறியுள்ளனவேயன்றி பொருள் மாறவில்லை., என் மௌனங்கள் இன்று பேசக்கற்றுக்கொண்டன.&lt;br /&gt;&lt;br /&gt;நான் தகிப்பதில்லயெனவே வெளியேறத் தயங்குவதில்லை, &lt;br /&gt;நீ புதிதாக உன் ஆதிக்கங்களை மாற்ற வழி தேடிக்கொண்டுள்ளாய், நான் கட்டுப்படுதலின் சுகத்தை மறந்துகொண்டுள்ளேன்.&lt;br /&gt;நீ உன் புத்திசாலித்தனத்தை வெகுவாக பெருக்கிக்கொண்டுள்ளாய் நான் அதைப் பார்த்து மயங்கும்/மறுளும் என் மனப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளேன். &lt;br /&gt;நீ கருக்கிவிடுவேனென்ற உன் பக்கத்தை நியாயப்படுத்துகின்றாய், நான் மெதுவாக குளிர்ந்து கொண்டுள்ளேன்.&lt;br /&gt;நீ கேள்விகளை சிக்கலாக்குகின்றாய், நான் வாக்குவாதத்தை குறைத்துக்கொண்டுள்ளேன். &lt;br /&gt;நீ உன் தவறுகளை மறைக்கக் கற்றுக்கொண்டுள்ளாய், நான் உனை கவனிப்பதை நிறுத்தக் கற்றுக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என்றாலும் உன் ஆதிக்கத்தினுள்ளே தான் நான் உள்ளேன், நீ தான் அதை நான் மீறிவிட்டதாய் மருகுகின்றாய், நான் மீறுவதாக உனை நினைக்கத்தூண்டியதே என் வெற்றியென நான் நினைக்க, நான் மீறுவது மட்டுமே என் தோல்வியாக உலகில் பறைசாற்றுகின்றாய். என் எந்த ஒரு மாற்றத்தையும், ஏமாற்றமாக மாற்றக்கற்றுள்ளாய், ஏமாற்றங்களின் உலகிலும் இன்பமாய் இருக்க நானும் கற்றுக்கொண்டுவிட்டேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/153842835912349353-918433286339154699?l=malargall.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://malargall.blogspot.com/feeds/918433286339154699/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=153842835912349353&amp;postID=918433286339154699' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/153842835912349353/posts/default/918433286339154699'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/153842835912349353/posts/default/918433286339154699'/><link rel='alternate' type='text/html' href='http://malargall.blogspot.com/2007/11/blog-post_20.html' title='ஏமாற்றங்களின் உலகம்...'/><author><name>மோகனா</name><uri>http://www.blogger.com/profile/10206294980960996941</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_9nysbCErfEE/SCc0lV224EI/AAAAAAAAENE/T09e-Q_vDbE/S220/DSCF0066.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-153842835912349353.post-4484160050068503806</id><published>2007-11-16T12:56:00.000-08:00</published><updated>2007-11-19T22:59:13.131-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><title type='text'>தரையில் இறங்கும் விமானங்களும், எதார்த்தத்தின் வலிகளும்</title><content type='html'>தகுதியற்ற இடங்களில், தகுதியானவர்களைப் பார்க்கும் போதும், தகுதியான இடங்களில்&lt;br /&gt;தகுதியில்லாதவர்களைப் பார்க்கும் போதும் மனதுக்குள் ஒரு குழப்பம் வரும், எல்லாமே சந்தர்ப்பம் சார்ந்தது தானோ என்று., ஆனால் பெரும்பாலும் தகுதிகள் மதிப்பிடப்படுவதும், அதற்கான அளவு கொள்களும் மிகையாக, பலவகைகளில் வேருபடுகின்றன. &lt;br /&gt; &lt;br /&gt;"எந்த ஒரு சூழலையும் தனக்கு சாதகமாகவோ அல்லது பாதகமில்லாமலோ மாற்றிக்கொள்வது தான் புத்திசாலித்தனம்", "நீ விரும்பும் வாழ்வை விட, உனக்கு கிடத்த வாழ்வை விரும்பு" என்கின்ற இரண்டு வாக்கியங்களின் யதார்த்தம் வலிக்காமல் இருக்கும் ஒரு புள்ளியில், நாம் இந்த வாழ்வின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டோம் என்று தான் தோன்றுகின்றது. அழகான ஒரு கைவேலை செய்யலாம், கோலம் போடலாம், வரையலாம் ஆனால் அவற்றை ரசிக்கும் ஒரு உயிர் தான் நம் உடன் இருக்க வேண்டுமென்று நினைப்பது புத்திசாலித்தனம் இல்லையில்லயா? &lt;br /&gt;&lt;br /&gt;என் அம்மா எனக்கு கற்றுக் கொடுத்தவை தான் கைவேலை, வரைதல் மற்றும் புத்தகம் படித்தல்., இத்தனைக்கும் அவர் பெரிய படிப்பு படித்தவரோ, இலக்கியவாதியோ அல்ல, ஆனால் இன்று இருக்கும் குழந்தைகளிடம் இந்த பழக்கங்கள் உள்ளனவா என்று தெரியவில்லை. சிறு பூங்கா அமைத்தல், பூக்கட்டுதல் என்று சில அழகான விசயங்கள் கூட மறக்கப்பட்டுவிட்டன, இவற்றையெல்லாம் செய்வது நேரத்தை வீணாகச் செலவு செய்வதாக நினைக்கும் உள்ளங்களுடன் கூட வாழ்க்கை அமையலாம், பணம் பண்ணும் உலகில் இவை பலருக்குத் தேவையற்ற விசயங்களாகிவிடுகின்றன. ஆனால் இவையெல்லாவற்றுடனான என் கணிணி அறிவும், கை நிறைய சம்பளமும் என்னுள், நான் கூறிய அந்த யதார்த்ததை மீறி பல முறை குழம்ப வைத்துள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;எனை சார்ந்து மட்டுமில்லாமல் என் சில தோழிகளின் வாழ்வும் கூட, இந்த யதார்த்தத்தின் உண்மையைப் பற்றிக்கொண்டு பல கேள்விகளை எழுப்பும். &lt;br /&gt;&lt;br /&gt;தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நகைச்சுவைப்பகுதிகளில் வரும் ஆண்களைப்பார்க்கும் போது, என் கல்லூரியிலோ, விடுதியிலோ என்னுடன் படித்த பெண்களின் நகைச்சுவை உணர்வு தான் நியாபகம் வரும், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அவர்களே யோசித்து, நகைச்சுவையாக,  சிரிக்க, சிரிக்க பேசும் அவர்களின் திறமை வெளிச்சத்திற்கு வந்ததில்லை, அதைப்பற்றி அவர்கள் கவலையும் படுவதில்லை. என்றோ தஞ்சாவூர் பெரிய கோயிலில் வீணை அரங்கேற்றிய ஒருத்தி இன்று அவள் துணையின் சந்தேகத்தின் பிடியில் சிக்கி எல்லாவற்றையும் மறந்தவளாக இருப்பதும் எனை வெகுவாகப்பாதித்தது. என் அம்மா, சித்தியின் திறமையும், ஆனால் அவர்களின் மீதான அடக்குமுறையையும் நேராகப் பார்த்தவள் நான்.&lt;br /&gt;&lt;br /&gt;அழகு மட்டுமிருந்தால் போதுமா புத்திசாலித்தனம் வேண்டாமா என்ற கேள்வியும், புத்திசாலியான அழகில்லாத பெண்ணை ஏற்றுக்கொள்வாயா என்ற மறுகேள்வியின் பதிலான மௌனமும் எனக்கு யதார்த்ததின் வலியை உணர்த்தியது. ஆனால் திறமை என்பதின் அர்த்தம், அதை வெளிக்காட்டுதல் மட்டும் தான் என்று நான் எண்ணியது தவறு என இப்போது நான் நினைப்பது தான் யதார்த்தத்தின் வலியை எனக்குப் போக்கியது. &lt;br /&gt;&lt;br /&gt;அடக்குமுறையை ஏற்படுத்திவிட்டு பெண்கள் முட்டாள்கள் தான் என்று சந்தோசப்படும் ஆண்கள், நிச்சயம் யதார்த்தத்தை அணுக பயப்படுபவர்கள் என்று தான் தோன்றும். &lt;br /&gt;&lt;br /&gt;தரையில் இறங்கும் விமானங்கள் என்ற நாவலில் பரமுவின் கதாப்பாத்திரமும், அவன் மனைவியின் கதாபாத்திரமும் பல வகைகளில், சிலவற்றை விட்டுக்கொடுப்பதைப்போல் காட்டுயுள்ளார். பரமு தன் குடும்பத்திற்காக, தன் கனவுகளை இழப்பதும், அவன் மனைவி அவனுடைய நல்ல மனதிற்காக, தான் அவனுக்கு பொருத்தமில்லாதவள் என்று நினைத்தாலும் அவள் மிகவும் நல்ல மனமும், கலை உணர்வும் கொண்டவளாக இருப்பதும் விட்டுக்கொடுத்து வாழும் வாழ்வின் அழகைக் காட்டுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;பரமுவின் தம்பி, தன் அண்ணியின் தகுதிகளையும், மதிப்புகளையும் தான் மட்டும் புரிந்து கொண்டதாகவும், அண்ணன் அவளின் மனதை அறியாமல் இருப்பதாகவும் நினைத்துக்கொள்வதும், தன் அண்ணிக்கு அண்ணன் பொருத்தமானவனல்ல என்று நினைப்பதும், அண்ணனின் வாழ்வு போல் தன் வாழ்வு அமையகூடாதென நினைப்பதும், தன் காதலி புத்திசாலியாக இருக்க வேண்டுமென்று நினைப்பதும், ஆனால் அவளின் அழகினால் அவளைப்பிரிய முடியாததும், அவனின் கவித்துவமான எண்ணங்களும்(இரவில் உட்கார்ந்து மாட்டுவண்டியின் அழகை ரசிப்பது, அலுவலகத்தின் வெளியில் மரங்களை ரசிப்பது, சுவரில் உள்ளதை சித்திரமாக நினைப்பது), செயல்களும் என அழகான ஒரு கதாப்பாத்திரப் படைப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;அவனின் அழகு மட்டுமிருந்தால் போதுமா புத்திசாலித்தனம் வேண்டாமா என்ற கேள்வியும், புத்திசாலியான அழகில்லாத பெண்ணை ஏற்றுக்கொள்வாயா என்ற அவன் அண்ணியின் மறுகேள்விக்கு அவனின் மௌனமும், அதன் பின் அவனின் யோசனைகளும், அழகான ஒரு திருப்புமுனையாக உள்ளது. நானும் கூட சில நண்பர்களைப் பார்க்கின்றேன், புத்திசாலி பெண் வேண்டும் என்று ஆசைப்படுவதை. ஆனால் அதை விட அவர்களுக்குப் பெண் அழகாக வேண்டுமென்பதே முதல் குறிக்கோளாகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இறுத்தியில் அவன் விரும்பாத ஒரு வேலையில், தன் அப்பா மற்றும் குடும்பத்திற்காக அமர்வதும், தன் காதலியை நோக்கிப்போவதும், பத்திரிக்கை முயற்சியை கைவிடுவதும் யதார்த்தத்தின் உச்சம். விமானம் ஒரு சமயம் தரையிறங்கத்தான் வேண்டும் என்பதையும், தரையிறங்கியும் அந்த யதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல், சற்று தூரம் விமானம் ஓடுவதாகவும் கூறியிருக்கும் வரிகள்,நாவலின் தலைப்பின் அர்த்ததை விளக்குவதாக அழகாக உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;கதை சட்டென முடிவது போலுள்ளது தான், குறையாக உள்ளது, ஆனால் கலை, கலை என்று வாழும் ஒரு ஆணின் கதாபாத்திரத்தை இத்தனை அழகாகக் காட்டியிருப்பது அருமை. நான் கூட அடிக்கடி நினைப்பேன் சிலரின் நல்ல குணங்களும், மதிப்புகளும் கவனிக்கப்படுகின்றனவா, அதற்கான வெகுமதி கிடைக்கப்பெருகின்றனவா என்று. ஆனால் மதிப்புகள் என்பது, சரியானவர்களால் மதிப்பிடப்படும் போது தான் அறியவரும், அதும் தேவையான இடத்தில், கடலில் நீருக்கான மதிப்பும், பாலையில் நீருக்கான மதிப்பும் போல...  &lt;br /&gt;&lt;br /&gt;நான் எதை தகுதியாய் என்னிடம் பார்க்கின்றேன் என்பதிலும், மற்றவர் என்னிடம் தகுதியாய் எதைப்பார்க்கின்றார்கள் என்பதிலும் பெருவாரியாக வேருபாடு உள்ளது. நான் தேடிய அல்லது ஆசைப்பட்ட தகுதிகள் கிடைத்த மாத்திரத்திலும் கூட நம் தேடுதல்களும் எதிர்பார்ப்புகளும் முடிவதில்லை அதனால் தான் ஆசைப்பட்டு திருமணம் செய்வதிலும் முறிவு ஏற்படுகின்றது. தகுதி என்பது நம்மிடம் இருப்பதில்லை, மற்றவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பதும், அவர்களால் உணர்ந்து கொள்ள முடிவதுமே தகுதியாகின்றது. எனவே தான் போகும் இடத்தின் சூழலுக்கேற்ப தன் எண்ணங்களை மாற்றிக்கொள்ள வேண்டுமென்ற யதார்த்தம் தான் வெற்றிகரமான ஒரு வாழ்வியல் தத்துவமாக எனக்குப் படுகின்றது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/153842835912349353-4484160050068503806?l=malargall.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://malargall.blogspot.com/feeds/4484160050068503806/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=153842835912349353&amp;postID=4484160050068503806' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/153842835912349353/posts/default/4484160050068503806'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/153842835912349353/posts/default/4484160050068503806'/><link rel='alternate' type='text/html' href='http://malargall.blogspot.com/2007/11/blog-post_16.html' title='தரையில் இறங்கும் விமானங்களும், எதார்த்தத்தின் வலிகளும்'/><author><name>மோகனா</name><uri>http://www.blogger.com/profile/10206294980960996941</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_9nysbCErfEE/SCc0lV224EI/AAAAAAAAENE/T09e-Q_vDbE/S220/DSCF0066.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-153842835912349353.post-192255190466511171</id><published>2007-11-05T22:34:00.001-08:00</published><updated>2007-11-19T23:00:57.212-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>பெங்களூரு டிராபிக்கிற்கும் தீபாவளி விடுமுறை...</title><content type='html'>பெங்களூரு நகரில் தாங்க முடியாத அளவு வாகனங்களும், நெருக்கடியும் பிரசித்தமானது, எப்பதாண்டா சாலை வெருமா இருக்கும் என்று யோசிக்கும் அளவு பெரும்பாலும் வாகன நெருக்கடி தான்., மன அழுத்தம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் காலையில் அலுவலகத்திற்கு இரு சக்கர வாகனத்தில் வர வேண்டும்., டெங்சன் ஆகனுமா, கார் ஓட்டிக்கொண்டு போய் வர வேண்டும்... &lt;br /&gt; &lt;br /&gt;காலையில் வீட்டின் அருகிலேயே ஆரம்பித்துவிடும் தொல்லைகள், பள்ளிக்கு சைக்கிளில் செல்லும் குழந்தைகள் சில சமயங்களிலில் நம் வண்டி முன்னால் வந்து தான் பேலன்ஸ் இல்லாமல் ஆடுவார்கள், அல்லது 2,3 குழந்தைகளை வைத்துக்கொண்டு,இரு சக்கர வாகனங்களில் அப்பாக்கள் பேலன்ஸ் இல்லாமல் ஆடுவார்கள். சைக்கிளில் வரும் சில ஆட்கள் சிக்னல் கிடைத்த பின் மெதுவாகக் கிளம்புவார்கள், வலதிலிருந்து இடமாகவோ, இடமிருந்து வலமாகவோ மாறுவார்கள், ஓரமாக நிற்காமல் நடுவில் நிற்பார்கள், நடுவில் ஓட்டுவார்கள், இப்படி சைக்கிள் ஓட்டும் ஆசாமிகளால் சில தொல்லைகள்.  &lt;br /&gt; &lt;br /&gt;அடுத்து இந்த கார்க்காரர்கள், என்னவோ இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் எல்லாம் அவர்களை இடிக்கத்தான் வருவதைப்போல் எண்ணம் அவர்களுக்கு, சிக்னல் கிடைத்தால் நகரவே மாட்டார்கள், இல்லையென்றால் மிக மெதுவாக நகருவார்கள், கொஞ்சம் அருகில் போனால் போதும் காரை நிருத்திவிடுவார்கள், அல்லது முன்னால் போகும் இரு சக்கர வாகனத்திற்கெல்லாம் வழி விட்டுக்கொண்டு நிற்பார்கள், யப்பா அவனுங்க பின்னாடி மாத்திரம் போயிடக்கூடாது. சில பிரகஸ்பதிகள் இருக்கும், வலதிலிருந்து இடமாகவோ, இடமிருந்து வலமாகவோ லேன் டிசிப்பிளின் பார்க்காம, வளைவார்கள் அல்லது போவார்கள், இதெல்லாம் விட கொடுமை, கேப் டிரைவருங்க பண்ணுவது தான், அது அவனுங்க வண்டி இல்லையென்பதாலோ என்னவோ இஸ்டத்திற்கு ஓட்டுவானுங்க, கொஞ்சம் கூட கவலைப்பட மாட்டார்கள்... &lt;br /&gt; &lt;br /&gt;பிறகு இந்த பெங்களூரு சாலைகள், நல்லா தானே இருக்கிறது சாலைனு நம்பி ஓட்டுவோம் திடீர்னு ஒரு குழி, ஒரு மேடு இருக்கும், பூரா ஒன்வே, புதுசா ஒரு இடம் போய்வர முடியாது, 100 மீட்டர் சாலையைக்கடக்க 15 நிமிடம் ஆகும், என்னவோ நாம வழியிருந்தும் போகாத மாதிரி பலர் பின்னாடியிருந்து ஹாரன் வேற கொடுப்பானுங்க, சிலர் சிக்னல்ல இருந்து 100 மீட்டர்ல நிப்பான், சிக்னல்ல பச்சை விழுந்த உடனே ஹாரன் கொடுப்பான், நகருனுமாமாம், நமக்கு தெரியாதில்ல... கடுப்பு வரும். பொதுவாகவே சிக்னலில் மிக மெதுவாக நகருவார்கள், மேனுவல் சிக்னல் இருந்தால் கேட்கவே வேணாம் சிக்னல் கிராஸ் பண்ண உடனே திரும்பவும் ஆட்கள் நிற்பார்கள். முக்கியமா ஆட்டோ, அவர்கள் தொல்லை தான் ஊர் அறிந்தது, சைக்கிள் கேப்பில ஆட்டோ ஓட்டுவார்கள், ஆட்டோவை கார் காரங்கள் எப்பவாவது கொஞ்சம் இடிச்சா போதும் நின்னு சண்டை போட்டுட்டு இருப்பானுங்க.. &lt;br /&gt; &lt;br /&gt;இப்படி அமளி துமளியா இருக்கும் பெங்களூரு வரும் வார இருதியில் ரொம்ப அமைதியா இருக்கும்  ஏன்னா தீபவளி இந்தியா முழுவதும் கொண்டாடப்படுவதால், இங்கு இந்தியா முழுதிருந்தும் ஆட்கள் வந்து தங்கியுள்ளதால்., வந்துள்ள அனைவரும்  தீபாவளிக்கு ஊருக்குப்போயிடுவானுங்க, 75% பெங்களூரு மக்கள் வாழ் இருக்க மாட்டாங்க, சாலைகள் வெருமையா, காம்பிளஸ்கள், தியேட்டர்களில் ஆட்கள் அதிகமில்லாம, அதிக வாகன நெரிச்சல் இல்லாமல் ஊரே அமைதியா இருக்கும். ஆதலால் பெங்களூரு டிராபிக்கிற்கும், சாலைகளுக்கும் கூட தீபாவளி விடுமுறை விட்டது போலிருக்கும். நிம்மதியா, சாலைல வேகமா போய் வரலாம்... &lt;br /&gt; &lt;br /&gt;அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/153842835912349353-192255190466511171?l=malargall.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://malargall.blogspot.com/feeds/192255190466511171/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=153842835912349353&amp;postID=192255190466511171' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/153842835912349353/posts/default/192255190466511171'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/153842835912349353/posts/default/192255190466511171'/><link rel='alternate' type='text/html' href='http://malargall.blogspot.com/2007/11/blog-post_05.html' title='பெங்களூரு டிராபிக்கிற்கும் தீபாவளி விடுமுறை...'/><author><name>மோகனா</name><uri>http://www.blogger.com/profile/10206294980960996941</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_9nysbCErfEE/SCc0lV224EI/AAAAAAAAENE/T09e-Q_vDbE/S220/DSCF0066.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-153842835912349353.post-7589129283601046444</id><published>2007-11-05T10:25:00.000-08:00</published><updated>2007-11-04T21:47:50.017-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுயம்'/><title type='text'>என் புரிதல்களின் எல்லையில்...</title><content type='html'>உன் பொய்களை அதனதன் அர்த்தங்களால் ஆழமாக்கும் என் புரிதல்கள் என் வரையில் எத்தனை உண்மையோ, அத்தனையும் பொய்யாக்கிப் பார்க்கும் இந்த முரண்பாடான உறவுகளின் தேவைகள்... யதார்த்த வெளியில் உண்மையுடன் இருப்பது அவமானமோவென்று பொய்யாலாடை நெய்கின்றாய்,  அதன் வர்ணங்களாய் நீ கூறும், என் உளரல்கள், உளரல்களாகவே இருக்கட்டும், ஏனோ உன் மட்டும் தேவைகளுக்காக, உனை நிர்வாணமாக்காமலிருப்பதே நாகரீகமென நான் ரசித்துவிட்டுப் போகின்றேன்... &lt;br /&gt; &lt;br /&gt;ஞானவெளி இருள் சூழ்ந்தது, யார் பயணிக்கின்றார்கள் என்று ஆராயாதது, காட்டிக்கொடுக்காதது, அதின் மீதான என் பயணத்தை உன்னில் பதிவிட எந்த தேவையும் இருந்ததில்லை, மாறாக பதிவாகாமலிருக்க வேண்டிய தேவைகள் அதிகமாகிக் கொண்டே செல்கின்றன... என் சமமாக நீயில்லா சில தருணங்கள் உனை வேதனிப்பதால், எனை வேதனிக்கின்றன, பொய்யாக்க நீ படும்பாடு உண்மையை என்னுள் வெறுக்கச்செய்கின்றன., ஞானவெளியில் நீ முந்தியிருப்பதாய் நம்பச்செய்கின்றன, எனை பின்னிழுப்பதாய் உருவகிக்கச் செய்கின்றன.... &lt;br /&gt; &lt;br /&gt;ஞானவெளியில் நானிருப்பதாய் நீ நினைப்பதால் தான் எனை ரசிக்கின்றாய், புரிகின்றது, ஆனாலும் உன் புரிதல்களின் எல்லையிலேயே தான் என் ஞானவெளி அடங்கியிருப்பதாய் மட்டுமே நீ எனை ரசிக்கின்றாய்... உனை அன்பினால் சார்ந்தால் நூரில் நீயும் ஒருவளென்கிறாய், என் அன்பிற்காய் நீ எனை சார்ந்தால் நூரில் நீ தனி ஒருவளென்கிறாய்... கருப்பு, வெள்ளையில் பூங்கா வரைகின்றாய், வர்ணக்கலவையில் பாலையை செதுக்குகின்றாய், துன்பங்களுக்கு வர்ணத் தூரிகையை அறிமுகப்படுத்துகின்றாய், வர்ணங்களில் வெண்மையை மென்மையாய் அழிக்கின்றாய்.. ஆம் எப்போதும் உண்மையை வர்ணமாக்கி, அதன் தன்மையை இழக்க வைக்கின்றாய்... &lt;br /&gt; &lt;br /&gt;உனக்கு இது புரியாதென்று கூறியே, புரிந்து கொள்ளாதே அல்லது காட்டிக்கொள்ளாதே என்று வர்ப்புருத்துகின்றாய், புரிந்துவிடுமோவென்ற உன் பயமே எனைக் காட்டிக்கொள்ளத் தூண்டுவதில்லை., உண்மையில், ஞானவெளியில் உனைவிட பின் தங்கியே கூட நானிருக்கலாம், என்றோ நீ ஞான இருட்டில் விழுந்திருந்த போது, நான் தூக்கியது நியாபகம் வருகின்றது, நான் பின் செல்லவில்லையெனவே நீ முன்னே தான் இருந்திருக்க வேண்டும்., நீ விழுந்திருந்ததை ஒப்புக்கொண்டால் ஒருவேளை நான் தூக்கிவிட்டது தெரியக்கூடும், நீ விழவே இல்லையெனும் போது என் வருகையே பொய்யாகத்தான்படும்.  &lt;br /&gt; &lt;br /&gt;உன் வேகமான பயணத்தில், எனை நீ எளிதாக முந்தக்கூடும், அடிபடவே படாது என்ற உன் அகந்தை தான் என் பிரச்சனையேயன்றி, உன் அதிவேக பயணங்களில்லை...  நீ தொடுவானமாயிருந்துவிட்டுப்போ, ஆனால் என் இன்பங்களை நோக்கிய எளிதான பாதையை ஏன் உனையடைய ஒரு வழியாய் நான் பயணிக்கின்றேனென்று நீயாயெண்ணி எனைச் சாடுகின்றாய்? தொடுவானம் என்பது மாயைப்போல், நீ தொடுவானமாயிருப்பதாய் நினைப்பதும் மாயை, நான் அடைய நினைப்பதாய் நீ நினைப்பதும் மாயை, என் எளிமையான பாதை உண்மையானது, உன் கற்பனைகளின் பயங்கரங்களைவிட, என் எளிமையின் துன்பங்கள் இயல்பானவை... &lt;br /&gt; &lt;br /&gt;என் எல்லா புரிதல்களுக்கும், ஒரு விளக்கவுரை வைத்துள்ளாய் அவற்றைப் பொய்யாக்க, பொய்யென ஒப்புக்கொள்ளும் என் புரிதல்களின் தோல்வியை ஒவ்வொருமுறையும் நான் ஏற்றுக்கொள்கின்றேனாவென கேள்வியெழுப்புகின்றாய், ஏற்றுக்கொள்ள நம் விவாதங்களை துணைக்கு இழுக்கின்றாய்.. ஏற்றுக்கொள்ள வேண்டாமென நீ நினைப்பது கூட எனை ஏற்றுக்கொள்ள வைக்கத் தான் என்று உணர்த்துகின்றாய்... &lt;br /&gt; &lt;br /&gt;இந்த வாதத்தையே கூட என் தோல்வியின் வெளிப்பாடாயிருப்பதாய் நான் உணர்கின்றேன், உன் பயணங்கள் அதிவேகமானவை, என் பயணத்தின் வேகத்தைக் குறைக்கும் ஒரு தொடர்பியல் கூறாக மட்டுமே அவை உள்ளதேயன்றி,என் பயணத்தை நிருத்திவிடமுடியாது, என் புரிதலின் எல்லையில் என் பயணங்கள், உன்னுடன் பயணிப்பதால் மட்டுமே, அதன் நம்பகத்தன்மையின் சாத்தியக்கூரை சந்தேகிக்கும் வகையில் உள்ளதாகத் தோன்றுகிறது, இருந்துவிட்டுப்போகட்டும், புரிதலின் எல்லை எனை ஒன்றுமில்லாதவளாக்கிப் போகட்டும், ஆனாலும் மெதுவாகவேனும் புரிதலில் பயணித்துக்கொண்டேதானிருப்பேன்....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/153842835912349353-7589129283601046444?l=malargall.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://malargall.blogspot.com/feeds/7589129283601046444/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=153842835912349353&amp;postID=7589129283601046444' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/153842835912349353/posts/default/7589129283601046444'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/153842835912349353/posts/default/7589129283601046444'/><link rel='alternate' type='text/html' href='http://malargall.blogspot.com/2007/11/blog-post.html' title='என் புரிதல்களின் எல்லையில்...'/><author><name>மோகனா</name><uri>http://www.blogger.com/profile/10206294980960996941</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_9nysbCErfEE/SCc0lV224EI/AAAAAAAAENE/T09e-Q_vDbE/S220/DSCF0066.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-153842835912349353.post-7748300978951725435</id><published>2007-11-02T13:55:00.000-07:00</published><updated>2007-11-04T21:47:08.672-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புகைப்படம்'/><title type='text'>PIT நவம்பர் மாத புகைப்படப் போட்டிக்கு : முதல் தடவையாக !</title><content type='html'>முதல் முயற்சி, PIT நவம்பர் மாத புகைப்படப் போட்டிக்கு என் படங்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;புகைப்படம் ஒன்று...&lt;br /&gt;&lt;a href="http://picasaweb.google.com/agnichaaral/XaKyCH/photo#5128132005625414018"&gt;&lt;img src="http://lh3.google.com/agnichaaral/RyrI45ydQYI/AAAAAAAABLQ/C8yngc3wNNM/s800/071020071927.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மழை மேகம் திரண்டிருக்க, மிதமான ஈரம் புற்களில் பரவியிருக்க மலைகளில் வலைந்து நெளிந்து செல்லும் பாதைகள்... &lt;br /&gt;&lt;br /&gt;புகைப்படம் இரண்டு...&lt;br /&gt;&lt;a href="http://picasaweb.google.com/agnichaaral/XaKyCH/photo#5128132048575086994"&gt;&lt;img src="http://lh5.google.com/agnichaaral/RyrI7ZydQZI/AAAAAAAABLY/LUdEX4VRhfg/s800/071020071904.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஒரு அழகில மலை வளைவில், வளையும் பாதை...&lt;br /&gt;&lt;br /&gt;புகைப்படம் மூன்று...&lt;br /&gt;&lt;a href="http://picasaweb.google.com/agnichaaral/XaKyCH/photo#5128182866628133394"&gt;&lt;img src="http://lh5.google.com/agnichaaral/Ryr3JZydQhI/AAAAAAAABQk/v5IeiG3qTAU/s400/071020071931.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிறியதாகத் தூரத்தில் தெரியும் பாதை...&lt;br /&gt;&lt;br /&gt;புகைப்படம் நான்கு...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://picasaweb.google.com/agnichaaral/XaKyCH/photo#5128144430965801474"&gt;&lt;img src="http://lh4.google.com/agnichaaral/RyrUMJydQgI/AAAAAAAABPk/T1cXPvjmPio/s400/071020071996.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அழகிய மலைப்பாதகள், ஏரிகளுடன், வீடுகளுடன், பெரிய படத்திலிருந்து வெட்டியெடுத்ததால் சிறிது ஷார்ப்பாக இல்லை...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/153842835912349353-7748300978951725435?l=malargall.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://malargall.blogspot.com/feeds/7748300978951725435/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=153842835912349353&amp;postID=7748300978951725435' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/153842835912349353/posts/default/7748300978951725435'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/153842835912349353/posts/default/7748300978951725435'/><link rel='alternate' type='text/html' href='http://malargall.blogspot.com/2007/11/pit.html' title='PIT நவம்பர் மாத புகைப்படப் போட்டிக்கு : முதல் தடவையாக !'/><author><name>மோகனா</name><uri>http://www.blogger.com/profile/10206294980960996941</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_9nysbCErfEE/SCc0lV224EI/AAAAAAAAENE/T09e-Q_vDbE/S220/DSCF0066.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-153842835912349353.post-2789421737632132519</id><published>2007-11-02T11:28:00.000-07:00</published><updated>2007-11-04T21:46:00.620-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><title type='text'>கற்றது தமிழில்...</title><content type='html'>நான் படித்தது தமிழ் வழிக்கல்வி, சுமார் இளநிலை வரையிலும் கூட தமிழில் தான் முழுதாக விரிவுரை செய்வார்கள், முதுகலையில் கூட குறிப்பிடத்தக்க அளவில் தமிழில் விரிவுரை இருக்கும். இந்த நிலையில் ஆங்கிலம் பேச வாய்ப்புகள் சிறிதானதால் என்னைப் போன்றவர்கள் வேலை வாங்க படும்பாடு, பெரும்பாடு. தமிழில் பள்ளிக்கல்வி முடித்து தொழிற்படிப்பில் சேரும் மாணவர்களின் நிலையும் துன்பம் தான், சில பல அவமானங்கள் கூட இருக்கும் அதற்கு தனி பதிவு தான் போட வேண்டும், சரி தமிழ் வழியில் படித்தாலே இத்தனை துன்பம் எனும் போது, தமிழ் மட்டும் படித்தால் எத்தனை துன்பம்?, அதை ஒருவர் படமாக்கியுள்ளாரே எப்படி செய்துள்ளார் பார்ப்போம் என்று போனால், படம் நான் எதிர்பார்த்த நிலையில் இல்லாததற்கு நான் மென்துறையில் இருப்பது காரணமல்ல...&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தில், கலையில் ஆர்வமுள்ளவர்கள், சில நல்ல இலக்கியங்களைப் படிக்கும் போதும், ஏன் சில தமிழ் அய்யாக்களைப் பார்க்கும் போதும் தமிழ் படிக்க ஆசைப்படுவார்கள், என் தம்பி கூட சிவகாமியின் சபதமோ, அல்லது ஏதோ ஒன்றைபடித்துவிட்டு சிலை செய்ய கத்துக்க போறேன், கலைக்கல்லூரியில் சேரப்போறேண்னுட்டு திரிந்தான், அது இயல்பு... அந்த படத்தில் வரும் நாயகனுக்கு சரியான அறிவுரை கிடைக்கலைனு சொல்லலாம், ஆனால் அத்தனை புத்திசாலிப்பையனுக்கு இதை தேர்ந்தெடுத்தால் எந்த வேலை கிடைக்கும்னு கூடவா தெரியாது? சரி தெரியலை, ஆனால் கல்லூரியில் சேரும் போது அந்த வாத்தியார் திட்டுவதிலிருந்தாவது புரிந்திருக்கலாம். தெரிந்தே தேர்ந்தெடுத்த பாதையின் துன்பங்களை அனுபவிக்கத்தானே வேண்டும்... புல் விலைவிச்சிட்டு, நெல் விலைக்கு விற்க முடியலைனு துன்பப்படறதுல எந்த அர்த்தமும் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;`வாங்கும் சக்தியுள்ளவனே வாழத் தகுதியுள்ளவன். ஏங்கும் சக்தியுள்ளவன் இறந்து போகட்டும்'  என்று IT துறையினர் நினைப்பதைப்போல் காட்டியுள்ளார்கள், அது அவர் செய்த தவறு.&lt;br /&gt;&lt;br /&gt;"தான் வாழ்கின்ற காலத்தில் தானும் உள்ளிட அடங்கியுள்ள சமூகத்தில் ஏற்படுகிற மாற்றங்களை &lt;strong&gt;ஏற்கனவே தானும் தனது சமூகமும் வரித்துக்கொண்ட&lt;/strong&gt; முன் முடிவுகளுக்கு ஆட்படாமல் திறந்த மனதோடு ஏற்கவும் புரியவுமான மனப்பக்குவமும் கலைஞனுக்கு வேண்டும்".&lt;br /&gt;&lt;br /&gt;அவன் அங்கு தமிழ் படித்ததால் கோபமா அல்லது அது சாதாரண பொறாமையா? இதை தமிழ் படித்ததால் ஒருவன் படும் பாடமாகக் காட்டவில்லை, இந்த IT சார்ந்த சமுதாயத்தால் அவன் பாதிக்கப்பட்டதைப்போல் காட்டியுள்ளார், இரண்டிற்கும் வேறுபாடு உள்ளது... இந்தப் படத்தைக் கொண்டு சென்ற விதம் IT பற்றிய ஒரு தவறான கண்ணோட்டத்தை பார்ப்பவர்கள் மத்தியில் ஊட்டுகின்றதோ எனப்படுகின்றது. இத்தனை கவித்துவமாக படமெடுக்கத் தெரிந்த அவர் ஒரு தவறான பார்வையில் IT துறையைக் காட்டியது சிறிது வருத்தமே... &lt;br /&gt;&lt;br /&gt;இங்கு சில கருத்துக்கள் : &lt;br /&gt;&lt;br /&gt;"வறியவர்களின் வாழ்க்கை நிலைமைகளில் மேம்பாடு ஏற்படுகின்ற வேகத்தைவிட மிகவும் விரைவாக தனவந்தர்கள் மேலும் தனவந்தர்களாகிக் கொண்டுபோகும் இந்தப்போக்கை மாற்றியமைப்பதற்கு அரசாங்கங்கள் அவற்றின் கொள்கைகளில் பலமாற்றங்களைச் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது &amp; வறியவர்களின் வருமானங்களை அதிகரிப்பதற்காக விவசாயத்துறையில் கூடுதலான அளவில் அரச முதலீடு செய்யப்பட வேண்டும்; கிராமிய மற்றும் முறைசாரா நகர பொருளாதாரங்களில் தொழில் வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும்; அடிப்படைக் கல்விக்கான செலவினங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் " &lt;br /&gt;&lt;br /&gt;மேலும்,'ஆசிய அபிவிருத்தி வங்கியின் அறிக்கை- பிரதான குறிகாட்டிகள் 2007' என்ற தலைப்பிலான அறிக்கையில் நன்கு கல்வி கற்ற பிரிவினருக்குச் சாதகமாகவும் தேர்ச்சித் திறமை குறைந்த பிரிவினருக்கு பாதகமாகவும் உலகமயமாக்கல் அமைந்திருப்பதன் விளைவாகவே சமத்துவமின்மை அதிகரித்து வருகின்றது என்று சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;"இந்தியாவின் தெற்கிலும் மேற்கிலும் தொழில் வளர்ச்சி நன்றாக இருக்கிறது. வடக்கிலும் கிழக்கிலும் அந்த அளவுக்கு ஏன் இல்லை என்பது புதிராக இருக்கிறது. இந்தியாவின் தொழிலதிபர்கள் தங்களுக்குள் குழு ஏற்படுத்திக் கொண்டு, குழு மனப்பான்மையிலேயே செயல்படுகிறார்கள், புதியவர்கள் வருவதைத் தடுக்கிறார்கள், உற்பத்தி, விலை ஆகியவற்றை நிர்ணயிக்கிறார்கள் என்று பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன. அரசு சலுகை தரும் துறைகளிலும், பகுதிகளிலும் மட்டுமே முதலீடு செய்ய அவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இப்படி "மடி ஏந்தும் முதலாளித்துவத்தால்" தொழிலும் வளராது, சமூக மாற்றமும் ஏற்படாது. ஆனால் நவீன முதலாளித்துவத்துக்கு இது முதல் படியோ என்ற கேள்வியும் பிறக்கிறது. நுகர்வோரையும் சிறு வர்த்தகர்களையும் இவர்களிடமிருந்து பாதுகாக்க நாம் போதிய நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோமா என்ற கேள்வியும் எழுகிறது."&lt;br /&gt;&lt;br /&gt;- பிரதமர் மன்மோகன் சிங்... &lt;br /&gt; &lt;br /&gt;இதன்படி உலகமயமாக்கலில் தொடங்கி, பல காரணங்களுடன், ஏற்றத்தாழ்வு மிக்க சமுதாயம் என்பது மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று அதை இப்படி சாதாரண ஒரு பொறாமை சார்ந்த இயலாமையாக காட்டியுள்ளது, சாதாரண மக்களுக்கான தவறாக்கப்பட்ட ஒரு காட்சி அமைப்பே என்று தான் படுகின்றது. சமுதாய மாற்றங்களை சுயநலமாக்கி பணம் பார்த்ததைப்போல் உள்ளது இந்த படம்...&lt;br /&gt;&lt;br /&gt;நாயகனை புத்திசாலி என்றும், சென்னை வாசியாகவும் காட்டி மட்டும் சில வாதங்களிலிருந்து இயக்குனர் தப்பித்துக்கொண்டார், படித்த மக்கள் மட்டும் முன்னேறினால் போதுமா என்ற வாதம் கூட வரலாம், நாமனைவரும் படித்தவர்கள் என்பதால் அப்படி யோசிப்பதில்லை, ஆனால், ஒரு தாய் புத்திசாலி அல்லது நன்றாக சம்பாதிக்கும் பிள்ளையை மட்டுமா நேசிப்பாள் அப்படித்தான் இதுவும், நம் நாடு சார்ந்த ஒரு பிரச்சனை இது... இதை அடித்தலமாகக் கொண்டு படத்தை எடுத்திருந்தால் இயக்குனரை பாராட்டியிருக்கலாம் அதைவிட்டு இப்படிக்காட்டியுள்ளது ஒரு பொறாமச் சாரளாகத்தான் உள்ளது, அடித்தட்டு மக்களின் மனதில் இது தவறான கண்ணோட்டத்தில் IT யை பதிய முயற்சி செய்கின்ற ஒன்று. &lt;br /&gt;&lt;br /&gt;மற்ற அதிக பணம் சம்பாதிக்கும் வேலையிலுள்ள மக்களை விட இதில் உள்ளவர்களால் சில பல நன்மைகளும் உண்டு தான், சரியாக வரி(30%) செலுத்துவது அதில் முக்கியமான ஒன்று, அரசாங்கத்திற்கு ஏமாற்றாமல் பெரும்பாலான மென் துறையினர் வரி கட்டிவிடுவார்கள், அதிக அளவு பண அளவில் மற்றும் கல்வியில் பிறருக்கு உதவுவதும் இவர்கள் தான். &lt;br /&gt;&lt;br /&gt;சில நண்பர்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சம்பளத்தை விட 2 மடங்கு குறைவாக கூட கேட்டிருப்பார்கள் (expected salary) என்ன பண்ணுவது, நான் செய்யும் வேலையைத் தான் சிலர் செய்வார்கள் என்னை விட 3 மடங்கு சம்பளத்துடன், நான் பொறாமை பட முடியுமா? என்னை விட அறிவு குறைந்தவர்கள் கூட நிறைய சம்பாதிப்பார்கள், இவையெல்லாம் சந்தர்ப்பம் சார்ந்த ஒன்று தான், எனக்கு இந்த வேலை வேண்டாமென்றோ, பணம் வேண்டாமென்றோ கூறமுடியாது, பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது, இன்பமாய் இருக்கத்தான் தோன்றும். இதில் என்ன தவறு?&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனையோ சாப்ட்வேர் மக்கள் சின்ன சின்ன கடையில் நல்ல ருசியான சாப்பாட்டிற்காக ஏங்கிக்கொண்டு உட்கார்ந்திருப்பதை இங்கு பெங்களூரில் காண முடியும், பீஸாகட், எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பனியன்களையும் தாண்டி ஒரு உலகம் மென் துறைக்கு உண்டு, அது மிகவும் துன்பமானது. கலாச்சார சீரழிவுனு எல்லாம் சொல்ல முடியாது, இந்த எளிதான செய்தி பரவ வாய்ப்புள்ள இந்த காலக்கட்டத்தில் வெளிச்சமாய்த் தெரிகின்றது அவ்வளவு தான், இது அப்பொழுதிருந்தே பரவலாக இருந்த ஒன்று தான். &lt;br /&gt;&lt;br /&gt;மற்றபடி பெண்கள், இளைஞர்கள் நிறைய சம்பாதிப்பதால் தன் போக்கிற்கு இருக்கின்றார்கள் அது இது என்று கூறலாம்,(பணியனில் பொறிக்கப்பட்டதை பற்றி பேசினால் இது ஈயமாகிபோகும்) அது இப்போது பேசத்தேவையில்லாத ஒன்று மற்றும் பொதுவாக சுதந்திரம் நிச்சயமாக தேவையான ஒன்றும் கூட. ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தை நம் சந்ததிகளுக்கு, பணத்தால் (IT துறை  கொடுத்துள்ள)மட்டுமே நம்மால் கொடுக்க இயலாமல் போய்விடுமா? அல்லது ஏற்றத்தாழ்வுமிக்க சமுதாயம் IT துறையால் மட்டும் உருவானதா? &lt;br /&gt;&lt;br /&gt;கிரெடிட் கார்ட் வங்கிகொங்க, வங்கிகொங்கனு அலைவானுங்களாம் சார் சார்னுவாங்களாம், இங்கு பெங்களூரில் அதற்கென அதிக சம்பளத்துல ஆட்கள் உண்டு, அதுவும் ஒரு வேலை வாய்ப்பு தானே, அதை செய்வதில் என்ன குற்றம்? எல்லாருமே சார் சார்னு யார் பின்னாடியாவது போய் தான் ஆகனும். லெவல்ல வேணா வித்யாசம் இருக்கும், இவை படமாக்கப் பட்ட விதம் எல்லாமே ஈர்ப்பை சார்ந்த ஒன்றாகத் தான் இங்கு தெரிகின்றது... &lt;br /&gt;&lt;br /&gt;ரோட்ல தண்ணி பக்கத்துல நின்னா சேரு அடிக்கத் தான் செய்யும், தமிழ் படித்தவன் மேலோ, வருமையானவன் மேலோ மட்டுமா அடிக்கிறது? நல்ல சம்பளத்தில் இருக்கும் நண்பனைப் பார்த்த எரிச்சலில் புகை பழகிக்கொள்கின்றாராம்...! சந்தர்ப்பத்தால் பாலியல் தொழிலாளியாய் ஆகும் நாயகியைக் கைப்பிடிக்கும் அளவு அறிவும், பண்பும் இருக்கும் ஒருவன், இந்த விசயங்களை யோசிக்காமல் போவானா? &lt;br /&gt;&lt;br /&gt;அதெல்லாம் போகட்டும்... ஒரு பக்கமாக மட்டும் யோசித்துள்ளார் இயக்குனர், நான் காய் கடை வைத்துள்ளேன் என்றால் நேற்று 1 ரூபாய்க்கு வாங்கி 2 ரூபாய்க்கு விற்றிருபேன், இன்று 3 ரூபாய்க்கு வாங்கி 4 ரூபாய்க்கு விற்பேன், எப்படியும் அந்த 1 ரூபாய் எனக்கு இலாபம், அது போல அன்று வாங்கிக்கொண்டிருந்த அதே அளவு தான் கொத்தனார்களும், கூலிகளும் ஏன் வேலைக்காரர்களும் இன்றும் வாங்குகின்றார்களா என்ன? இல்லையே, என் வீட்டில் வேலையாளுக்கு நான் 500 ரூபாய் தருகின்றேன், சுடிதார் தைக்க தையல் கூலி 140 ரூபா, வாடகை வீடு பார்க்க புரொக்கருக்கு, பாலுக்கு, அயர்னுக்கு, சலவைக்கு, வண்டி ரிப்பேர், பூக்கள், ஜாமான்கள்,சாப்பிட்டால் டிப்ஸ், பார்க்கிங்க்கு என எல்லா பக்கங்களும் பணம் போய்க்கொண்டு தான் இருக்கின்றது அதிக அளவில்... IT மக்கள் சொம்பேரியா இருக்கும், அதிகம் செலவழிக்கும் பட்சத்தில் பணம், நாலாபக்கமும் போகத்தான் செய்யும், எவரவர் வேலை செய்கின்றார்களோ(சாதாரணமோ,பெரிததாகவோ) அவரவர்களுக்கு கிடைக்கும் பணம் கூட கனிசமாக அதிகரித்து தான் உள்ளது... வேரு யாரைத் தான் இயக்குனர் குறிப்பிடுகின்றார், குடித்துவிட்டு தூங்கிக்கொண்டிருப்பவனை எழுப்பி இந்தா தூங்க பணம் வைத்துக்கோ என்றா கூற முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;அரசு ஊழியர்கள் விசயங்களை நானும் யோசித்துள்ளேன் ஆனால் அது அரசாங்கம் சார்ந்தது, அதில் நான் போய் தலையிட முடியாது. சில பல வேலைகளை பணத்திற்காக மட்டும் பார்க்க முடியாது, வேலையிலுள்ள ஒருவன் இறந்தால் அவருக்குப் பதில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசாங்கம் வேலை கொடுக்கும், ராணுவத்திலுள்ள ஜனரலுக்கு கூட சம்பளம் கம்மி என்று ஒருவர் எழுதியுள்ளார், IAS, IPS கூடத்தான் கம்மியாக சம்பளம் வாங்கலாம் அவர்களுடன் ஒப்பிட முடியுமா? அவருக்கு கிடைக்கும் மரியாதை இவர்களுக்கு கிடைக்குமா?&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் உழைப்பிற்கானதல்ல, இலாபத்தினால் ஆனது வியாபாரம் மற்றும்  இலாபத்தினால் ஆனது வருமானம் என்பது இயக்குனருக்கு தெரியாமலா இருக்கும்., பணம் கொழிக்கும் சினிமா துறையில் இருந்து கொண்டு? இதுவும் கூட ஒரு வியாபாரயுக்தி தானே தவிர, சமுதாயத்திற்கு நல்லது சொல்வோம் என்ற மனப்பாடாகக் காணப்படவில்லை... &lt;br /&gt;&lt;br /&gt;கவித்துவமான காதலில் வாழ்ந்துள்ள இயக்குனர், கலை நயமிக்க காட்சியமைப்புகள், எளிமையான நடிகர்கள், மிக மிக அர்ப்புதமான இசை,பாடல்கள் மற்றும் அவை படமாக்கப்பட்ட விதம், அருமையான தொழில் நுட்பத்தில் ஒரு அழகிய பூஞ்சோலை அமைத்து, அதைச்சுற்றி மின் வேலி அமைத்தைப் போலுள்ளது அந்த போறாமைச்சாரள்... கண்களில் நீர் வரவைக்கும் அருமையான, ஒரு சகாப்த்தம் இந்த படம்., என்றாலும் இதில் மறைந்துள்ள ஏமாளியாக்கும் திறமை என்னை கடைசியில் ரசிக்க வைக்கவில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/153842835912349353-2789421737632132519?l=malargall.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://malargall.blogspot.com/feeds/2789421737632132519/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=153842835912349353&amp;postID=2789421737632132519' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/153842835912349353/posts/default/2789421737632132519'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/153842835912349353/posts/default/2789421737632132519'/><link rel='alternate' type='text/html' href='http://malargall.blogspot.com/2007/02/blog-post.html' title='கற்றது தமிழில்...'/><author><name>மோகனா</name><uri>http://www.blogger.com/profile/10206294980960996941</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_9nysbCErfEE/SCc0lV224EI/AAAAAAAAENE/T09e-Q_vDbE/S220/DSCF0066.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-153842835912349353.post-1148421319717100103</id><published>2007-10-22T11:50:00.000-07:00</published><updated>2007-11-04T21:44:49.109-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><title type='text'>பின்நவீனத்துவமும் கபேஹ்(gabbeh)கின் கலை நுணுக்கமும்...</title><content type='html'>கபேஹ்(gabbeh) என்றொரு ஈரானியப்படம் பார்த்தேன், ரமேஷ்-பிரேம், சாருநிவேதிதா  புத்தங்களில் பின்நவீனத்துவ புரிதலுக்காக தேடல்கள் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில், அந்தப் படம் பின்நவீனத்துவம் என்பதை அத்தனை அழகாக ஒரு "கலை"(art)போல் செதுக்கித் தந்திருந்தது,என் புரிதலின் எல்லையில்...&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வயது முதிர்ந்த தம்பதிகள் ஒரு "கார்பெட்டை"க் கழுவுபது போல் தொடங்குகின்றது அந்தப் படம் அந்த கார்பெட்டின் பெயர் தான் கபேஹ். அதிலிருந்து ஒரு பெண், அந்த பாட்டியைப் போலவே உடையணிந்து வருகின்றார், அந்த உடை நீல நிறத்தில் அழகான வேலைப்பாடுகளுடன் உள்ளது, அவர்களுடன் சேர்ந்து கொண்டு அவளும் அதைக் கழுவிக்கொண்டே தன் கதையைக் கூறுகின்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாடோடிக் கூட்டத்தினர் ஆடுகளை மேய்த்து அதன் கம்பளியெடுத்து கார்பெட் செய்கின்றார்கள், அந்த கூட்டத்தினரைப் பற்றியது தான் கதை.. அந்த கூட்டத்திலுள்ள ஒரு பெண்(கதாநாயகி) தன்னை தொடர்ந்து குதிரையில் வரும் ஒருவனை விரும்புகின்றாள், அவன் தன்னுடன் வந்துவிடு என்று கூறும் போதெல்லாம் தன் தந்தை துப்பாக்கியால் சுட்டுவிடுவார் என்று கூறி மறுத்துவிடுவாள். அவளுடைய அப்பா அவள் திருமணத்தை சித்தப்பா திருமணம் செய்து கொள்ளாததாலும், அவள் தாய் குழந்தைப் பெற இருப்பதாலும் தள்ளிப் போட்டிருப்பார். அவள் ஒரு கார்பெட்டில் குதிரையும் அதன் மேல் ஒரு ஆணையும், தன்னையும் வரைந்து அதை எப்போதும் சுமந்து கொண்டு சென்றுகொண்டிருப்பாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் சித்தப்பா பாத்திரப்படைப்பு அழகானது, அவர் தனக்கேற்ற பெண் இல்லாததால் திருமணம் செய்யாமலிருப்பார், பிறகு ஒரு பாடகியைப்பார்த்து, அவரும் ஒரு பாடல் பாடி அவளைத் திருமணம் செய்து கொள்வார். பிறகு தாயின் குழந்தைப்பிறப்பிற்காக அவள் திருமணம் தடை படும். அவள் குழந்தை பெற்ற பின் ஒரு இறப்பு நிகழும், இப்படி பிறப்பு, இறப்பு, திருமணம், காதல் மற்றும் முதிய வயதில் வாழ்க்கை என்று அனைத்தையும் காட்டியிருக்கும் அந்தப் படம், ஒரு அருமையான கவிதை.&lt;br /&gt;&lt;br /&gt;லேன்ஸ்கேப் போட்டு, பகுதியின் அழகை, மிகவும் கவரத்தக்க வண்ணம் படமெடுத்துள்ளார்கள்... வண்ணங்கள், வண்ணங்கள், வண்ணங்கள் படம் முழுவதும் அழகான வண்ணக்கலவைகள் தான், வண்ணங்களுக்காக மலர்களைத் தேடி அலைகிறார்கள். மலர்களை வெந்நீரில் போட்டு சாயமிட்டு விரிப்புகளை செய்கிறார்கள், ஓரிடம் விட்டு, ஓரிடம் செல்கின்றார்கள். இறப்பு என்பதை மிக எதார்த்தமாகக் காட்டியுள்ளார்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;அந்த குதிரை வீரன் அவள் கவனத்தை ஈர்க்க ஓநாய் போல் குரல் கொடுப்பார், அப்போதெல்லாம் அந்த கதாநாயகி அவன் பக்கம் திரும்பி புன்னகைப்பது ஒரு அழகிய கவிதை... இதில் பின்நவீனத்தை எங்கு கண்டாய் நீ என்கின்றீர்களா? &lt;br /&gt;&lt;br /&gt;அவளின் சித்தப்பா நிறங்களைப்பற்றி நாடோடிக் குழந்தைகளின் பள்ளி ஒன்றில் சொல்லிக்கொடுக்கும் காட்சியை நானாக பின்நவீனத்துவமாக புரிந்து கொண்டேன்... அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போது பூச்செண்டிற்காக வலது புறம் கை நீட்டுவார் ஒரு பூச்செண்டு அவர் கையில் வரும் அதை அவர் ஒரு தோட்டத்திலிருந்து எடுப்பதாய் காட்டியிருப்பார்கள்,  வர்ணத்தைக் காட்ட இடது புறம் கை விடுவார் அவர் உள்ளங்கை முழுவதும் நீல வர்ணமாகும், அதை அவர் வானத்திலிருந்து எடுப்பதாய் காட்டியிருப்பார்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://picasaweb.google.com/agnichaaral/vdBmdF/photo?authkey=Ey4U_URXvsA#5124043686780034466"&gt;&lt;img src="http://lh5.google.com/agnichaaral/RxxClbQbXaI/AAAAAAAAAkI/zJIbH1DAU7U/s288/momovgabpi011.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதே போல், முதியவர்களுடன் கதை சொல்லிக்கொண்டிருக்கும் போது, அங்கு சில மலர்கள் அந்த கார்பெட்டைக் கழுவும் போது வருவது போல் காட்டியிருப்பார்கள். அந்த கதாநாயகி அவற்றில் ஒரு பூச்செண்டு தயாரித்து நீட்டுவாள் தன் சித்தப்பாவிற்காக என்று... வர்ணக்கலவையும் தயாரிப்பார்கள், கார்பெட்டிற்கு வர்ணமடிக்க, அங்கு சித்தப்பா எடுப்பது இவற்றைத்தான் என்பது போலிருக்கும், காட்சியமமப்பு... அந்த சித்தப்பாவின் திருமணத்திற்காக இவற்றைச் செய்து அவரை வேகப்படுத்துவது போலிருக்கும் அந்த பகுதிகள்.  இவை ஒழுங்கில்லாத ஆனால் பெருளுள்ள ஒரு தொடர்ச்சியாகவே எனக்குப்பட்டது...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://picasaweb.google.com/agnichaaral/vdBmdF/photo?authkey=Ey4U_URXvsA#5124043691075001778"&gt;&lt;img src="http://lh6.google.com/agnichaaral/RxxClrQbXbI/AAAAAAAAAkQ/ahCTLsnbAkI/s288/momovgabpi008.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இருதியாக கதாநாயகி, அந்த குதிரையில் வருபவனுடன் செல்கின்றாள், அவர்களைப் பின் தொடரும் அவள் அப்பா துப்பாக்கியால் இரு முறை சுட்டுவிட்டு, அவள் சுமந்து கொண்டிருக்கும் "கார்பெட்டை" தூக்கிவந்து கூட்டத்தின் முன் போடுகின்றார், என்று அந்த க்அதாநாயகி தன் கதையை முடிப்பாள்... அப்போது, அந்த பாட்டி கூறுவார், நாங்கள் இறக்கவில்லை தன் தங்கைகள் இப்படி செய்யாமலிருக்க அப்பா சொன்ன கதை தான் அது என்று...&lt;br /&gt;&lt;br /&gt;அந்த தாத்தா அவ்வப்போது அந்த கார்பெட் அருகில் சென்று ஓநாய் போல் கத்துகின்றார், உனக்கு கருணையே இல்லை, என்னைக் காதலிக்க மாட்டாயா என்று அந்த தாத்தா, இளம் பெண்ணிடம் கேட்பார், பிறகு அந்த கார்பெட் அருகில் சென்று ஓநாய் போல் கத்துவார்... அந்த குரல் தான் அவர்கள் இளமையில் இருக்கும் போது கேட்பதைப் போல் காட்டியிருப்பார்களோ என்று தோன்றும், ஏனென்றால் அந்த நிகழ்காலத்தில் அந்த குதிரை கதாநாயகனை அருகிலோ, அப்படி கத்துவது போலோ காட்டமாட்டார்கள். அவ்வப்போது நீ அழகாக இருக்கின்றாய், என்னைத் திருமணம் செய்து கொள்கின்றாயா என்று, அந்த பாட்டியின் முன் தாத்தா, கதாநாயகியிடம் கெட்கும் போது அந்த பாட்டி பொறாமைப்படுவார்கள் அந்த அழகே தனி தான்..&lt;br /&gt;&lt;br /&gt;அந்த படம், படமாக்கப்பட்ட இடங்களும், காட்சிகளும் மிக அருமையானது, ஈரானின் அழகிய பக்கங்கள் முழுவதையும் படமாக்கிவிட வேண்டும் என்று செய்ததைப் போலுள்ளது அந்த படம். அந்த கதாநாயகி "வாழ்க்கை வர்ணமயமானது(life is colorful)" என்று கத்துவது போல் காட்டியிருப்பார்கள், அது போலத்தான் அந்த படம் முழுவதும் வர்ணமயமாக உள்ளது... ஒரு கவிதை போல் செதுக்கியுள்ள அந்த படம், ஒவ்வெருவருக்கும் ஒவ்வொரு அர்த்தத்தைக்கொடுக்கும் என்று நினைக்கின்றேன்..&lt;br /&gt;&lt;br /&gt;Screenwriter, Editor, Set Designer, Sound Designer &amp; Director: Mohsen Makhmalbaf&lt;br /&gt;Director of Photography: Mahmoud Kalari&lt;br /&gt;Sound: Mojtaba Mirtahmasb&lt;br /&gt;Executive Manager and Still Photographer: Mohammad Ahmadi &lt;br /&gt;Music: Hossein Alizadeh&lt;br /&gt;Cast: Abbas SayyahiShaghayegh JowdatHossein MoharramiRoghayyeh MoharramiParvaneh Ghalandari1996, Color, 72 mins&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/153842835912349353-1148421319717100103?l=malargall.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://malargall.blogspot.com/feeds/1148421319717100103/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=153842835912349353&amp;postID=1148421319717100103' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/153842835912349353/posts/default/1148421319717100103'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/153842835912349353/posts/default/1148421319717100103'/><link rel='alternate' type='text/html' href='http://malargall.blogspot.com/2007/10/gabbeh.html' title='பின்நவீனத்துவமும் கபேஹ்(gabbeh)கின் கலை நுணுக்கமும்...'/><author><name>மோகனா</name><uri>http://www.blogger.com/profile/10206294980960996941</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_9nysbCErfEE/SCc0lV224EI/AAAAAAAAENE/T09e-Q_vDbE/S220/DSCF0066.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-153842835912349353.post-3115600401878478176</id><published>2007-10-14T17:05:00.000-07:00</published><updated>2007-10-21T05:31:55.056-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நட்சத்திரம்'/><title type='text'>எப்போதும் பெண்...</title><content type='html'>கடந்து வந்த பாதைகளில் ஒரு சுமையாக, ஒரு தடையாக சில சமயங்களில் ஒரு தவிப்பாக இருந்தது தான், நான் பெண் என்ற ஒன்று! ஒரு நீண்ட வேகமான பயணத்திற்கு வேகத்தடையாகவும், உணர்வுத்தடையாகவும் இருந்தது தான், நான் பெண் என்ற ஒன்று, அது என் எல்லா நிலைகளிலும் என்னை வெகுவாகப் பாதித்தது. &lt;br /&gt;&lt;br /&gt;இருந்தாலும் உண்மையை அதன் தாக்கங்களுடன் எதிர்கொள்வது தான் வீரம், இயல்பு. பெண் என்ற வட்டத்திற்குள்ளிருந்து வெளியேர வேன்டுமென்பது அல்ல என் ஆசை, ஆனால் அப்படியொன்றை யார் தீர்மாணிப்பது என்பது தான் இங்கு முக்கியம். பெண் என்ற வட்டத்தை என்னால் பெரிதாக்கிக்கொள்ள முடிந்ததே தவிர அதை முற்றிலுமாக என்னால் அழிக்க முடியவில்லை.அந்த வட்டத்தில், அழகான இயலாமையுடன், பெரிதாக்கிக்கொண்டாதாலான வலிகளுடன் என் பயணம் சென்று கொண்டேதானுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் பத்து அடி முன் வைத்தால் என் பெண்மை, ஒரு அடி பின்னால் இழுக்கின்றது ஆனால், சமாளிக்கக்கூடிய இழப்பு. பெண் என்று எப்போதும் தயங்கியதில்லை என்றாலும் சிறகில் கட்டப்பட்ட கல்லைப் போன்றது தான் நான் பெண் என்பது. &lt;br /&gt;&lt;br /&gt;பெண் என்ற வட்டத்தை பெரும்பாலும் உணர்த்திக் கொண்டேயிருப்பது சில பெண்கள் தான்., நான் வட்டத்தில் பெண்ணாகத் தான் உள்ளேன் என்று உணர்த்திக்கொண்டேயிருப்பதும் பெண்களுக்காத தான். ஏனென்றால் குடும்பம் என்ற பொருப்பும், குடும்பத்தின் மீதான அனைத்து உணர்வுகளும்(சென்டிமெண்ட்) பெண்களுக்கே அதிகம்., ஆண்கள் அவை இல்லையென்றால் பெரும்பாலாக ஒரே அடியாக விட்டுவிட்டுப் போவதும், பெண்களே அவற்றைக் கட்டிக்காப்பதும் தான் இதன் காரணம்... &lt;br /&gt;&lt;br /&gt;பெண் என்ற வரையரையில் நான் இழந்த இன்பங்களைக் கொடுக்க ஒரு ராஜகுமாரன் வருவான் என்று என்னால் காத்திருக்க முடிவதில்லை. எல்லா ராஜகுமாரர்களும் பெண் என்ற வட்டத்திற்கான விட்டத்துடன் தான் வருகின்றார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;என் கனவுகளுக்கு வர்ணமடிக்கும், தூரிகைகளும், சாயங்களும் நான் பெண் என்பதை அறிந்துள்ளன., இங்கு நான் அடி எடுக்கும் பாதைகளும் நான் பெண்ணென்று உணர்த்துகின்றன.. போகின்ற வழிகளெங்கும் நான் பெண்னென்பதற்காக அத்தனை அர்த்தங்களும் சற்றே மாறுபட்டு நிற்கின்றன. என்றாலும் நான் பெண்னென்பதை அறியாமல், அறிந்து கொள்ளாமல்(காட்டிக்கொள்ளாமல்) சில இன்பங்களும், துன்பங்களும் வந்து போகின்றன...  &lt;br /&gt;&lt;br /&gt;சுயநலத்திற்காக பெண் என்பதை மறந்துவிடும் மற்றும் தேவையான போது பெண் என்று உணர்த்தும் மனங்களைத்தான் கூறுகின்றேன்(மெய்யாலுமே), எது எப்படியென்றாலும்., நான்  பெண் என்ற ஒரு உண்மை, பொருள் பொதிந்த உண்மை என்னை மட்டுமே சார்ந்தது. பெண் என்பதற்கான விதிமுறைகளை சிலர் கொடுத்திருந்தாலும், சிலவற்றை நான் மீறினாலும் நான் எப்போதும் பெண் தான்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/153842835912349353-3115600401878478176?l=malargall.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://malargall.blogspot.com/feeds/3115600401878478176/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=153842835912349353&amp;postID=3115600401878478176' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/153842835912349353/posts/default/3115600401878478176'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/153842835912349353/posts/default/3115600401878478176'/><link rel='alternate' type='text/html' href='http://malargall.blogspot.com/2007/10/blog-post_14.html' title='எப்போதும் பெண்...'/><author><name>மோகனா</name><uri>http://www.blogger.com/profile/10206294980960996941</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_9nysbCErfEE/SCc0lV224EI/AAAAAAAAENE/T09e-Q_vDbE/S220/DSCF0066.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-153842835912349353.post-2927398751054020506</id><published>2007-10-13T09:44:00.000-07:00</published><updated>2007-10-21T05:32:56.333-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நட்சத்திரம்'/><title type='text'>நவராத்திரியும் அறியாமையும்(பெண்)...</title><content type='html'>நவராத்திரி, கொலு என்பதெல்லாம் பெண் தெய்வங்களான பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகியோர்களின் ஆராதனைக்காக விசேஷமாக நடத்தப்படுகிறது என்பது இப்போது பொதுவான நம்பிக்கை. ஆனால்... இதன் நதிமூலம், ரிஷிமூலத்தைப் பார்த்தால் விஷயமும் வேறு. விசேஷமும் வேறு. அந்த ரிஷிமூலத்தை பார்ப்பதற்கு முன்பு... &lt;br /&gt; &lt;br /&gt;நவராத்திரியின் ஜோடிக்கப்பட்ட கதையைப் பார்த்து விடுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;மகிஷாசுரன் என்றொரு அரக்கன் எருமைத்தலையை உடையவன். தேவர்களுக்கு பெரும் துன்பங்கள் கொடுத்துக் கொண்டிருந்தவன். காரணம் அவன் பெற்றிருந்த ஒரு வரமாம். 'என்னை கொல்ல முடியுமானால் அது ஒரு பெண்ணால்தான் நடக்கவேண்டும் என்பதுதான் வரம். அதாவது... பெண்ணால் என்ன செய்ய முடியும்? பெண் தெய்வங்களே கோயிலை விட்டு வெளியே வருவதில்லை. பிறகு எப்படி நம்மை அழிக்க முடியும்-என்ற நினைப்பு நம்பிக்கை அப்போது தேவர்களிடம் நிலவி இருந்ததால் அந்த அரக்கன் அப்படியொரு வரத்தை கேட்டான். &lt;br /&gt;&lt;br /&gt;தெய்வங்களும்... 'பெண்கள்' மீது வைத்திருந்த அபிப்ராயத்தாலோ என்னமோ வரம் கொடுத்துவிட்டன.பெண்தானே நம்மை அழிக்கவேண்டும். எந்த பெண்ணால் அது முடியும்?... என்ற திமிரில் கொடுமைகள் செய்ய ஆரம்பித்து விட்டான்.&lt;br /&gt;இது சிவனின் மனைவி பராசக்திக்கு எட்டியது. "பெண்தானம்மா அவனை அழிக்க வேண்டும். அது எப்படி முடியப் போகிறது. உன்னால் அவனை அழிக்க முடியுமா?..." என்று பராசக்தியிடம் மற்ற தேவ, தேவதைகள் பிரார்த்திக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பராசக்தி யோசிக்கிறாள். 'நம்மால் முடியுமா?...' பக்கத்து வீட்டு பெண்கள் (!) போன்ற லட்சுமியிடமும், சரஸ்வதியிடமும் ஆலோசிக்கிறாள்.அவர்கள் சொல்கிறார்கள். 'நமக்கு ஏது அவ்வளவு பலம்?... இறந்து போனவர்களுக்கு மோட்சம் கொடுக்கக்கூட வக்கில்லாதவர்கள் நாம். நம்மால் எப்படி ஒரு அரக்கனை கொல்லமுடியும்?..."...என பெண் தெய்வங்களே தங்களைப் பற்றி தாழ்வு மனப்பான்மையோடு பேசுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;சரி பிறகு?... என்ன செய்வது? அப்போது ஒரு கருத்து அங்கே உதிக்கிறது. அரக்கனை அழிக்க வேண்டுமென்றால் ஆண்களின் பலம் வேண்டும். ஆனால், பெண்ணால்தான் அவன் அழிவான் என அவன் தலையில் வரம் விதிவரைந்திருக்கிறது. அப்படியென்றால் என்ன செய்யலாம். தேவர்கள் அத்தனை பேரின் பலத்தையும் நாம் வாங்கிக் கொள்ளவேண்டும். அதன் மூலம் மகிஷாசுரனை அழிக்கவேண்டும். ...என பெண் தெய்வங்களின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இடத்தில் வேதம் சொன்ன ஒரு உண்மையை இங்கே உங்களுக்கு சுட்டிக்காட்டி... புராணத்தை அதனுடன் ஒப்பிட்டுக் காட்ட பிரயாசைப்படுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வேதம் என்ன சொன்னது?... &lt;br /&gt;"ஸ்த்ரீனாம் த்விகனம் ஆஹாரம்&lt;br /&gt;புத்தீஸ் சாபிசதுர் குணம்..."&lt;br /&gt; &lt;br /&gt;அதாவது... பெண்கள் ஆண்களைவிட இரண்டு மடங்கு அதிகமாக சாப்பிடுவார்கள். அதனால் அவர்கள், 4 மடங்கு புத்தியும், பலமும் ஆண்களைவிட அதிகமாக பெற்றிருப்பார்கள் என்றது வேதம்.ஆனால்... புராணத்தில் நடக்கும் பெண் தெய்வங்களின் 'Meeting'-கில் என்ன நடக்கிறது?'ஆண்களின் பலத்தைப் பெற்றால்தான் நாம் பலமாக முடியும். அதன் மூலமாகத்தான் நாம் அசுரனை அழிக்க முடியும்...' என்று பேசுகிறார்கள். அதாவது 'கொடுத்த' பலத்தை புராணம் பலவீனமாக்கியது. &lt;br /&gt;&lt;br /&gt;சரி... விஷயத்துக்கு வருவோம். அனைத்து தேவாதி தேவர்களின் புஜபலம், பராக்கிரம பலம் அனைத்தையும் பெற முடிவு செய்தாள் பராசக்தி.பிரம்மா, விஷ்ணு, சிவன் மற்றும் இந்திரன் உள்பட அனைத்து தேவர்களின் ஆற்றலையும் கேட்டாள் பராசக்தி. நீங்கள் உங்களது அனைத்து பலத்தையும் கொடுத்தால்தான்... நான் அந்த அரக்கனை அழிக்க முடியும். பெண்ணாகிய என்னால் தனித்து இயங்க முடியாது. உங்கள் கூட்டணி எனக்கு வேண்டும். தாருங்களேன் என்கிறாள். &lt;br /&gt;&lt;br /&gt;என்ன செய்வது?... வரம் கொடுத்து மாட்டிக் கொண்டவர்களாயிற்றே. தங்கள் பலத்தை கொடுத்தார்கள். அனைத்து ஆண் தெய்வங்களின் பலத்தையும் உறிஞ்சிய பராசக்தி அந்த அரக்கனை அழித்தாள். உடனே தேவர்களெல்லாம் பராசக்தியை போற்றிப் புகழ்ந்து துதிபாடியிருக்க வேண்டுமே... எங்களைக் காப்பாற்றினாய் என்று அவளின் தாழ் பணிந்திருக்க வேண்டுமே... ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. அந்த பராசக்தி பெண்ணை யாரும் போற்றவில்லை புகழவில்லை. காரணம்...எல்லா பலத்தையும் கொடுத்துவிட்டார்களே... அதனால் தேவர்கள் அனைவரும் அதுவரைக்கும் அப்படியே அசைவற்று பொம்மைகளாய் நின்றார்கள்... &lt;br /&gt; &lt;br /&gt;அதைத்தான் கொலு... கொலு... என்று கொண்டாடுகிறார்கள். அதாவது... `பெண்ணால் எதையும் தனித்துச் செய்ய முடியாது, ஆண்களின் உதவியோடு தான் அவள் காலந்தள்ள முடியும்' என்ற கருத்தைச் சொல்வதுதான் கொலுவின் உள்ளே குடியிருக்கும் நீதி. &lt;br /&gt;இப்படியாக வருஷத்துக்கு 9 நாள்கள் கொண்டாடப்படும் நிகழ்ச்சியைத்தான் கொலு என்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால்... கொலுவின் நதிமூலம், ரிஷிமூலமே வேறு. நாம் கொண்டாடும் கொலு... நமது வாழ்க்கை முறையிலிருந்து வந்ததுதான். ஆனால்... புராணக்காரர்கள் பல ஜோடனைகள் பண்ணி கொலுவின் உண்மையான தத்துவத்தையே கொன்றுவிட்டார்கள். &lt;br /&gt;கொலுவுக்கும், பராசக்திக்கும் சம்பந்தம் இல்லை. கொலுவுக்கும், லட்சுமிக்கும் சம்பந்தம் இல்லை. கொலுவுக்கும், சரஸ்வதிக்கும் சம்பந்தமே இல்லை. பிறகு இதெல்லாம் எப்படி வந்தது?&lt;br /&gt;&lt;br /&gt;பழங்கால தமிழ் மன்னர்கள் யுத்தத்துக்கு தயாராவதற்கு முன் பல விஷயங்களை சிந்திப்பார்கள். இப்போது போன்று அப்போதெல்லாம் நினைத்த உடனே பீரங்கிகளையும், யுத்த தளவாடங்களையும் தயாரித்துக் கொண்டு யுத்தத்தில் இறங்கிவிட முடியாது. சீதோஷ்ண நிலையை பொறுத்து தான் யுத்த தந்திரமே வகுக்கப்படும். ஏனென்றால், இயற்கையை அனுசரித்து வாழ்ந்த, வாழவேண்டிய கட்டாயத்தில் இருந்த காலம் அது. &lt;br /&gt;அதில் மழைதான் மிக முக்கியமான அம்சம். எத்தனை பெரிய மன்னனாக இருந்தாலும் மழைக்காலத்தில் போர் தொடுக்க யோசிப்பான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனென்றால்... காயும் சூரியனை தாங்கிக் கொண்டு போர் நடத்திவிட முடியும். ஆனால்... பேயெனக் கொட்டும் மழைக்குள் திட்டம், தந்திரம், தாக்குதல், வியூகம் எல்லாமே தலைகீழாக மாறிப் போய்விடக்கூடிய காலம் அது. &lt;br /&gt;&lt;br /&gt;இத்தனை காரணங்களால்... மன்னர்கள் தங்கள் சேனைகளையும், யுத்த தளவாடங்களையும் மழைக்காலத்தில் பத்திரப்படுத்தி வைப்பார்கள். வரிசையாக அவற்றை நிறுத்தி வைத்திருப்பார்கள். அதை பார்ப்பதற்கே ஒரு கம்பீரமாக, அழகாக வசீகரமாக இருக்கும். &lt;br /&gt;தனக்கு வெற்றி தேடித்தரும் செல்வங்கள் இவைதான் என்பதால்... படைத்தளபதியும், சேனாதிபதிகளும் அந்தப் போர் ஆயுதங்களை பழுது நீக்கி, புதிதாக்கி யுத்தத்துக்கு தயார் ஆவார்கள். வெற்றித் தேடித்தரவேண்டும் என்று வீரத்தோடு தங்கள் படைக்கலங்களுக்கு வணக்கம் செலுத்துவார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;மழை மெல்ல முடிந்ததும்... பதுங்கியிருந்த புலி பாய்வதுபோல பாய்ந்து எதிரிகளை வெல்வார்கள். இதுதானப்பா கொலுவின் ரிஷி மூலம், நதிமூலம் உண்மையான மூலம் எல்லாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைப் பார்த்த பிராமணர்கள் தான்... இந்த தத்துவம் நன்றாக இருக்கிறதே. இதை பகவான் பெயரைச் சொல்லி பயன்படுத்தினால் இன்னும் நன்றாக இருக்குமே? என யோசித்தார்கள்.உண்டானது நவராத்திரி. 9 நாள் முடிந்ததும்... வெற்றிக்காக போருக்கு புறப்படுவதை விஜயதசமி ஆக்கினார்கள்.&lt;br /&gt; &lt;br /&gt;இதில் லட்சுமி எங்கிருந்து வந்தாள்? பார்வதி எங்கிருந்து வந்தாள்? சரஸ்வதி எங்கிருந்து வந்தாள்? பெண் தெய்வங்களின் புகழ் பாடுகிறேன் என்று சொல்லியே... `ஆண் இல்லாமல் பெண் வாழ முடியாது. சாதிக்க முடியாது' என்று சொல்வதுதான் கொலு(!) தத்துவம். &lt;br /&gt;இந்த கொலு தத்துவத்தை செயல்படுத்துவதில்கூட நமக்குள் பற்பல வேறுபாடுகள். சிவனின் பெண்டாட்டி பார்வதி, விஷ்ணுவை பொம்மையாக்குவதா? அதை நாம் பண்டிகையாகக் கொண்டாடுவதா? என்று வைஷ்ணவர்கள் மத்தியில் ஒரு சங்கல்பம். எனவே, இன்றும் கொலு வைப்பதை வைஷ்ணவர்கள் சம்பிரதாயப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளவில்லை.இத்தனை கதைகளும் ஒரு உண்மையும் கொண்டதுதான் கொலு.. &lt;br /&gt;&lt;br /&gt;இதனைப்போல் உள்ள ஒரு பண்டிகையை பெண்கள் கொண்டாடத்தான் வேண்டுமா? அல்லது அந்த அர்த்தம் தெரிந்து தான் கொண்டாடுகின்றார்களா?&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கட்டுரை நக்கீரனில் வெளிவந்தது, கொலு சம்பந்தமானவற்றை மட்டும் "எடிட்" செய்து தந்துள்ளேன்.. என் வார்த்தைகள் கடைசி இரு வரிகள் தான்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/153842835912349353-2927398751054020506?l=malargall.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://malargall.blogspot.com/feeds/2927398751054020506/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=153842835912349353&amp;postID=2927398751054020506' title='9 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/153842835912349353/posts/default/2927398751054020506'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/153842835912349353/posts/default/2927398751054020506'/><link rel='alternate' type='text/html' href='http://malargall.blogspot.com/2007/10/blog-post_13.html' title='நவராத்திரியும் அறியாமையும்(பெண்)...'/><author><name>மோகனா</name><uri>http://www.blogger.com/profile/10206294980960996941</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_9nysbCErfEE/SCc0lV224EI/AAAAAAAAENE/T09e-Q_vDbE/S220/DSCF0066.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-153842835912349353.post-149955770257602727</id><published>2007-10-12T13:40:00.000-07:00</published><updated>2007-10-21T05:32:24.281-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நட்சத்திரம்'/><title type='text'>பெங்களூருவில் தமிழர்களின் அலும்பு...</title><content type='html'>பெங்களூரில், தமிழர்களுக்கு பிரச்சனை வருவது என்பது சாதாரணமான ஒன்று, எப்படா எதாவது கலாட்டா வரும், தமிழ் மக்களைப் போட்டு அடிக்கலாம் என்று எதிர்பார்ப்பவர்கள் போலவே, கன்னட மக்கள் இருப்பதாய் தோன்றும்(எந்த பிரச்சனை வரட்டும், ஓசூர் சாலையில் ஒரு பேருந்தாவது எரியும், அடிதடி நடக்கும் நம்மாட்கள் மேல்! நம்ம ஆளுங்க மட்டும் சும்மாவா, இங்க கேள்ளுங்க இவர்களின் அட்டகாசத்தை. பெங்களூரில் முக்கியமான சாலைகளில் ஒன்று "ரெசிடென்சி ரோட்" அந்த சாலையில் எழுதப் பட்டிருப்பது "தனித் தமிழ் சேனை"...&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு முக்கியமான இடம் "மகாத்மா காந்தி" சாலையைத் தாண்டி, கஸ்தூரிபாய் சாலையில்(ஆளுங்களை பார்த்தீர்களா, சாலை பெயரில் கூட இருவரையும் பிரிக்காமல் உள்ளதை), நம்ம மக்கள் செய்திருக்கும் வேலையைக் கேளுங்கள்.. இவை பெங்களூரில் மையப் பகுதியில் அமைந்திருக்கும் இடங்கள்... இப்படி செய்தால் யாருக்குத் தான் கோபம் வராது...?&lt;br /&gt;&lt;br /&gt;3 இடங்களில் "தமிழே உலகின் முதல் மொழி" என்றும் 2 இடங்களில் "தனித்தமிழ் சேனை" என்றும் எழுதப்பட்டுள்ளது... அதுவும் நான் பெங்களூரு வந்ததிலிருந்து இவை உள்ளன(3 வருடங்களாக), யாரும் கண்டுக்கமாட்டார்களா அல்லது அழிக்க முடியாத அளவு நம்ம மக்கள் எழுதியுள்ளார்களா தெரியாது. &lt;br /&gt;&lt;br /&gt;அது மட்டுமா, ஏதாவது விசேஷம் வந்து விடக் கூடாது, சத்தமாக தமிழ் பாடல்களை வைத்துவிட வேண்டியது, (ஏதாவது கன்னட பாடல் தமிழில் ரீ-மிக்சாயிருந்தால் போதும் உடனே காப்பி என்று கிண்டல் வேறு) அல்லது ஜோகி(பரட்டை தமிழில்) பாட்டை விட்டால் இவனுங்களுக்கு வேறு பாட்டே கிடைக்காது என்று நக்கல் விட வேண்டியது. கர்நாடகாவில் நல்ல பிரபலமான ஒரு திரைப்பட நடிகரைக்கூட நம் மக்களுக்குத் தெரியாது, அவர்களுக்கோ நம்ம ராம்கி வரை எல்லோரையும் தெரியும். நம்ம ஆளுங்களா ராஜ்குமாரையே(நடிகர்) யாருன்னு கேட்பார்கள்., அவர்களுக்கு வரும் பாருங்க கோபம்,நமக்கு சிரிப்புதான் வரும்னு வைங்களேன்(எனக்கெல்லாம் இங்கு வரும் வரை தெரியாது)&lt;br /&gt;&lt;br /&gt;கன்னடம் தெரிந்தாலும், தமிழில் அல்லது ஆங்கிலத்தில் உரையாட வேண்டியது (என்னையும் சேர்த்து தான்), அதுமட்டுமில்லாமல் கன்னடமெல்லாம் தமிழிலிருந்து தான் வந்தது என்று வேறு கூறிக்கொண்டு அலையவேண்டியது, பேருந்து ஓட்டுநர்களுக்கெல்லாம் வரும் பாருங்கள் கோபம், சென்னையிலெல்லாம் யாருக்கு கன்னடம் தெரியுது/தமிழ் விட்டு எதுவும் தெரியாது, அங்கு வேறு மொழியில் எப்படி பேச முடியும், இவங்க மட்டும் இங்க வந்தும் தமிழ் பேசி அலைவது தான் வேலை என்று கோபப்படுவார்கள். சென்னையிலெல்லாம் பேருந்துகளில் ஆங்கிலத்தில்&lt;br /&gt;&lt;br /&gt;எதாவது ஹோட்டலுக்குப் போனாலோ, ஷாப்பிங்காப்பிளக்ஸிற்கு போனாலோ, சென்னை மதிரி வராது, அங்க உள்ள சாப்பாடு மாதிரி வராது என்று கூறிக்கொண்டே சாப்பிடுவார்கள், நம்ம மக்கள் துவங்கும் ஹோட்டல்களில் தான் அதிக கூட்டமும் இருக்கும்...&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் படம் ஒன்று ரிலீஸ் ஆகக்கூடாது, பலத்த பாதுகாப்புடன் இங்கு வெளிவரும்(சிவாஜிக்கு "போரம்" முன் அத்தனை பாதுகாப்பு)... சிவாஜிபடத்தில் கத்தினால் உதைப்போம் என்று கூறியே உள்ளே அனுப்பிய கதைகளும் உண்டு, கன்னட படங்கள் நம் 60 களில் வந்த படம் போலுள்ளது என்று கிண்டல் செய்தால் அப்படி தான் பண்ணுவார்கள்... &lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் வெருத்துப் போய், ஏண்டா உன் ஊரிலேயே இருக்க வேண்டியது தான ஏன் இங்க வர என்று கேட்டால் போதும், "எங்க ஊரில் எல்லோரும் அறிவாலிகள், அங்கு வேலை கிடைப்பது கடினம், இங்கு உங்க மக்களுக்கு இருக்காதுனு தான் வரோம்" என்பார்கள் நம் மக்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியெல்லாம் செய்தா உதைக்காமலா என்றாலும், உதைத்துவிடுவார்களா...? விட்டுவிடுவோமா... (வாங்கிக் கொள்வோமோ...????) என்றும் மனதில் படுகின்றது...! அதான் நாம... எந்த பெங்களூரு வாழ் தமிழர்களிடம் கேட்டாலும், பெங்களூரு தான் பிடிக்கும் என்று தான் கூருவார்கள்... ஆனாலும் நம் மக்களின் தமிழ் பற்று உள்ளதே புல்லறிக்க வைக்குது போங்க... நம்ம மக்கள் இங்குவிடும் அலும்பு உள்ளதே, உலக மகா அலும்பு...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/153842835912349353-149955770257602727?l=malargall.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://malargall.blogspot.com/feeds/149955770257602727/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=153842835912349353&amp;postID=149955770257602727' title='30 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/153842835912349353/posts/default/149955770257602727'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/153842835912349353/posts/default/149955770257602727'/><link rel='alternate' type='text/html' href='http://malargall.blogspot.com/2007/10/blog-post_12.html' title='பெங்களூருவில் தமிழர்களின் அலும்பு...'/><author><name>மோகனா</name><uri>http://www.blogger.com/profile/10206294980960996941</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_9nysbCErfEE/SCc0lV224EI/AAAAAAAAENE/T09e-Q_vDbE/S220/DSCF0066.jpg'/></author><thr:total>30</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-153842835912349353.post-2169834767578172365</id><published>2007-10-11T16:50:00.000-07:00</published><updated>2007-10-11T04:21:01.066-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொன்னியின் செல்வன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நட்சத்திரம்'/><title type='text'>பொன்னியின் செல்வனும், உடையாரும்</title><content type='html'>பொன்னியின் செல்வன் நான் மிகவும் ரசித்த புத்தகம், நிறையமுறை மீண்டும் மீண்டும் படித்த ஒரு புத்தகம்... &lt;br /&gt;&lt;br /&gt;பொன்னியின் செல்வனில், கல்கி அவர்கள் கடைபிடித்திருக்கும் ரகசியங்களும்(யூகிக்க முடியாத), கதைக்களமும், எழுத்து நடையும், கதாபாத்திர படைப்புகளும் அப்பப்பா மிகவும் ரசித்த ஒன்று... நான் மிகவும் ரசித்து படித்த பகுதிகளை இங்கு குறிப்பிடுகின்றேன் முதலில்..&lt;br /&gt;&lt;br /&gt;* வந்தியத்தேவன், ஆழ்வார்க்கடியானை முதலில் சந்திக்கும் இடம்...&lt;br /&gt;* வந்தியத்தேவன் கந்தமாறனின் அரண்மனையில் புகுவதிலிருந்து, நந்தினி உதவியுடன் அரண்மனைக்கு சென்று, பாதாள வழி மூலம் அந்த ஆற்றை அடையும் வரையிலான இடம்..&lt;br /&gt;* வந்தியத்தேவன் சேந்தன் அமுதனுடன் முதலில் பழகும் இடம்...&lt;br /&gt;* பூங்குழலியைப் பார்க்கும் இடம் மற்றும் அவள் "காதலர்களை"க் காட்டும் இடம்..&lt;br /&gt;* மந்தாகினி தேவியின் கதை...&lt;br /&gt;* அநிருத்தருக்கும், பொன்னியின் செல்வனுக்கும் பெரியம்மைக்கும் உள்ள ரகசியங்கள்..&lt;br /&gt;* சின்ன பழுவேட்டரையருக்கும், பெரிய பழுவேட்டரையருக்கும் நந்தினியால் ஏற்படும் சண்டைகள்..&lt;br /&gt;* படகோட்டி மனைவியின் கதாபாத்திரம்..&lt;br /&gt;* கரிகாலன், நந்தினியின் பால காலம்...&lt;br /&gt;&lt;br /&gt;முக்கியமாக,&lt;br /&gt;&lt;br /&gt;* வந்தியத்தேவன், நந்தினியின் அரண்மனையில்,பாதாள வழி மூலம் செல்லும் இடம்...  &lt;br /&gt;* வந்தியத்தேவன் இலங்கையில் சிறைபடும் இடத்தில் அடிக்கும் லூட்டி, மற்றும் தஞ்சாவூரில் அடிக்கும் லூட்டியும் கூட...&lt;br /&gt;* நடு கடலில் பயப்படும் இடம் மற்றும் பொன்னியின் செல்வனுடன் படகில், பூங்குழலியுடன் செல்லும் இடம்&lt;br /&gt;&lt;br /&gt;மிக மிகப் பிடித்தவை, 50 தடவைக்கும் மேல் படித்தவை,&lt;br /&gt;&lt;br /&gt;* வந்தியத்தேவன் முதலில் பொன்னியின் செல்வனைப்பார்க்கும் இடம்..&lt;br /&gt;* வந்தியத்தேவன், நந்தினி, மணிமேகலை மற்றும் கரிகாலன் ஆகியோர் ஒரு ஆற்றங்கரையில் உள்ள இடம்.&lt;br /&gt;* மந்தாகினி தேவி இறப்பதிலிருந்து, வந்தியத்தேவன் நல்லவனென்று கூறி பெரிய பழுவேட்டரையர் இறக்கும் இடம்...  (இது தான் மிகவும் படித்த இடம்...)&lt;br /&gt;&lt;br /&gt;நான் ரசித்து, நினைத்துப்பார்த்து (வந்தியத்தேவன் இப்படித்தான் போயிருப்பானோ என்று காவேரிக்கரையிலிருந்து கொண்டு யோசிப்பது) மகிழ்ந்த ஒன்று தான் பொ.செ..&lt;br /&gt;&lt;br /&gt;உடையாரைப்பற்றி....&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி ஒரு புத்தகத்தைப்படித்துவிட்டு உடையார் படித்த போது அது அத்தனை ஒன்றும் என்னை ஈர்க்கவில்லை, பெரிய கோவில் மேலுள்ள காதலால் அதைப்படித்தாலும் பொன்னியின்செல்வன் அளவு நன்றாக இல்லை என்று தான் படும்..&lt;br /&gt;&lt;br /&gt;உடையார் எளிய நடையில், எளிதாகப் புரிந்து கொள்ளும் பாத்திரப் படைப்புகளைக் கொண்டது(பாலகுமாரன் ரஜினி பேசுவது போல் எழுதியுள்ள சில இடங்களைத்தவிர).. மேலும் கதாபாத்திரங்களுக்கு இடையில் அத்தனை சார்பு இல்லை.. இங்கு கதைக்களம் வேறு என்பதால் இப்படித்தான் எழுத முடியுமென்றாலும் உடையார் அத்தனை ஈர்க்கவில்லை என்பது தான் உண்மை...&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், அந்த சூழ்நிலையில் ஏற்பட்டிருக்கக் கூடிய துன்பங்களையும், அரசியலையும், பிராமணர்கள் நிலையையும் பாலகுமாரான் அழகாக கற்பனை செய்து பதித்துள்ளார்... சில இடங்களில் என்னை ஈர்த்த சில பக்கங்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;* யானை இறக்கும் இடம், அதனை ஒவ்வொருவரும் எப்படி எடுத்துக்கொண்டு / எடுத்துச்செல்கின்றார்கள் என்ற இடம்&lt;br /&gt;* பாண்டிய நாட்டு அடிமையின் கதாபாத்திரப்படைப்பு&lt;br /&gt;* அரண்மனைப்பெண்களின் பொறாமை மற்றும் நிலை&lt;br /&gt;* ராஜராஜனின் பெண் காதலிப்பதால் வரும் பிரச்சனைகள்&lt;br /&gt;* ராஜராஜியின் காதல்(கண்ணீர்)&lt;br /&gt;* கோயிலுக்கு கல் உடைக்குமிடத்தில் நடைபெறும் இறப்பும், அதனைப்பற்றிய கருத்துகளும்&lt;br /&gt;&lt;br /&gt;என் பாட்டி மற்றும் அம்மாவிற்கு உடையார் தான் பிடிக்கின்றது, எனவே இதனைப் பொதுவில் வைக்கின்றேன்... இரண்டுமே நல்ல நூல் தான் ஆனால் எனக்கென்னவோ பொன்னியின் செல்வன் தான் பிடிக்கின்றது...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/153842835912349353-2169834767578172365?l=malargall.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://malargall.blogspot.com/feeds/2169834767578172365/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=153842835912349353&amp;postID=2169834767578172365' title='9 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/153842835912349353/posts/default/2169834767578172365'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/153842835912349353/posts/default/2169834767578172365'/><link rel='alternate' type='text/html' href='http://malargall.blogspot.com/2007/10/blog-post_4518.html' title='பொன்னியின் செல்வனும், உடையாரும்'/><author><name>மோகனா</name><uri>http://www.blogger.com/profile/10206294980960996941</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_9nysbCErfEE/SCc0lV224EI/AAAAAAAAENE/T09e-Q_vDbE/S220/DSCF0066.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-153842835912349353.post-7927197075691649728</id><published>2007-10-11T11:00:00.000-07:00</published><updated>2007-10-21T05:33:03.588-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நட்சத்திரம்'/><title type='text'>நான் பெருமைப்படும் மலைகோட்டை நகரம்...</title><content type='html'>தமிழகத்தின் மையப்பகுதியில் சென்னை&amp; கன்யாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து சுமார் 320 கி.மீ. தொலைவில், கடல் மட்டத்தி லிருந்து சுமார் 78 மீட்டர் உயரத்தில் உள்ளது திருச்சி மாநகரம். இது தமிழகத்தின் மூன்றாவது பெரிய மாநகராட்சி. காவேரி பிரிந்தோடும் பகுதிகளில் அழகிய கோவில்கள், சிறப்பான கல்வி வழங்கும் பள்ளிகள், பாய்லர் தொழிற்சாலை என்று பல பெருமைகளைக்கொண்டது திருச்சி மாவட்டம்... எனக்கு மிகவும் பிடித்த இரு இடங்கள் என்றால் அது ஸ்ரீரங்கம்(ம)திருவானைக்கோவில்/பெரியகோயிலும் தான்... இப்படிப்பட்ட திருச்சி சங்க காலத்திலிருந்தே முக்கியத்துவத்துடன் திகழ்ந்தது என்பது எனக்கு மிகவும் பெருமைப்படும் விசயமாகப் போனதால் இந்த பதிவு.. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பழம்பெருமை&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டிலுள்ள குறிப்பிடத்தக்க நகரங்களுள் ஒன்று திருச்சிராப்பள்ளி. இந்நகரம் தமிழ்நாட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால் தமிழ்நாட்டின் இதயம் என மக்கள் குறிப்பிடுவர். இப்பகுதியில் பழைய கற்காலத்திற்கும், புதிய கற்காலத்திற்கும் இடையிலுள்ள நுண்கருவிகளைப் பயன்படுத்திய காலத்தைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. திருச்சிராப்பள்ளி இரயில் சந்திப்பின் அருகிலுள்ள நுண்ணலை ஒலிபரப்பு நிலையத்தின்(micro wave station)அருகிலுள்ள திடலில் நுண்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்நுண்கருவிகளின் காலம் சுமார் கி.மு.3000 ஆண்டாகும். இக்கண்டுபிடிப்பிலிருந்து கி.மு. 3000 ஆண்டிலேயே திருச்சிராப்பள்ளியில் மக்கள் வாழத்தொடங்கிவிட்டனர் என்பது தெளிவாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இலக்கியம் காட்டும் வரலாறு&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சங்க இலக்கியங்களில் திருச்சிராப்பள்ளியைப் பற்றிய குறிப்புகள் காணப்படவில்லை. ஆனால் கடைச்சங்க நூல்களுள் ஒன்றாகிய அகநானூற்றில் 'கறங்கிசைவிழவின் உறதைக்குணாது நெடும் பெருங்குன்றம்' என்று உறையூர்க்குக் கிழக்கே ஒரு குன்று கூறப்பட்டுள்ளது. அதன் பெயர் அது அமைந்துள்ள ஊரின் பெயர் அப்பாடலில் குறிக்கப்படவில்லை. ஆயின் சைவ சமயக் குரவர்களாகிய திருஞானசம்மந்தரும், திருநாவுக்கரசரும் அக்குன்றின் மேல் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள சிவபெருமான் மீது பாடியுள்ள பதிகங்களிலே அக்குன்றினைச் சிராப்பள்ளி என்ற பெயரால் அழைத்துள்ளதைக் காண்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;கி.பி ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆட்சிபுரிந்த பல்லவ வேந்தனாகிய முதலாம் மகேந்திரவர்மன் சிராப்பள்ளிப் பெருங்குன்றை ஓரிடத்தில் குடைந்து சிவபெருமானுக்குக் கோயில் எடுப்பித்தான். வடமொழியில் சிறந்த புலமைப் பெற்றிருந்த அவ்வேந்தன் எட்டு சுலோகங்கள் இயற்றி அவற்றைத் தான் எடுப்பித்த அச்சுலோகங்களிலிருந்து தான் புறச்சமயத்திலிருந்து திரும்பிச் சிவநெறியைக் கடைப்பிடித்துச் சைவனாகியதையும் சிராப்பள்ளிக் குன்றின் மேற்குகைக் கோயிலிற் சிவலிங்கத்தை எழுந்தருளிவித்ததையும் குறிப்பிட்டுள்ளான். இச்செய்திகளை நுணுகி நோக்குமிடத்து அம்மன்னனது ஆட்சியின் பிற்பகுதியிலே தான் சிராப்பள்ளிக் குன்றிற் சிவாலயம் அமைக்கப் பெற்றிருத்தல் வேண்டும் என்பதும் அதற்கு முன்னர் அவன் சமண சமயத்தை தழுவியிருந்த காலத்தில் அங்கே சிவாலயம் இருந்திலது என்பதும் புலனாகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஊர்ப்பெயர்க்காரணம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிராப்பள்ளிக் குன்றின் மேலுள்ள உச்சிப்பிள்ளையார் கோயிலுக்குப் பின்புறம் சமண முனிவர்களின் கற்படுகைகள் பல கற்தலையணைகளோடு இருத்தலை இன்றும் காணலாம். இத்தலையணைகளில் அவற்றை உபயோகித்த சமண முனிவர்களின் பெயர் வரையப் பெற்றிருக்கின்றன. அவ்வெழுத்துக்களைக் கொண்டு அவற்றின் காலத்தை கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு எனக் கொள்ளலாம். எனவே கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் குன்றின் மேல் சில சமண முனிவர்கள் தங்கித் தவம் புரிந்து வந்துள்ளமை அறியப்படுகிறது. அவர்களுள் 'சிரா' என்ற முனிவர் ஒருவர் இருந்தமை அங்குள்ள கல்வெட்டுகளால் அறியப்படுகிறது. அம்முனிவர் அத்தவப்பள்ளியின் தலைவராய் இருந்தமைப் பற்றி அது சிராப்பள்ளி என்று முதலில் வழங்கப் பட்டு அவர் காலத்திற்குப் பிறகும் அப்பெயரோடு நின்று நிலவுவதாயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நால்வரும் சிராப்பள்ளியும்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சைவ சமயக்குரவர்களாகிய திருஞானசம்மந்தரும், திருநாவுக்கரசரும் தம் காலத்தில் வழங்கி வந்த சிராப்பள்ளி என்ற அப்பெயரைத் தாம் அக்கோயிலிற் பாடியருளிய பதிகங்களிற் குறிப்பிட்டுச் செல்லுவராயினர். ஆகவே 'சிரா' என்ற சமண முனிவரது தவப்பள்ளியின் பெயராயிருந்த சிராப்பள்ளி என்பது பின்னர் முதலாம் மகேந்திரவர்மன் அங்கு எடுப்பித்த சிவன் கோயிலின் பெயராக மாறிவிட்டமை அறியத்தக்கது. அக்கோயிலின் பெயரே பின்னர் 'திரு' என்ற அடைமொழி சேர்த்து 'திருச்சிராப்பள்ளி' என்ற ஊருக்கும் பெயராக மாறிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;திருச்சிராமலைக் குன்றின் மேல் மகேந்திரவர்மன் அமைத்த குடவரைக் கோயிலில் சிராமலைந்தாதி பொறிக்கப்பட்டுள்ளது. இது கி.பி. 10 - ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அக்கல்வெட்டு சிராமலையைப் பொன்மலை என்றும் திருமலை என்றும் பல பாடல்களில் குறிப்பிடுகிறது. அவ்வந்தாதியின் முதல் பாடல் உறையூர் நகரம் என்றும் சிராப்பள்ளி குன்று அதன் அயலது என்றும் சிராமலையின் பண்டைய நிலையைச் சுட்டுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சிற்றம்பரே சிறாப்பள்ளி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருச்சிராப்பள்ளி மேற்குகைக் கோயிலில் முதலாம் இராஜராஜ சோழனின் 16ம் ஆண்டுக்(கி.பி. 1001) கல்வெட்டொன்றுள்ளது. அக்கல்வெட்டு விக்ரமசிங்க மூவேந்த வேளான் என்பவன் விளத்தூர் நாட்டு ஆலங்குடியில் நிலம் விலைக்கு வாங்கி அதனை உறையூர்க் கூற்றத்துச் சிற்றம்பரிலுள்ள சிராப்பள்ளிக் கோயிலுக்கு அளித்தனன் என்று கூறுகிறது. அதனை ஆராயுமிடத்து அத்தலைவனால் இறையிலி நிலம் வழங்கப் பெற்ற சிவன் கோயில் சிராப்பள்ளி என்னும் பெயருடையது என்பது அவ்வூர் உறையூர் கூற்றத்திலுள்ளது என்பதும் நன்கு புலனாகும். கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இரண்டாம் வரகுண பாண்டியனது ஆட்சியின் 11-ம் ஆண்டில் அக்கோயிலிற் பொறிக்கப் பெற்றுள்ள வேறொரு கல்வெட்டொன்றும் ஊரைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது 'சிற்றம்பர் நகர்' எனவும் 'சிற்றம்பர்பதி' எனவும் குறிப்பிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டில் அம்பர், இன்னம்பர், நல்லம்பர் என்ற ஊர்கள் இருந்ததைப் பலர் அறிவர். அவ்வூர்களைப் போல சிற்றம்பர் என்ற ஊரும் இருந்துள்ளது. அக்காலத்தில் அவ்வூரின் பெயர் மறைந்தொழிந்தது. அவ்வூர் திருச்சிராப்பள்ளி என்னும் பெயருடன் இப்பொழுதும் வழங்குகிறது. எனினும் ஆங்கிலேயர்களது பேச்சு வழக்கின் காரணமாக 'டிரிச்சி' என்றழைக்கப்பட்டு திருச்சி என்று இன்றும் மக்களது பேச்சு வழக்கில் இருந்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;காலப்போக்கில் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருச்சிராப்பள்ளி என்ற பெயர் ஒரு ஊரின் தலைவனுக்கும் இருந்ததாக வீரபாண்டியனின் சிவகாசி செப்பேட்டின் மூலம் அறிகிறோம். அச்செப்பேட்டில் பெண் யானையை வலமாக நடத்திச் சென்றவன் முள்ளிராஷ்டிரத்தில் குலக்கிராமம் என்ற ஊரின் தலைவன். அவன் பெயர் திருச்சிராப்பள்ளி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து பன்னிரெண்டாம் நூற்றாண்டு வரை திருச்சிராப்பள்ளி பல்லவ, சோழ, பாண்டிய மன்னர்களின் ஆளுகையின் கீழ் இருந்தது. கி.பி. 13ம் நூற்றாண்டுல் போசளர்களின் ஆட்சியின் கீழ் வந்தது. போசளர்கள் திருச்சிராப்பள்ளியை அடுத்த கண்ணனூரில் தலைநகர் அமைத்து சோழநாட்டின் பகுதியை ஆளத் தொடங்கினர்.&lt;br /&gt;&lt;br /&gt;பாண்டிய மன்ன முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்(கி.பி. 1251 - 1271) போசளரைத் தாக்கி முன்னோர் ஆட்சிக்குட்பட்டிருந்த சோனாட்டுப் பகுதியைத் தன்னடிப்படுத்த எண்ணினான். அதனை நிறைவேற்றும் பொருட்டுத் பெரும்படையுடன் சென்று அப்போசளர்க்குரிய நகரமாகத் திருச்சிராப்பள்ளிக்கு அருகிலிருந்த கண்ணனூர் கொப்பத்தை முற்றுகையிட்டு வெற்றிபெற்றான். போசளர்கள் மூன்றாம் ராஜராஜசோழன் காலம் முதல் தமக்குரியதாக வைத்திருந்த கண்ணனூர் கொப்பத்தை இழந்துவிட்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;திருநெல்வேலி மாவட்டத்தில் சேரன்மாதேவியிலுள்ள முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் 20-ம் ஆண்டு ஆட்சி கல்வெட்டு(கி.பி. 1288) இவன் மலைநாடு, சோழநாடு, ஈழநாடு, தொண்டை நாடு என்பவற்றை வென்றனன் என்று குறிப்பிடுகிறது. சோழநாடு, நடுநாடு, தொண்டை நாடுகளிலுள்ள பல ஊர்களில் இவன் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. எனவே அந்நாடுகள் எல்லாம் இவன் ஆட்சிக்குட்பட்டிருந்த என்பது தெளிவு. திருச்சிராப்பள்ளி சோழநாட்டில் இருந்தபடியால் இவனது ஆட்சிக்காலத்தில்(கி.பி 1269 - 1311) இவனுடைய ஆளுகையின் கீழிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கி.பி 14ம் நூற்றாண்டில் திருச்சிராப்பள்ளி விஜய நகரப் பேரரசின் ஆளுகையின் கீழ் வந்தது. விஜயநகரப் பேரரசன் இரண்டாம் தேவராயன் இறந்ததும் கலிங்கத்து மன்னன் கபிலேசுர கஜபதி விஜய நகரப் பேரரசன் பல இடங்களையும்கைப்பற்றி இறுதியில் திருச்சிராப்பள்ளியையும் கைப்பற்றினான். கலிங்க மன்னன் கபிலேகரகஜபதிக்குப் பிறகு(கி.பி. 1463 - 64) சாளுவ நரசிம்மனின் ஆட்சி காவிரியின் வடகரையோடு தடைப்பட்டு நின்றுவிட்டது. அவனுக்குப் பிறகு விஜயநகர பேரரசை முறை கேடாகக் கைப்பற்றி அரசாண்ட நரசநாயக்கன் கி.பி. 1496ல் தன் ஆதிக்கத்தைக் கன்னியாகுமரி வரைப் பரப்பினான்.&lt;br /&gt;&lt;br /&gt;விஜயநகர பேரரசுக்குப் பின்னர் ஆட்சி செலுத்திய விஸ்வநாத நாயக்கன்(கி.பி 1529-64) காலத்தில் திருச்சிராப்பள்ளி நாயக்கர் ஆட்சி கீழ் வந்தது. முதலாம் சொக்கநாத நாயக்கன் காலத்தில்(கி.பி. 1659-1682) திருச்சிராப்பள்ளி மதுரை நாயக்கர்களின் தலைநகரமாக்கப்பட்டது. முஸ்லீம்களும் மராட்டியர்களும் திருச்சிராப்பள்ளியின் மீது படையெடுத்தனர். ருஸ்தும்கான் என்ற முஸ்லீம் நாடோடி மன்னன் ஒருவன் கி.பி. 1682ல் திருச்சிராப்பள்ளியைக் கைப்பற்றி நாயக்கரின் அரியணையில் இரண்டாண்டுகள் இன்புற்றான். சொக்கநாத நாயக்கன் ஆட்சியின் இறுதியில் மைசூர் படைகள் திருச்சிராப்பள்ளியை முற்றுகையிட்டன. ஆனால் செஞ்சி, தஞ்சாவூர், மராட்டிய மன்னரின் துணையைக் கொண்டு சொக்கநாதன் மைசூர் படைகளைத் திருச்சிராப்பள்ளியிலிருந்து விரட்டினான்.&lt;br /&gt;&lt;br /&gt;கி.பி. 1732ல் விஜயரங்க சொக்கநாதனின் மனைவி மீனாட்சி அரியணை ஏறினாள். இவள் காலத்தில் ஆற்காட்டு நவாபின் மகன் சப்தரலியும், சந்தாசாகிபும் திருச்சிராப்பள்ளியின் மீது படையெடுத்தனர். கி.பி. 1736ல் மீனாட்சி தன்னுடைய உரிமை முழுவதையும் சந்தாசாகிபுவிடம் ஒப்புவித்தாள். திருச்சிராப்பள்ளி சந்தாசாகிப்பின் ஆட்சியின் கீழ் வந்தது. டியூப்ளேவும் சந்தாசாகிபும், முஜாபர்ஜங்கும் கி.பி. 1749ல் ஒன்றாகக் கூடி அன்வாருதீன்கானை ஆம்பூரில் போரில் கொன்றார்கள். அன்வாருதீன்கான் மகன் முகமதலி திருச்சிராப்பள்ளியை விட்டு ஓடிவிட்டான். அவனைத் துரத்திக் கொண்டு பிரஞ்சுப்படையொன்று திருச்சிராப்பள்ளியை நோக்கி விரைந்தது. இப்போர் ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரருக்கும் நடந்தது. திருச்சிராப்பள்ளியை நோக்கி விரைந்த பிரெஞ்சு அணிகள் தஞ்சாவூரிலேயே களைத்துப் போயின. அதேசமயம் ஆங்கிலேயரின் உதவியைப் பெற்ற முகமதலியின் எதிர்ப்பும் கடுமையாயிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கிலேயரின் படைவலி முழுவதும் தன்வசம் வந்து அடையும் வரையில் முகமது அலி பிரெஞ்சுக்காரரிடம் சமாதானப் பேச்சுப் பேசி காலம் தாழ்த்தி வந்தான். அவனுடைய யுக்தியை டியூப்ளே 1751ல் தான் நன்கு உணர்ந்தான். உடனே தானும் லா என்பவன் தலைமையில் திருச்சிராப்பள்ளியை நோக்கி ஒரு படையை ஏவினான். திருச்சிராப்பள்ளி முற்றுகை நீடித்துக் கொண்டே போனது. ஆங்கிலேயருக்கு மைசூர், தஞ்சாவூர், மராட்டிய தலைவன் முராரிராவும் படைத்துணையை அனுப்பி வைத்தனர். ராபர்ட் கிளைவ் வங்கத்திலிருந்து ஆங்கிலப்படை ஒன்றை திரட்டிக்கொண்டு தமிழகத்தை நோக்கி கொண்டு வந்து ஆற்காட்டை முற்றுகையிட்டு கைப்பற்றிக்கொண்டான். அவனிடமிருந்து தலைநகரை மீட்டுக் கொள்வதற்காக சந்தாசாகிபு ஆற்காட்டுக்கு ஒரு சேனையை அனுப்பினான். கி.பி. 1751ல் கிளைவ் வெற்றி பெற்றான். பிரெஞ்சு படைத்தலைவன் லா ஆங்கிலேயரின் வெற்றியைக் கண்டு திருவரங்கத்திற்கு ஓடி ஒளிந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;திருவரங்கத்தை வளைத்து கொள்ளுமாறு கிளைவ் ஆணையிட்டான் லாவும் அவனுடைய படைகளும் ஆங்கிலேயரால் சிறைபிடிக்கப்பட்டனர். சந்தாசாகிபின் தலை தரையில் உருண்டது. டியூப்ளே ஏங்கி நின்றான். டியூப்ளே எடுத்த முயற்சியை தளர மனமில்லாதவனாய் கி.பி. 1752ம் ஆண்டு திருச்சிராப்பள்ளியை முற்றுகையிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கூறிய வரலாற்று நிகழ்ச்சிகளுக்கும் பின்னர் கி.பி. 1801ம் ஆண்டில் திருச்சாரப்பள்ளி ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் வந்தது. 1947ம் ஆண்டு ஆக்ஸ்ட் 15ம் நாள் இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் தமிழ்நாட்டின் மாவட்டங்களில் ஒன்றாக திருச்சிராப்பள்ளி திகழ்ந்து வருகிறது.&lt;br /&gt;திருச்சிராப்பள்ளியிலும் அதனைச் சுற்றியுள்ள இடங்களிலும் வரலாறு கூறும் கல்வெட்டுகளும், ஆலயங்களும், சிற்பங்களும் செப்புத் திருமேனிகளும், ஓவியங்களும், கட்டடங்களும் ஊரின் பழமையையும் சிறப்பையும் எடுத்துரைக்கும் வண்ணம் அமைந்துள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;உசாத்துத்துணை - ஆய்வில் பூத்த மலர்கள் - அ. அப்துல் மஜீத்&lt;br /&gt;&lt;br /&gt;உப தகவல்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;ராவணனின் சகோதரனான மூன்று தலைகளை உடைய திரிசிரன், இங்குள்ள இறைவனை பூஜித்து பேறு பெற்றதால், 'சிராப்பள்ளி' என்று பெயர் என்றும் கூறுவார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;மலை மீது உச்சிப் பிள்ளையார் கோயிலின் பின்புறம் உள்ள கல் படுக்கைகள், சுமார் 5&amp;ஆம் நூற்றாண்டில் சமண முனிவர்களது வசிப்பிடமாக விளங்கினவாம். சமண முனிவர்களில் ஒருவரது பெயர் சிரா. அவரது பெயருடன் சமணப் பள்ளியை இணைத்து, 'சிராப்பள்ளி' என்று பெயர் ஏற்பட்டதாகவும் காலப்போக்கில் 'திரு' என்ற அடைமொழியுடன் திருச்சிராப்பள்ளி என மாறிய தாகவும் கூறுவர். &lt;br /&gt;&lt;br /&gt; சமண மதத்தில் இருந்து அப்பர் பெருமானால் சைவத்துக்கு மாறிய முதலாம் மகேந்திரவர்மனின் பட்டப் பெயர்களுள் ஒன்றான லலிதாங்குரன் நினைவாக ஒரு காலத்தில் திருச்சி 'லலிதாங்குர பல்லவேச்சர கிருகம்' எனப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt; கயிலாய மலைக்கு தோஷம் உண்டு; அதை ராவணன் அசைத்துப் பார்த்தான். பொதிகை மலைக்குத் தோஷம் உண்டு; அது இசைக்கு உருகிய மலை. சிரா மலைக்கு தோஷம் இல்லை. ஆனால் கயிலாயம் போன்று சிராப்பள்ளி மலையும் மூன்று அடுக்குகள் கொண்டது. எனவே, இதை 'தட்சிண கயிலா யம்' என்பர். &lt;br /&gt;&lt;br /&gt; பூமியின் வயது சுமார் 460 கோடி ஆண்டு. சிரா மலையின் வயது சுமார் 230 கோடி ஆண்டு. இமயத்தின் வயது சுமார் 4 கோடி ஆண்டுகளே என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;உச்சிப் பிள்ளையார் கோயிலிலிருந்து கீழே நோக்கினால், படிக்கட்டுகளும், மலையின் தோற்றமும், விநாயகரின் தும்பிக்கை போல் தோற்றமளிக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீதாயுமானவர் திருக்கோயிலை புனருத்தாரணம் செய்து குடமுழுக்குச் செய்ய உபயமாக பொருளுதவி செய்தவர்களில் ஒருவரது பெயர் 'பிச்சைக்காரன்' என்று பொறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது! &lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கோயிலில் ஆயிரங்கால் மண்டபம், வாகன மண்டபம், சகஸ்ரலிங்க மண்டபம், நூற்றுக்கால் மண்டபம், சித்திர மண்டபம், பதினாறு கால் மண்டபம், மணி மண்டபம் ஆகியவை உள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;சகஸ்ரலிங்க மண்டபத்தில் பல லிங்கங்கள் உள்ளன. இந்த மண்டபங்கள் அனைத்தும் மன்னர்கள் மற்றும் இறை அன்பர்களாலும் வெவ்வேறு கால கட்டங்களில் கட்டப் பட்டவை. &lt;br /&gt;&lt;br /&gt;மலைக்கோட்டை மேல்புறத்தில் உள்ள சறுக்குப் பாதையில் விபீஷணரின் பாதம் படிந்துள்ளதாகக் கூறுகின் றனர். &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டில் உள்ள நான்கு பெரிய லிங்கங்களில் ஸ்ரீதாயுமானவரின் லிங்கத் திருமேனியும் ஒன்று. லிங்கம் மேற்கு நோக்கி இருப்பதால் எதிரில் வழக்கப்படி உள்ள நந்தி கிடையாது. அதற்கு பதிலாக நந்தியம்பெருமான் தெப்பக்குளம் அருகே கோயில் கொண்டுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt; மேற்கு நோக்கியுள்ள இறைவனின் முதுகுப்புறத்தைப் பார்த்தபடி நந்தியும், மேற்கு நோக்கியுள்ளது அதிசயம்தான். &lt;br /&gt;&lt;br /&gt; பங்குனி மாதம் 23, 24, 25 தேதிகளில் இங்குள்ள சிவலிங்கத்தின் மீது கதிரவனின் மாலை நேரக் கதிர்கள் படிவதுண்டு. இதை சூரிய பூஜை என்கின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;இங்குள்ள ஸ்ரீதட்சிணாமூர்த்தி வழக்கமான சனகாதி முனிவர்கள் நால்வருடன் அல்லாமல், அறுவருடன் காட்சி தருகிறார். &lt;br /&gt;&lt;br /&gt; ஆலயத்தின் மேற்பகுதியில் கல்லால் உருவாக்கப்பட்ட சங்கிலி, சிங்கத்தின் வாய்க்குள் கீழே விழாதவாறு சுழலும் பந்து ஆகியவை அந்தக் கால சிற்பக் கலைஞர்களது திறனுக்குச் சான்று. &lt;br /&gt;&lt;br /&gt; சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியமான அகநானூறில், குறுங்குடி மருதனார் என்ற புலவர் திரிசிரா மலையில் இன்னிசை வாத்தியங்கள் பல முழங்க விழாக்கள் நடைபெற்றதாகப் பாடியுள்ளார்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/153842835912349353-7927197075691649728?l=malargall.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://malargall.blogspot.com/feeds/7927197075691649728/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=153842835912349353&amp;postID=7927197075691649728' title='18 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/153842835912349353/posts/default/7927197075691649728'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/153842835912349353/posts/default/7927197075691649728'/><link rel='alternate' type='text/html' href='http://malargall.blogspot.com/2007/10/blog-post_11.html' title='நான் பெருமைப்படும் மலைகோட்டை நகரம்...'/><author><name>மோகனா</name><uri>http://www.blogger.com/profile/10206294980960996941</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_9nysbCErfEE/SCc0lV224EI/AAAAAAAAENE/T09e-Q_vDbE/S220/DSCF0066.jpg'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-153842835912349353.post-4609441387505968942</id><published>2007-10-10T12:34:00.000-07:00</published><updated>2007-10-10T00:12:03.501-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெங்களூரு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நட்சத்திரம்'/><title type='text'>கலாச்சார கடவுள்களும் பெங்களூரு வாழ்க்கையும்</title><content type='html'>பெங்களூரு ஆட்டோ ஓட்டுநர்கள், பெங்களூருவின் வளர்ச்சியை கண் கூடாகப் பார்த்திருப்பார்கள், அவர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் பார்த்திருப்பார்கள் என்றாலும் இவர்களின் சதவீதம் அதிகம்... என் வண்டி மக்கர் செய்யும் நேரங்களில், அலுவலகத்திற்கு ஆட்டோவில் ஏறிப்போவதுண்டு, என்னைப் பார்த்தவுடன் என்ன நினைப்பார்களோ கணிணித் துறையிலாம்மா வேலை பார்க்கிறாய் என்று(சந்தேகமாக) கேட்ப்பார்கள், நானும் ஆமாம் என்றால் போதும் ஒரு புராணத்தை ஆரம்பிப்பார்கள்.. &lt;br /&gt; &lt;br /&gt;"பெங்களூரு முன் போல் இல்லை, கணிணித்துறைக்கு வேலைக்கு வந்தவர்கள் கலாச்சாரத்தைக்(!) கெடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.. பெண்கள் புகைப்பிடிக்கின்றார்கள்,மது அருந்துகின்றார்கள், இரவில் வெளியே சுற்றுகின்றார்கள்.. உன்னைப் பார்த்தால் வித்தியாசமாக இருக்கிறது இது போலவே இருந்து விடம்மா" என்று பேச்சு வாக்கில் அறிவுரை வேறு சொல்வார்கள்.&lt;br /&gt; &lt;br /&gt;எளிமையாக இருக்கும் பெண்களை ஏனோ அனைவருக்கும் பிடிக்கின்றதும் இந்த எதிர்பார்ப்பு, நம்மைச் சேர்ந்தவர்களிடம் மட்டுமல்ல, இந்த சமுதாயத்திலேயே இருக்கின்றது. என் நடுத்தர குடும்பத்து பழக்க வழக்கங்கள் எளிமையை என்னுள் புகுத்திவிட்டன(இப்போது நிறைய சம்பாதித்தாலும்), எதுவுமே பழக்கம் தானே... ஆனால் அழகாக கவர்ச்சியாக உடையணிவது பெரிய தவறொன்றுமில்லை, அது தான் நியாயமும் கூட, அத்தனை பெரிய அலுவலகத்தில் வேலை பார்த்துக்கொண்டு, நிறைய சம்பளம் வாங்கிக் கொண்டு எளிமையாக போகமுடியாது என்பது மிகவும் நியாயமான ஒன்று. ஆனால் அது சிலரின் பார்வையில் வேறுபடுகின்றன.. நான் எளிமையாக உடையணிந்து இருப்பதால் மட்டும் சில பெரிய கடைகளுக்கு போகும் போது எவராவது "தவறுதலாக அணுகும்" நிலையில்(விற்பனை செய்பவர்கள் இந்தமாதிரி ஆட்கள் பார்க்க மட்டுமே வருவார்கள் என்று நினைப்பார்கள்) சற்று கோபம் வரும்... &lt;br /&gt; &lt;br /&gt;அப்படி, எல்லாவற்றிலும் ஒரு இழப்பு இருக்கும். அப்படித்தான் இந்த கலாச்சார அணுகுமுறையும்.  பெண்கள் புகைப்பிடிக்கின்றார்கள், மது அருந்துகின்றார்கள், பப் செல்கின்றார்கள் என்பதெல்லாம் அவரவர் விருப்பம், பெண் செய்வதால் மட்டும் அது எப்படி கலாச்சார அழிவாகப் போகும், எதாவது ஒரு ஆணின் துணையில்லாமல் அப்படிப்போவார்களா என்பது எனக்குத் தெரியவில்லை... &lt;br /&gt; &lt;br /&gt;பெரிய பெரிய ஷாப்பிங் காப்பிளஸ்களில் நானும் கூட பார்த்துள்ளேன் புகைபிடிக்கும் பெண்களை..! தனிமை, குடும்பத்தை விட்டு நீண்ட தொலைவில் பிரிந்திருப்பதாலான சுதந்திரம், கை நிறைய சம்பளம் என்று பல காரணங்கள் இருந்தாலும் இது நல்லதா, கெட்டதா என்று தெரியவில்லை. "பெங்களூரு"வில், கல்லூரிகளும், பள்ளிகளும் உள்ள ஒரு முக்கிய, (ஆனால் மத்தியமான அல்ல) சாலையில் தான் ஒரு சுவரொட்டியைப் பார்த்தேன், அதில் ஓரினச்சேர்க்கைக்கான ஒரு அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டிருந்தது... பெண்களையும் அழைத்து... ஒரு "ஹோட்டலில்", எழுதலாமா வேண்டாமா என்று நீண்ட நாட்களாக யோசித்துக் கொண்டிருந்தேன்.. &lt;br /&gt; &lt;br /&gt;அதை நான் புகைப்படம் எடுத்த போது தான் சிலர் அதைக்கவனித்தார்கள்...! புதிதாக ஒட்டப்பட்டுள்ளது போல...! இதைப்பற்றி எழுதப்போவதில்லை, அந்த அளவு எனக்கு அனுபவம் இல்லை, ஆனால் எழுதப்போவது சார்ந்த ஒன்று., பெங்களூருக்கு வந்து 3 வருடங்களாகின்றது, வலை வீசும் நிறைய ஆண்களைப் பார்த்துள்ளேன்(எனக்கொ, தோழிகளுக்கோ, என் நண்பர்களோ....!) இதையே தொழிலாக வைத்துக் கொண்டு சுற்றும் ஆண்கள், கவர்ச்சிகரமாக பேசிக்கொண்டு, நல்ல வேலையில் இருந்து கொண்டு, நிறைய "நல்ல" கள், ஆனால் நோக்கம் நல்லதாக இருக்கமுடியாது சமுதாயத்தின் கண்ணோடு பார்த்தால்! &lt;br /&gt; &lt;br /&gt;"நான் அவனில்லை" கதைகளெல்லாம் பணத்தை இழப்பதாலும், திருமணம் என்ற பெயரில் அவை நடைபெருவதாலும் மட்டுமே வெளிச்சத்திற்கு வருகின்றன...! பல "அவன்" கள் பரவலாக அனைத்து இடத்திலும் இருந்தாலும், முக்கிய நகரங்களில் அவர்களின் பாதிப்பு அதிகமாக இருக்கும்...!  பெண்களை நியாயப்படுத்தி இங்கு நான் எழுத வரவில்லை, அது சரியென்றும் கூட, ஆனால் கலாச்சாரம், ஆறாம் அறிவு, நடப்பு காரணிகள் என்ற ஒன்றெல்லாம் தாண்டிய ஒன்று தான் ஆசை, மற்றும் பலவீனம்... "நான் 4 நாள் சுற்றினாலோ, 4 தடவை பேசினாலோ போது எப்படிப்பட்ட பெண்களையும் மடக்கிவிடுவேன்" என்ற ஒன்றை நிறைய கேட்டிருக்கின்றேன்... &lt;br /&gt; &lt;br /&gt;அதெல்லாம் இல்லை அப்படியெல்லாம் முடியாது என்று வாதிட்டால், என் நண்பர்கள் அழகான வாதங்களை முன் வைப்பார்கள்... "வள்ளி, குடும்ப வாழ்வு நன்றாக அமையாதவர்களோ, கணவன் சரியாக அமையாதவர்களோ, பணம் பணம் என்று அலையும் கணவன்களால் கவனிக்கப்படாத பெண்களோ அதிகம் இங்கு, நாங்களொன்றும் அப்படியெல்லாம் சென்று மாட்டிக்கொள்ள மாட்டோம்" என்பார்கள்... &lt;br /&gt; &lt;br /&gt;யோசிக்க மற்றும் அவமானப்பட வைத்த ஒன்று இது. சுவாரஸ்யம் இல்லாத ஒன்று, ஒருத்தன் ஏன் ஒருத்தி என்னை ஈர்க்க முடிவதில்லை. என் தோழிகள் பலர் அதுவும் திறமையான, நன்றாக படித்த, வேலையிலுள்ள தோழிகள் சிலர் எப்போதும் அவர்களைவிட புத்திசாலியான மற்றும் அனைத்து வகையிலும் மேலாக உள்ள ஆண்களைத்தான் நண்பர்களாக வைத்திருப்பார்கள். அவர்கள் நல்ல குணமுள்ளவர்களாகவே இருந்தலும், ஆண் நண்பர்கள் அப்படி இப்படி இருந்தாலும் ஏற்றுக்கொள்வார்கள்(நண்பனாக மட்டுமே என்பதை என் பாதுகாப்பிற்காக அல்ல, உண்மையாக இருப்பதால் எழுதுகின்றேன்). இன்றைய நிலையில் அதிகம் யோசிக்கும் ஒரு பெண்ணிற்கு தகுதியில்லாத ஆணை(மற்றும் ஆண்களுக்கும் இது பொறுந்தும்) கொடுக்கும்(திருமணம் செய்து) போது தான் இந்த பிரச்சனைகளெல்லாம்... &lt;br /&gt;&lt;br /&gt;நானே கியர் வண்டி ஓட்டும் போது வண்டியைத் தொடக்கூடப் பயப்படும் ஒருவனை என்னால் எப்படி ரசிக்கமுடியும்... என் வீட்டில் நான் தான் அறிவு குறைவு, அனைவருடனும் என்னால் பேசக்கூட முடியாது ஏன் புரிந்து கொள்ளக்கூட முடியாது, ஆனால் என் பேச்சைக்கூட ஆஆஆ என்று வாய்பிளந்து கேட்கும் ஒருவனை என்னால் எப்படி ரசிக்கமுடியும் அல்லது என்னை அவன் தான் எப்படி ஈர்க்க முடியும்...? ரசித்து ரசித்து சமையல் செய்து, கோலம் போட்டு, கைவினை பெருட்கள் செய்யும் என்னை அவற்றையெல்லாம் ரசிக்கக் கூடத் தெரியாதவன் என்னை எப்படி ஈர்க்க முடியும்... &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கதை படித்தேன், ஒரு பாட்டியைப்பற்றி அந்த தாத்தா "அவளுக்கு ஒன்றும் தெரியாது, அவள் எல்லாவற்றிற்கும் என்னிடம் தான் நிற்பாள்" என்று பேசிக்கொண்டிருப்பார்.. அந்த தாத்தா இறந்த உடன் அந்த பாட்டி தன் காலில் மிகவும் சுலபமாக நிற்பார்கள், அவர்களுக்கு பரவலாக அனைத்துமே தெரிந்திருக்கும். இதை கவனித்த பக்கத்து வீட்டுப்பெண் ஏன் பாட்டை இப்படி என்று கேட்கும் போது "அவருக்கு நான் அவரைச் சார்த்து இருப்பது தான் பிடிக்கும் அதனால் தான் அப்படிச்செய்தேன்" என்று கூறுவார்கள்.நான் நீண்ட நாட்கள் யோசித்த ஒன்று., குடும்ப வாழ்வை இன்பமாக நடத்த அப்படி இருப்பது தான் சிறந்தது என்று அந்த பாட்டி முடிவு செய்ததாகத் தான் படும் எனக்கு... &lt;br /&gt; &lt;br /&gt;கலாச்சாரமென்பது பெண்களை மட்டும் சார்ந்த ஒரு நடப்பு என்பதால், பாதிப்புக்குள்ளாகுவது பெரும்பாலும் பெண்களாகவே உள்ளனர்...! இவை அனைத்தையும் ஒரு ஆண் செய்தால் பெரிதாக எடுத்துக்கொள்ளாது இந்த சமுதாயம்.., ஏன் பெண்களிடம் இந்த எதிர்பார்ப்பு..? "மோக முள்" ளில் நாயகன் நாயகிக்கு இவன் பொருந்த மாட்டான், அவன் பொருந்த மாட்டான் என்று யோசித்தாலும் ஏதும் செய்ய முடியாத நிலையில் இருப்பது போல் தான் இந்த சமுதாயம். பெண்ணிற்கு பாதுகாப்பிற்கு மட்டுமே திருமணம் என்பது நான் நிறைய பார்த்த ஒன்று.,  ஆனால் அவற்றையும் மீறிய அவள் எதிர்பார்ப்புகள், அவளுடைய மதிப்புகள்(value of the intelligence and humar) எவர் பார்க்கின்றார்கள், எவர் அவற்றைப் பொறுத்தி வரன் தேடுகின்றார்கள்...   &lt;br /&gt; &lt;br /&gt;இந்த சமுதாயம், மற்றும் அதன் தாக்கங்கள் சில சமயங்களில் பெண்களின் மேல் முட்களாகப் படர்கின்றன..! அவற்றில் ஒன்று தான் பள்ளிப் பருவத்தில் பாலியல் வன்முறை., கணவனால் கைவிடப்படும் பெண்கள், ஏமாற்றப்படும் பெண்கள் இவற்றில் பாதிக்கப்படும் பெண்களே பின்னாட்களில் தவறான பாதைகளில் செல்கின்றார்கள், எனவே ஒரு கை தட்டினால் ஓசை வராது, இரு பாலும் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்பது நடக்க வேண்டும், இல்லையென்றால் கலாச்சாரம் நிச்சயமாக இன்னும் மோசமாகத்தான் போகும்....! &lt;br /&gt; &lt;br /&gt;சாமானியப் பெண்களுக்கு, அடிப்படையான சுதந்திரம் கிடைக்கும் போது, சில பெண்கள், மேல் நாட்டு கலாச்சாரத்தில் முற்றிலுமாக மூழ்கியிருப்பார்கள் என்றாலும், சாமானியப் பெண்களுக்கான சுதந்திரம் அத்தியாவசியமான ஒன்று... ஒழுக்கம் என்பது பெண்களுக்கான மட்டுமே என்பதை மீறி, அதை ஆண்களுக்கும் புகுத்த வேண்டும்... அதை, ஆண்களும் கடைபிடிக்க, முயல வேண்டும்!அது தான் சமுதாயத்தை கலாச்சாரத்துடன் இணைந்து பயணிக்க வழிவகுக்கும்.....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/153842835912349353-4609441387505968942?l=malargall.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://malargall.blogspot.com/feeds/4609441387505968942/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=153842835912349353&amp;postID=4609441387505968942' title='31 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/153842835912349353/posts/default/4609441387505968942'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/153842835912349353/posts/default/4609441387505968942'/><link rel='alternate' type='text/html' href='http://malargall.blogspot.com/2007/10/blog-post_10.html' title='கலாச்சார கடவுள்களும் பெங்களூரு வாழ்க்கையும்'/><author><name>மோகனா</name><uri>http://www.blogger.com/profile/10206294980960996941</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_9nysbCErfEE/SCc0lV224EI/AAAAAAAAENE/T09e-Q_vDbE/S220/DSCF0066.jpg'/></author><thr:total>31</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-153842835912349353.post-986272566574450498</id><published>2007-10-09T19:00:00.000-07:00</published><updated>2007-10-18T23:53:18.418-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நட்சத்திரம்'/><title type='text'>சினிமாவில் ஆணாதிக்கம்...</title><content type='html'>சினிமா என்பது பரவலாக அனைவரையும் ஈர்க்கும் ஒன்று ஆனால் அதில் பெண்களின் பாத்திரப்படைப்பை இன்றும் சங்க காலத்து பெண்களைப் போலவே காட்டுகிரார்கள்... நானும் ஒவ்வொரு வித்யாசமான படம் வரும் முன்பும் "ஆகா புரட்சி பண்ணிடானுக போலிருக்கே" என்று பர்ப்பேன் ஆனால் சப்பையாகப் போய்விடும்... &lt;br /&gt;&lt;br /&gt;அஜித்தும், மீனாவும் நடித்த ஒரு படத்தைப் பற்றி நான் கேள்விப்படும் முன் "ஹீரோ, விதவைப் பெண்ணை" திருமணம் செய்வது கதை என்ற போது ஆகா நல்ல விசமாக உள்ளதே என்று பார்த்தால் அது அவளின் நடிப்பு, நிஜத்தில் அப்படி இல்லை...&lt;br /&gt;&lt;br /&gt;அஜித்தும், சிம்ரனும் நடித்த படத்தில் சிம்ரனை மறுதாரமாகக் கல்யாணம் செய்து கொள்வார் என்ற போதும் அதே ஆச்சரியம், ஆனால் உடல் ரீதியான சம்பந்தம் அவளுக்கு முன்னால் ஏற்பட்டில்லை என்ற போது அந்த ஆச்சரியம் போய்விட்டது... &lt;br /&gt;&lt;br /&gt;சரி இயற்கை தான் அழகான, வித்யாசமான படம், அதிலும் கூட (காதலானாலும்) அவள் முன்னால் விரும்பியவனைத்தான் சேர்கின்றாள் என்ற போது அதில் இருந்த ஈர்ப்பும் போய்விட்டது...!&lt;br /&gt;&lt;br /&gt;இதே ஆண்களின் கதாபாத்திர படைப்புகளைப் பாருங்கள்... &lt;br /&gt;&lt;br /&gt;புன்னகை மன்னனில் பாருங்கள் அவள் தன்னால் தான் இறந்தால் என்றாலும் கூட இன்னொரு காதல்.&lt;br /&gt;&lt;br /&gt;"உன்னை நினைத்து"வில் ஏமாற்றிய பெண்ணானதால் லைலாவை விட்டு சினேகாவை இனையும் பாத்திரப்படைப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகன் எத்தனைப் பெண்களுடன் இருந்தாலும் நாயகி அவனை ஏற்றுக்கொள்ளுதல்(கோகுலத்தில் சீதை...)&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் பெண் என்றால், அவளை அப்படிக் காட்டமாட்டார்கள்(அவள் அப்படித்தான்...) பெண் தன் கற்பை எதனாலோ இழந்தால் நாம் முடிவு செய்து விடலாம், அவள் எப்படியும் இறப்பதாய் தான் காட்டுவார்கள் என்று(7G ரெயின்போ காலனி). &lt;br /&gt;&lt;br /&gt;"நினைத்தேன் வந்தாயில்" சினேகா, சூர்யா லைலாவிற்கு அத்தனை செய்தாலும் அவனுக்காக பொருமையாக காத்திருக்கும் கதாபாத்திரம். அதுவே விஜய், சுவலெஷ்மி நடித்த "லவ் டுடே"யில் சுவலெஷ்மியின் சூழ்நிலை அறிந்தாலும் அவளை விட்டுப் பிரியும் விஜய்...! &lt;br /&gt;&lt;br /&gt;இதயெல்லாம் மீறிய ஒரு படம் தான் தனுஷின் "புதுப்பேட்டை", அதில் அவர் சினேகாவை திருமணம் செய்வார், ஆனால் பிறகு "சோனியா அகர்வாலை" யும் திருமணம் செய்த போது, அந்த திருமணத்தின் அர்த்தம் போய்விடுகின்றது... &lt;br /&gt;&lt;br /&gt;எந்த பெண் கதாபாத்திரங்களும் நான் அறிந்து, அவள் உடல் ரீதியாக ஒருவனால் அடையப்பட்ட பின் கதாநாயகனால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை...! ஆனால் ஆண்கள் நிலை அப்படி அமைக்கப் படுவதில்லை... அப்படி எதாவது இருந்தால் கூருங்கள் நானும் தெரிந்து கொள்கின்றேன்...!&lt;br /&gt;&lt;br /&gt;அப்பப்பா, சினிமாவில் பெண்ணை நல்ல நிலையில் காட்டுவதால் மட்டும், பெண் நிலை மாறுமென்று சொல்லவரவில்லை.. இது பெண்ணியமும் இல்லை, ஆனால் ஆணாதிக்கம், ஆண் கட்டமைக்கும் எதுவும் இப்படித்தான் பெண்களுக்கு பாரபட்சமாய் இருக்கும் என்று கூற வருகின்றேன்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/153842835912349353-986272566574450498?l=malargall.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://malargall.blogspot.com/feeds/986272566574450498/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=153842835912349353&amp;postID=986272566574450498' title='21 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/153842835912349353/posts/default/986272566574450498'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/153842835912349353/posts/default/986272566574450498'/><link rel='alternate' type='text/html' href='http://malargall.blogspot.com/2007/10/blog-post_9696.html' title='சினிமாவில் ஆணாதிக்கம்...'/><author><name>மோகனா</name><uri>http://www.blogger.com/profile/10206294980960996941</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_9nysbCErfEE/SCc0lV224EI/AAAAAAAAENE/T09e-Q_vDbE/S220/DSCF0066.jpg'/></author><thr:total>21</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-153842835912349353.post-5303458018201535593</id><published>2007-10-09T10:45:00.000-07:00</published><updated>2007-10-08T22:15:10.834-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நட்சத்திரம்'/><title type='text'>இழந்த சுவர்க்கம் - அக்னி நட்சத்திரம் - பெண்ணியம்</title><content type='html'>கடவுள் அறிமுகமானதும், வழிபட்டதுமான காலங்கள் என்னைப் பொருத்த வரை சுவர்க்கத்தில் இருந்த காலங்கள்... மிக விரைவிலேயே நான் அந்த சுவர்க்கத்தை இழந்துவிட்டேன். சுவர்க்கமாய் உணர்ந்ததர்க்கும், இழந்தாய் உணர்வதற்கும் மத நம்பிக்கைகளும், அதன் தாக்கங்களுமே காரணம்! அறியாமை தான் இங்கே பேரின்பம் என்று, ஏன் செய்கிறோம், எதற்கு செய்கின்றோம் என்று யோசிக்க விடாமலேயே நல்லவற்றை நம்முள் புகுத்தும் மதம் மற்றும் அதன் வழிமுறைகள் தான் என்னை சிறுவயதில் சுவர்க்கத்தில் இருந்ததாய் உணர்த்தியது. என்று அதைத் தாண்டி மற்ற இன்பங்களில் மற்றும் அறிவுப்பாதியில்(!) பயணித்தேனோ அன்றே நான் என் மன அளவிலான சுவர்க்கத்தை இழந்துவிட்டேன்...!&lt;br /&gt;&lt;br /&gt;மதம் சார்ந்த புராணங்களின் வழியே மட்டுமே, பெண் இப்படித் தான் இருக்க வேண்டும் என்ற பாடங்கள் புகுத்தப்படுகின்றன., பெண்கள் கடவுளை நம்ப வேண்டும் என்பதை எல்லோரும் விரும்புகின்றார்கள், பெரிதாக அறிவு ஜீவி என்று கூறிக்கொள்ளும் எழுத்தாளர்கள் கூட தன் மனைவி தொங்க, தொங்க தாலி கட்டிக்கொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள். பொது புத்தி என்று சாதகமான விஷயங்களில் புத்திசாலித்தனம் நிரூபிக்கும் ஆண்கள் கூட, பெண் விசயத்தில் பொது புத்தியில் தான் இருப்பார்கள். பெண்களும் பூசையறையில் பாராளுமன்றம் போல் அரசியல் நடத்துகின்றார்கள். அந்த வீட்டிற்கு கடவுளின் பிரதிநிதியே அவள் தான் என்பதைப் போல் செய்வார்கள். ஏதேனும் திருவிழாநாள் வந்து விட்டால் பெண்கள் செய்யும் அலும்பை பார்த்தும், அனுபவித்தும் இருப்பீர்கள். இவை பெண்கள் அந்த வீட்டில் நன்றாக வாழும் போது. எல்லா ஒழுக்கங்களையும் கடவுள் வழியாகவே புகுத்துவது நம்மைப் புனிதமாக உணரச்செய்யும். ஆனால் அதற்கு எதிர் பதம் மிகவும் கொடுமையானது... &lt;br /&gt;&lt;br /&gt;நம் சமுதாயத்தில் ஒழுக்கம் இல்லை என்றால் எந்த திறமைக்கும் மதிப்பில்லை என்பது பெரிய சாபம்.(என்ன கருத்து சொல்கின்றார்கள் என்பது முக்கியமல்ல, யார் கூறுகின்றார்கள் என்பதே முக்கியம்) இந்த மாயை உருவாகி எத்தனையோ திறமையானவர்கள் மனம் குழம்பி நின்றதைப் பார்த்துள்ளேன். பெண் என்றால் இப்படித் தான் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு, சந்தர்ப்பவாதத்தால் அப்படி சிக்கிக் கொள்ளும் பெண்களுக்குக் கூட பெரிய இழப்பாகப் போய்விடுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;கற்பு நிலை என்பது பெண்களுக்கு எப்போதும் பெரும் சுமையாகத்தான் இருந்துள்ளது, காமம் மற்றும் அதனாலான இன்பங்கள் ஆண்களுக்கு மட்டுமே உரித்தானது, குழந்தை பெற மற்றும் ஆண்களை இன்புறுத்த மட்டுமே பெண்களுக்கான காமம், என்பது பெரும்பாலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகவே மாறிவிட்டது. பத்து பெண்களிடம் போனாலும் உன்னை தான் நான் மனதாரவிரும்புகிறேன் என்ற அழகான ஒரு வார்த்தையில் அனைத்து பெண்களும் மயங்கிவிடுவார்கள். திரைப்படத்தில் கூடக்காணலாம், ஆண்களுடைய சுயநலத்தில் இது அழுத்தமான ஒன்று, அவனை நம்பியிருக்கும் போது, இந்த சூழலில் அவள் என்ன தான் செய்துவிட முடியும்? &lt;br /&gt;&lt;br /&gt;பெற்றோர்களைக் கூட எளிதில் ஏமாற்றிவிடும் திறமையான ஆண்கள், ஒரு பெண்ணை, தனிமனிஷியாக அவளுடைய சோர்வான சந்தர்ப்பத்தில் எளிதாக ஏமாற்றிவிடக்கூடும். மற்றது இந்த யுகத்தில் பெண்களும் கூட சில இன்பங்களுக்கு(தேவையான) ஆசைபடுகின்றார்கள். சிறு வயதாயிருக்கும் போது, ஏன் மோகினி, காட்டாரி என்று பெண் பேய்களாகவே இருக்கின்றது என்று யோசிப்பேன், ஆண்கள் பேயாகப் பார்த்தது "கல்யாணராமனில்" தான். இப்படி அனைத்து உணர்ச்சிகளையும் அடக்கி(கோபம், இயலாமை மற்றும் காமம்) தான் அவர்கள் அப்படி ஆகின்றார்கள். இங்கு பெண்களுக்கான மிகப்பெரிய மற்றும் பலவீனமான சுமை கற்பு நிலை தான், அதனை பெண்கள் மீற வேண்டும் என்று நான் கூறவரவில்லை, அதற்கான மதிப்புகள் மாறவேண்டும்...&lt;br /&gt;&lt;br /&gt;குடிக்கக் கூடாது, திருடக்கூடாது மற்றும் பொய் பேசக்கூடாது என்பது எப்படி தனிமனித ஒழுக்கங்களோ, அதை மீறினால் சமுதாயத்தில் என்ன விளைவுகளோ அவற்றைப் போல பெண்ணிற்கான கட்டுப்பாடுகள் இருந்தால் கூட எதிர்கொள்ளலாம். ஆனால், கொலை செய்யும் குற்றவாளிகளை விட, பெரிய தீவிரவாதிகளை விட சமுதாயத்தில் கட்டுப்பாடுகளை மீறும் பெண்களை மோசமாக நடத்தும் போது அவற்றைக் காணும் பெண்கள், வெளியில் வரக் கூட தயங்குவார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;திருமணம், திருமண வாழ்வில் பாதிக்கப் படுவது பெண்களா, ஆண்களா என்பது பட்டிமன்றங்களில் Ever Green தலைப்பு. பெண்ணின் மதிப்பை எந்த திருமணங்களும் உணர்வதில்லை...பெற்றோர் பார்க்கும் திருமணமென்பதே ஒரு அரசியல், அதில் நான், என்னை விட படித்தவனும், பணம் சம்பாதிப்பவனுமாக எதிர்பார்ப்பதில் என்ன தவறு...? இது தான் பெண்ணின் துன்பம், நான் காட்டும் எந்த மாப்பிள்ளைக்கும் நீ கழுத்தை நீட்டவேண்டுமென்பதும் இங்கு நடந்து வருவது தான். இப்படி சரியாக பார்த்து நடைபெறாத திருமணத்தால் தான் எந்த ஒரு ஆணுமும் பாதிக்கப்படுகின்றான்.! &lt;br /&gt;&lt;br /&gt;வேலை செய்கின்ற பெண்கள் எப்படியும் பேசிக்கொண்டு, நினைத்ததைச் செய்யலாம். ஆனால் பொருளாதார ரீதியாக, ஆண்களை(அப்பா, சகோதரன்) சார்ந்திருக்கும் பெண்கள் தங்கள் விருப்பம் போல் செய்ய இயலாது. வீட்டில், என்னால் இவனுக்குத் தான் கட்டிக் கொடுக்க இயலும் என்று கட்டி கொடுத்து விடுவார்கள். அவன் நன்றாக வைத்துக் கொண்டால் போச்சு, இல்லையென்றால் எந்த பெண்ணிற்கும் நரகம் தான்... எனவே பெற்றோர்கள் தங்கள் பெண்ணை, ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்தால் தன் சொந்தக்காலில் நிற்கும் வலிமையுள்ளவளாக வளர்க்க வேண்டும், கல்வி அறிவை நிச்சயமாகக் கொடுக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்ததாக குடும்ப வாழ்க்கை, இருவரும் சேர்ந்து, ஒன்றாக வாழலாம், இன்புறலாம், துன்பங்களை பகிரலாம் சந்ததிகளை உருவாக்கலாம் என்று முடிவு செய்த பின், இருவரும் ஒழுக்கத்துடன் இருக்கத் தான் வேண்டும் என்பது ஆரோக்கியமான ஒன்று. குடும்பம் என்பது, பெரிய பொறுப்பு, தந்தை சரியாக இல்லாவிட்டால் கூட, தாய் மட்டும் குடும்பத்தை நடத்திவிடமுடியுமென்பது பெண்ணின் மனபலம், அனால் பெண் ஒழுங்காக இருந்தால் மட்டுமே குடும்பம் நன்றாக இருக்கும் என்று நினைப்பதும், கருதுவதும் ஆண்களின் சுயநலமாக மட்டுமே இருக்க முடியும். &lt;br /&gt; &lt;br /&gt;வேலை போய் விட்டு வந்தால் தனக்கு காப்பி போட்டுக்கொடுக்க, சிரிப்புடன் வரவேற்க வீட்டைப்பார்த்துக் கொள்ள, அவர்கள் அம்மா, அப்பாவை பார்த்துக்கொள்ள மட்டுமே ஆண்களுக்கான திருமணமா? முடியாத போது, எவராயிருந்தாலும் யாராலும் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது, மாட்டார்கள்... ஆனால் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது என்னவென்று தெரியவில்லை, குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள வேண்டும், உடம்பு முடியாத போது பார்த்துக்கொள்ள வேண்டும். சுயநலங்கள் மிகுந்த திருமணமும் மற்றும் குடும்ப வாழ்வும் தான் பிரச்சனைகளுக்கே அடித்தளம், அவை தான் ஆரோக்கியமற்ற சந்ததிகளை உருவாக்குகின்றன, சுயநலங்கள் மிகுந்த திருமணத்தினால் அதிகம் பாதிக்கப் படுவது பெண்கள் தான்!  பாதிக்கப்படுவதற்கு(நல்ல துணையுடனேயே இன்பமாக வாழாததற்கும்) முக்கியக் காரணம் பெண்கள் பொதுவாக தன்நிலை எப்படியிருக்க வேண்டுமென்று, தெளிவாக புரிந்து கொள்ளாதது தான்.  &lt;br /&gt; &lt;br /&gt;துன்பம் துரத்தினால் ஓடுவதற்கும், பிரச்சனை துரத்தினால் ஓடுவதற்கும் வேறுபாடுள்ளது. முதலாமது ஓடித்தான் ஆக வேண்டும் இல்லையென்றால் நம்மையே கொன்றுவிடும், இரண்டாவது எதிர்த்து நின்று முயலலாம்! எது பிரச்சனை, எது துன்பம் என்பதைப் பெண்கள் அறிய வேண்டும்! ஏனென்றால் அடங்கிப் போனால் தான் மதிப்பு என்பதை பெண்கள் சரியாகப் புரிந்து கொள்வதில்லை, கொடுப்பது வேறு, அடங்கிப் போவது வேறு... அடங்கிப் போவது என்பது பெரிய குற்றமொன்றுமில்லை, அதே சமயம் அது மட்டுமே நல்ல பெண் என்பதற்கு அடையாளமில்லை.  விட்டுக்கொடுத்தல் என்பது வாழ்தலின் கலை, அது குடும்பம் என்ற கட்டமைப்பை நிலைநிறுத்தும், பல ஆண்கள் விட்டுக்கொடுத்து போவதைப் பார்த்துள்ளேன். ஆனால் பெண் மட்டுமே விட்டுக்கொடுத்து போகவேண்டுமென்பது தான் அடக்குதல்... கற்பு நிலை என்பது, ஆணுக்கு அடங்கி போவது என்று எடுத்துக் கொண்டால் இங்கு அது பெண்களுக்கு மிகப்பெரிய சுமை, பலவீனமான சூழலில் பல பெண்கள் அடங்கிதான் போகின்றார்கள்.&lt;br /&gt; &lt;br /&gt;அடங்கிப் போகவேண்டிய அடிமைகளாய் இருப்பதற்கு காரணம், இயலாமை, சார்பு நிலை மற்றும் பொருளாதாரம். நான் சம்பாதிக்கின்றேன் என் விருப்பப்படிதான் மனைவி இருக்க வேண்டுமென்று ஆண்கள் நினைப்பதற்கு அது தான் காரணி..60ற்குப் பிறகு மனைவி மதிப்பதில்லை என்பதை நிறைய பேர் கூறிக் கேட்கிறேன்... இந்த காரணியால் தான் அப்படி நேர்கின்றது... &lt;br /&gt;&lt;br /&gt;இந்த பிரச்சனைகெளுக்கெல்லாம் என்ன முடிவு என்றால், அனைவருக்கும் போதுமான கல்வியறிவும், வேலை வாய்ப்பும் தான். அதுமட்டுமில்லாமல் ஆரோக்கியமான மனநிலையில் பிள்ளைகளை வளர்ப்பதும், வருகின்ற சமுதாயத்தை ஆரோக்கியமான பாதையில் கொண்டு செல்வதும் தான். அரோக்கியமான மனநிலையை, நாம் ஆரோக்கியமான இருக்கும் பட்சத்தில் தான் நம் சந்ததிகளுக்கு கொடுக்க முடியும். &lt;br /&gt;&lt;br /&gt;அறிவு என்பதை, வேலைக்கான ஒன்று என்று நினைத்துக் கொள்ளக்கூடாது, எது சரி, எது தவறு, என் பாதை என்ன, எது என் மனநிலைக்கு ஏற்ற வாழ்க்கை என்று தீர்மானிக்கும் அளவு அறிவைக் கொடுக்க வேண்டும்... வளர்த்துக் கொள்ளவேண்டும்..! ஏதாவது ஒரு வகையில், ஒரு கருத்தோ, ஒழுக்கமோ திணிக்கப் படுவதை விட, அறிவார்த்தமாக உணரும் ஒழுக்கங்களே நிலைக்கும்... எவராலும் கட்டுப்படுத்தப்படாமல், எவராலும் சோதிக்கப்படாமல், எவராலும் கண்காணிக்கப்படாமல்! எனக்காக நான் ஒழுக்கமாய் இருக்க வேண்டும் என்று எந்த மதமும், ஒழுக்கத்தை என்னிடம் புகுத்தவில்லை, என் குடும்ப மானம், சமுதாய மானம்(தமிழச்சி என்றால் இப்படித்தானிருக்க வேண்டும்..) கணவனின் நலம், கணவனுக்காக, கடவளுக்காக என்ற போது, இவற்றில் நாம் நம்பிக்கை இழக்கும் பட்சத்தில் அது பொய்த்துப் போய்விடுகின்றது...! &lt;br /&gt; &lt;br /&gt;பெண்ணியம் என்பது உண்மையில் இவற்றையெல்லாம் விட வேறு ஒரு முக்கியமான ஒன்று, பெண் சிசு கொல்லப்படுதல், வரதட்சணைக் கொடுமை, மருமகள் ஸ்டவ் வெடித்து எரிதல், தெருவோர பிச்சைக்காரிகளின் கர்ப்பம், மனநிலை பாதிக்கப்பட்டவர்களிடமான மற்றும் பள்ளிச் சிறுமிகளிடமான பாலியல் வன்முறை இதெல்லாமும் பெண்ணியத்தின் காரணிகள் தான்... எவற்றைக் கொண்டு, இந்த விசயங்களைத் தடுக்க முடியும்...? நல்ல படித்தவர்களே, பாலியல் வன்முறைகளில் இறங்கும் போது, யார்தான் என்ன செய்ய முடியும்..? அடக்குமுறை, பாலியல் வன்முறை இவற்றையெல்லாம் மீறி பெண் சமுதாயம் முன்னேறுவது மிகவும் கடினம் தான்... &lt;br /&gt;&lt;br /&gt;பாலியல் வன்முறை என்பது மிகப்பெரிய கொடுமை, பள்ளி, கல்லூரிகளில் அதனால் பாதிக்கப்படும் பெண்கள் ஏராளம்... கடைகளில், பேருந்துகளில், சாலையோரங்களில் மற்றும் சுற்றுவட்டாரத்தில் பெண் குழந்தை மேல் நடைபெரும் பாலியல் வன்முறைகள் கொடுமையானவை. பெண் குழந்தைகள் மீதான பெற்றோர்களின் சில அடக்குமுறைகளால், அவற்றை குழந்தைகள் கூறக்கூடத் தயங்குவார்கள்(எங்கே வெளியே செல்லக்கூடாது என்று தடுத்துவிடுவார்களோ என்ற பயத்தால்..) என்னைக் கேட்டால் அல்லது மிகவும் வெளிப்படையாகக் கூறினால் கற்பு என்ற அடக்குமுறைகளால் தான் இந்த மனநிலை பாதிப்பெல்லாம், ஆண்களைப் போல் அது பெரிய விசயமல்ல என்று பெண்களும் எடுத்துக்கொண்டால் இவை ஒன்றுமே அல்ல. வேறு ஒரு பெண்ணிடம் அத்து மீறுபவர்கள் தன் மனைவிடம் ஒழுக்கத்தை எதிர்பார்க்க கூடாது. பெண்ணியம் என்பது, திராவிடம் என்று அரசியல் செய்யும் கழகங்கள் போலாகிவிட்டது, சில மூட நம்பிக்கைகளை வைத்துக் கொண்டு, திராவிடம் பேசுபவர்களும், அறிவு ஜீவி என்று சொல்லிக் கொண்டு அடக்கியாள்பவர்களும் ஒன்றே தான்...&lt;br /&gt;&lt;br /&gt;பெண்ணை விளம்பரங்களில் போகப் பொருளாக உயோகிக்கின்றார்கள், கவர்ச்சியாக திரைப்படங்களில் நடிக்க வைக்கின்றார்கள், பெண்கள் அழகை ஒரு ஆயுதமாகக் கையாளுகின்றார்கள் என்பதிலெல்லாம் பெண்களின் நலம் ஒன்றும் கெட்டுப்போவதில்லை, எனக்கு வேலைக்குப் போகக் கூடாது என்றால் எப்படி வலிக்கின்றதோ அது போல் தான் அவர்களிடம் அப்படியெல்லாம் நடிக்காதே என்று சொன்னால் வலிக்கும்.! நான் தவறில்லை என்றால், அதுவும் தவறில்லைதான். அதுவும் கூட அடக்குமுறைதான்..&lt;br /&gt;&lt;br /&gt;சினிமாவில் பெண்களுக்கு அழுத்தமான கதாபாத்திரம் கொடுக்கவில்லை, பாடல்களில் மட்டுமே உபயோகிக்கின்றார்கள் என்பதெல்லாம் சிறுபிள்ளைத்தனம். சினிமாவில் காட்டுவதைப் போல் உன் கணவனால் 100 பேரை அடிக்க முடிந்தால், பெண்ணிற்கும் அப்படி முக்கியத்துவம் இல்லை என்று கூறிக் கொள்ளலாம். 100 பேரை அடிப்பது போல் அதுவும் கற்பனைதான். &lt;br /&gt;&lt;br /&gt;பெண்ணை பெண்ணாக உணரச்செய்வது தான் பெண்ணியம், அவளை ஆணாகவோ, கடவுளாகவோ, ஒரு சிறப்புடனோ உணர வேண்டியதில்லை... ஏன் பெண்கள் மீது சில எதிர்பார்ப்புகள் சுமத்தப்படவேண்டும், அவர்கள் விருப்பத்திற்கு விடுவது தான் சுதந்திரம்.. இயற்கையான மனோபாவம் தான் சுதந்திரம்., சுதந்திரத்திலும் சிலவற்றைக் கடைபிடிக்க வேண்டுமென்பது புத்திசாலித்தனம் மற்றும் அறிவு, அவற்றைப் பெற வழி வகுக்க வேண்டும்,அது தான் பெண்ணியத்தின் சாரம். சமமாக எண்ணுங்கள் என்றால், வெளிப்படையாக அல்ல, கல்வி கொடுத்தலில், வேலை கொடுத்தலில் மற்றும்  வாய்ப்பு கொடுப்பதில்.(எல்லாவற்றிர்க்கும் மேல், பரிட்சையில் சரியாக படிக்காமல் தோல்வியடைந்து துன்பப்படுவதற்கும், வாய்ப்பே அளிக்காமலோ, தகுதியிருந்தும் படிக்க முடியாமலோ இருப்பதற்கும் நிறைய வித்யாசம் உள்ளது..)பெண்ணியம் என்பது ஒரு அடைப்படை சாரம், அதிலிருந்து எப்படி வேண்டுமானால் நாம் பெண்ணிய கருத்துக்களைக் கொண்டு செல்லலாம்... ஆனால் அதை தவறாகவோ, கவர்ச்சியாகவோ கொண்டு சென்றால், போக வேண்டிய இடத்தை அடைய மாட்டோம். &lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய கல்வியறிவும், வேலைக்குச்செல்லும் சுதந்திரமும் தான் நான் சந்தோசமாக இருப்பதற்கான காரணி. நான் அதை எத்தனை தூரம் வெற்றிகரமாகப் பயன்படுத்துக்கொண்டேன் என்பதும் கூட... என் இழந்த சுவர்க்கத்தை மீட்டுக் கொடுத்தது, கல்வியறிவும், வேலையும் தான். அது மட்டுமே எவர் இழந்த சுவர்க்கத்தையும் மீட்டுக் கொடுக்கும்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/153842835912349353-5303458018201535593?l=malargall.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://malargall.blogspot.com/feeds/5303458018201535593/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=153842835912349353&amp;postID=5303458018201535593' title='12 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/153842835912349353/posts/default/5303458018201535593'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/153842835912349353/posts/default/5303458018201535593'/><link rel='alternate' type='text/html' href='http://malargall.blogspot.com/2007/10/blog-post_09.html' title='இழந்த சுவர்க்கம் - அக்னி நட்சத்திரம் - பெண்ணியம்'/><author><name>மோகனா</name><uri>http://www.blogger.com/profile/10206294980960996941</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_9nysbCErfEE/SCc0lV224EI/AAAAAAAAENE/T09e-Q_vDbE/S220/DSCF0066.jpg'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-153842835912349353.post-1061936731517473667</id><published>2007-10-08T16:00:00.000-07:00</published><updated>2007-10-08T03:30:09.101-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நட்சத்திரம்'/><title type='text'>காசே தான் கடவுளடா!!!</title><content type='html'>வளர்ந்து வரும் நவீன காலத்தில், வேகமாக நகருகின்றநேரத்தில், விட்டுவிடுகின்ற இன்பங்களும், துன்பங்களும் அதிகம்... இரவு 9.30 மணிவரைக் கூட அலுவலகத்தில் அமர்ந்திருக்கும் ஆண் நண்பர்களைப்(திருமணமான) பார்க்கும் போது, அவர்களின் மனைவி அவர்களை எதிர்பார்க்க மாட்டார்களா என்று தோன்றும், என் தம்பி வீட்டிற்கு வராவிட்டால் கூட எனக்கு எரிச்சலும், கோபமும் வரும், இத்தனைக்கும் நானும் அலுவலகம் சென்று தான் வந்திருப்பேன்.. வீட்டிலேயே இருக்கும் பெண்கள் பாவம் தான். தேவையான வசதிகள், அளவுக்கதிகமான பணம், அனைத்திற்கும் இயந்திரம், அதில்லாமல் வேலையாள், தொலைப்பேசியில் கேட்டால் வந்து விடும் மளிகை சாமான்கள் மட்டும் போதுமா அவர்களுக்கு? என்ன தான் செய்வது வீட்டில்? பணத்தைத் தேடும் முயற்சியில் பலவற்றை நாம் இழக்கின்றோம்... அனைத்திற்கும் பணமே மூலதனமாக உள்ளது, தேவையற்ற இடங்களிலிம் கூட..!&lt;br /&gt; &lt;br /&gt;பணம் சம்பாதிக்கும் வரை, எத்தனை வயதானாலும் கல்யாணம் செய்து கொள்ளாத ஆண்கள், நிறைய பணம் வந்த உடன் திருமணத்திற்கு அவசரப்படுவார்கள், மேலும் குறைந்த வயதிலேயே நிறைய பணம் சம்பாதிக்கும் ஆண்களும்! அதே போல் தான், பெண்கள் சிறு வயதாயிருந்தாலும் நல்ல வரன்(நன்றாக சம்பாதிக்கின்ற) வந்தால் போதும் பெண் வீட்டில் கட்டி கொடுத்துவிடுவார்கள்! பணம் மட்டுமே சார்ந்த ஒன்றா திருமணமும் பந்தமும்? இதனால் தான் இன்னோரு பக்கம் சில பெண்கள் துன்பப்படுகின்றார்கள், நான் நிறைய வரதட்சணையாவது கொடுத்து என் பெண்ணைக் கட்டிக் கொடுத்துவிடுவேன்(நல்ல சம்பாதிக்கும் வரனுக்கு) எனும் போது தான், சாதாரண ஆண்களும் வரதட்சணையில் குளிர் காய நினைக்கின்றார்கள்.."நான் அவனில்லை" என்று ஏமாற்றுகின்றார்கள்...! &lt;br /&gt; &lt;br /&gt;என் பாட்டி, அவர்களுடைய புக்ககம் வந்த போது அத்தனை சீர் கொண்டு வந்தார்கள், வண்டி வண்டியாய் வந்தது, எப்பொழுது பிறந்த இடம் சென்றாலும் திரும்ப வரும் போது அத்தனை சீர் வரும் என்று அவர்கள் நாத்தனார்கள் அத்தனை பெருமையாகப் பேசுவார்கள்! அந்த திமிரில் எந்த வேலையும் செய்ய மாட்டார்கள் என்றும் சேர்த்து பேசுவார்கள்! எல்லா செயலுக்கும் எதிர் செயல் உண்டு என்பது மிகவும் உண்மை! &lt;br /&gt; &lt;br /&gt;அது மட்டுமா என் அம்மா இருக்கின்றார்களே படித்தவர், வேலைக்குச் செல்பவர், அறிவாளியும் கூட என் தம்பிக்கு அறிவுறை கூருவார்கள் பாருங்கள்..."தம்பி, அக்காவை எப்போதும் பார்த்துக்கணும், நிறைய செய்யனும்" அது இது என்று... விடுதியில் இருந்தால் திருவிழா நாட்களன்று அவனிடம் பலகாரங்களைக் கொடுத்து என்னிடம் கொடுத்துவிட்டு வரச்சொல்வார்கள்(பழக்குகின்றார்களாம்), அவனும் வருவான், பார்த்தால் அதில் சிறிது "வேற்பிலைக் கொழுந்துகள்" இருக்கும்..! கேட்டால் எதாவது "வியாக்யாணம்" கூறுவார்கள்...!  அவனை இப்படிப் பழக்கினால், அவன் "கிழக்குச் சீமையிலே"யில் வருபதைப் போல் கற்பனைப் பண்ணிக் கொண்டு, அக்காவிற்கு நிறைய வரதட்சணைக்கொடுத்தாவது கட்டிக்கொடுக்க ஆசைப்படுவான்.. அதோடு நிறுத்துவானா? அவன் மனைவியிடமும் எதிர்பார்ப்பான்! அதான் ஒரு பேச்சு இருக்கின்றதே, அண்ணன், தம்பி இல்லாதா வீட்டில் பெண் எடுக்காதே என்று! &lt;br /&gt; &lt;br /&gt;சிறு குழந்தைகள் கூட தன் அப்பா சம்பளத்திற்கு இவ்வளவு தான் செய்ய முடியும் என்று புரிந்து கொண்டு, இருப்பதை வைத்து இன்புறும் போது, தான் சம்பாதிப்பதை வைத்து இன்புறாத ஆண்களும், தன் பெண்ணை தன் வசதியை மீறி கட்டிக்கொடுக்க விரும்பும் ஆண்களும் இருப்பது எத்தனை சுயநலம்.. பணம் எல்லாவற்றையும் கொடுக்காது/கொடுக்கின்றது என்பதால் தான் இத்தனை சமூக அவலங்கள்....! &lt;br /&gt; &lt;br /&gt;பணம் என்ற ஒன்றில்லை என்றால், அல்லது அதைத் தேவையானவற்றிற்குப் பயன்படுத்தினால் பல அவலங்கள் நடைபெறாது... உதாரணத்திற்கு நான் தான் போதுமான அளவு சம்பாதிக்கின்றேனே நீ ஏன் வேலைக்குப் போக வேண்டும்?,  என் பணத்தில் வாழ்ந்து கொண்டு நான் சொல்வது போல் எப்படி கேட்காமலிருக்கலாம்? நான் சம்பாதிக்கின்றேன் என் ஆசைப்படி இருப்பேன்,  நீ சம்பாதித்து என்ன கொண்டு வந்து கொட்டறேன்னு என்னைத் தொடற? மற்றவனெல்லாம் தன் பெண்டாட்டியை எப்படியெல்லாம் வைத்துள்ளான்.. எங்கே போனது மனிதம் இந்த சொற்றொடர்களில்...? பணம் மட்டும் இருந்து விட்டாலோ, இல்லாவிட்டாலோ இவை எப்படி மாறுகின்றன...? எல்லாம் பணம் சார்ந்த ஒன்றா...? &lt;br /&gt; &lt;br /&gt;நன்றாக சம்பாதித்தால், அழகான பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகின்றார்கள், இதற்குப் பெண்களும் விதிவிலக்கல்ல! கல்யாண மாலை அல்லது திருமண புரோக்கர்களிடம் நடத்தப்பட்ட நேர்க்காணலில் இதை அவர்கள் கூறிய போது சிரித்துக் கொண்டேன்... அழகு, பணம் தாண்டி., காதல் திருமணத்திலோ அல்லது பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணத்திலோ என்ன பார்க்கப்படுகின்றது...? வேறு என்னத்தைத் தான் பார்க்க சொல்கின்றாய் என்று கேட்க்கலாம்..! அதான் எனக்கும் தெரியவில்லை....! மிகச் சிலரே இவற்றையும் மீறி வாழ்ந்து கொண்டுள்ளார்கள்..! அவர்களின் வாழ்வு கவிதைத்துவமாய் இருக்கக் கூடும்...! திருமணத்தில் பணம் கையாடப்படாமல் இருக்க பெண்கள் தான் முன்வந்து, அப்படிப்பட்ட ஆண்களை புறக்கணிக்க வேண்டும்(நடக்கக் கூடிய காரியமா?)&lt;br /&gt; &lt;br /&gt;படிப்பை எடுத்துக் கொள்வோம், நல்ல பணமிருந்தால் நல்ல பள்ளி மற்றும் நல்ல பிரிவு, நல்ல வேலை திரும்பவும் பணம்... நன்றாகப் படிக்க வேண்டியது தானே என்பீர்கள், நம் பாடத்திட்டம், ஆசிரியர்கள் எல்லாவற்றையும் மீறி, படிப்பிற்கான சலுகை அதிக பட்சம் 100 பேருக்கு மேல் அரசால் வழங்கப்படுமா? 1000 பேர்...? அறிவையும் மீறி பயிற்சி என்பது அத்யாவசியமான ஒன்று... அது பணமில்லாமல் எங்கு கிடைக்கின்றது...! &lt;br /&gt; &lt;br /&gt;மருத்துவம், ஏன் கடவுள் கூட பணமிருப்பவனுக்குத் தான்...! திருவரங்கம் கோவிலில் சென்றால் கண்கூடாகப் பார்க்கலாம், அனைத்து கோவில்களிலும் நடைபெரும் ஒன்று தான்... பணமிருப்பவன் பணம் கொடுத்து தோஷம் கழிப்பான்..! பணம் இல்லாதவன்..? அப்படியென்றால் கடவுள் பணமிருப்பவர்களுக்கு மட்டும் தானே..! &lt;br /&gt; &lt;br /&gt;விளையாட்டு, இலக்கியம், கலை கூட பணம் சார்ந்தது என்றாலும் மிகையாகாது...! என்று பணத்தையும் மீறி மனிதம் பரவலாக செழிக்கின்றதோ அன்று தான் மனிதம் வெல்லும், மனித குலம் மேன்மையுரும்..! நிறைய பணமிருப்பவர்கள் சிலருக்கு உதவலாம், சில குழந்தைகளைப் படிக்க வைக்கலாம் அது தான் மனிதம்.. முடிந்த வரை திறமையானவர்களுக்கு உதவலாம், இதெல்லாம் தான் நான் கூறவருவது.. நான் சம்பாதித்த பணம் நான் ஏன் மற்றவர்களுக்கு கொடுக்கவேண்டுமென்பது நியாயம் தான் ஆனால் குழந்தைகளுக்கு, திறமையானவர்களுக்கு உதவலாம்., அது பிச்சைகாரர்களுக்கு பணம் போடுவது போலன்று... இது ஒரு சாதாரண கருத்தாக, ஈர்க்கும் ஒரு பதிவாக இல்லாவிட்டாலும் என் திருப்திக்கான ஒன்று.!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/153842835912349353-1061936731517473667?l=malargall.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://malargall.blogspot.com/feeds/1061936731517473667/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=153842835912349353&amp;postID=1061936731517473667' title='30 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/153842835912349353/posts/default/1061936731517473667'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/153842835912349353/posts/default/1061936731517473667'/><link rel='alternate' type='text/html' href='http://malargall.blogspot.com/2007/10/blog-post_07.html' title='காசே தான் கடவுளடா!!!'/><author><name>மோகனா</name><uri>http://www.blogger.com/profile/10206294980960996941</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_9nysbCErfEE/SCc0lV224EI/AAAAAAAAENE/T09e-Q_vDbE/S220/DSCF0066.jpg'/></author><thr:total>30</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-153842835912349353.post-3894235631224802854</id><published>2007-10-08T09:48:00.000-07:00</published><updated>2007-10-07T21:25:33.612-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிமுகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நட்சத்திரம்'/><title type='text'>முதல் நாள் இன்று... (பால நட்சத்திரம்...)</title><content type='html'>திருச்சி காவேரிக்கரையில் பிறந்து, பெங்களூருவில் கணிணித்துறையில் வேலையில் உள்ள நான், ஒரு MCA பட்டதாரி.. எளிமையான வீட்டில் பிறந்து, படிப்படியாக வளர்ந்த ஒரு சராசரி குடும்பத்தைச் சேர்ந்த,சராசரி(...!) பெண். &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்மணமும், பதிவுகளும், இடுகைகளும் 2 வருடங்களாக தெரியுமென்றாலும் நான் எழுத வந்தது மிகத் தாமதமாகத்தான்..! ஆனால் இத்தனை நாட்களும் பரவலாக அனைவரின் பதிவுகளையும் படித்துள்ளேன். நான் எழுத வேண்டுமென்று நீண்ட நாட்களாக ஆசைப்பட்டுக்கொண்டிருந்தேன். அதற்கான நேரம் வந்ததிலிருந்து எழுதத் துவங்கினேன்.. &lt;br /&gt;&lt;br /&gt;என் பதிவுகள் எத்தனைப் பேரைச் சென்று சேர்ந்ததென்று தெரியாது.. ஆனால், எழுதத் துவங்கிய 2வது மாத இருதியில் நட்சத்திரமாக எழுத அழைத்ததில் மகிழ்ந்தேன், ஆனால் நான் ஒப்புக்கொள்ள தாமதம் ஆனதால் மேலும் ஒரு மாதம் காத்திருக்க வேண்டியதாயிற்று... இதோ இன்று நட்சத்திரமாக உங்கள் முன்னால்.... என் பதிவுகள் உங்களைச் சென்றடையும் என்ற நம்பிக்கைகளுடன்...&lt;br /&gt;&lt;br /&gt;மேடையில், வெளிச்சத்தில் அனைவராலும் பரவலாக கவனிக்கப்பட வாய்ப்புள்ள நடிகனைப்போல், நட்சத்திரமாக எழுத வேண்டும் என்பது சந்தோசமான ஒன்று... என்னால் எந்த அளவு நன்றாக வளமையுடன் எழுத முடியுமென்று தெரியவில்லை, ஆனால் என்னால் முடிந்த அளவு வளமையாக, கருத்துச் செறிவுடன், எழுத முயலுகின்றேன்.. &lt;br /&gt;&lt;br /&gt;எனவே பதிவுலக மக்கள், தங்கள் நல்லாதரவைத் தரவேண்டுமென்று அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/153842835912349353-3894235631224802854?l=malargall.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://malargall.blogspot.com/feeds/3894235631224802854/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=153842835912349353&amp;postID=3894235631224802854' title='45 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/153842835912349353/posts/default/3894235631224802854'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/153842835912349353/posts/default/3894235631224802854'/><link rel='alternate' type='text/html' href='http://malargall.blogspot.com/2007/10/blog-post.html' title='முதல் நாள் இன்று... (பால நட்சத்திரம்...)'/><author><name>மோகனா</name><uri>http://www.blogger.com/profile/10206294980960996941</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_9nysbCErfEE/SCc0lV224EI/AAAAAAAAENE/T09e-Q_vDbE/S220/DSCF0066.jpg'/></author><thr:total>45</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-153842835912349353.post-4563450093318415130</id><published>2007-09-19T20:32:00.000-07:00</published><updated>2007-11-04T21:39:39.094-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விளையாட்டு'/><title type='text'>கிரிக்கெட்டெல்லாம் ஒரு விளையாட்டா..?</title><content type='html'>என்னா விளையாட்டுங்க இது... இது ஒரு விளையாட்டா...? விசிலில்லாமல், அனைவரும் நின்று கொண்டு.... தடகளம்,  உள்ளரங்க விளையாட்டு, நீச்சல் விளையாட்டு என்பதைப் போல் இதற்கும் ஒரு பெயர் வைத்துவிடலாம், சாதாரணமாக குழுவிளையாட்டில் சேர்க்காமல்... &lt;br /&gt;&lt;br /&gt;மற்ற விளையாட்டுகளிலிருந்து இதில் மாறுபடுபவை...&lt;br /&gt;&lt;br /&gt;1.விசில் இல்லை... விசிலின் அருமை, விளையாட்டு வீரர்களுக்கு மட்டும் தான் தெரியும்... கேம் டைம் முடிந்த பின் ஒரு விசில் ஊதுவார்கள் பாருங்கள், அது மழலை சொல்லைவிட இனிமையாக இருக்கும், நாம் வென்ற பட்சத்தில்... சிறு பயிற்சியை போட்டிக்கு முன் செய்யும் போது, அணித் தலைவர்களைக் கூப்பிட ஒரு விசில் அடிப்பார்கள் அது கொடுக்கும் தவிப்பு இருக்கிரதே அப்பா...(அம்பயர்களைப் போலவே ஒரு விசிலை வைத்துக் கொண்டு வெளியில் ஊத, சரியாகப் புரிந்து கொண்டு விளையாடுவதில் உள்ள திரில்... இதிலெல்லாம் வராது...) &lt;br /&gt;&lt;br /&gt;2. பெரும்பாலும் டைம் வாட்ச் இருக்கும், இரு அணிகளிடத்தும், மற்றும் விளையாட்டை நடத்துபவர்களிடமும், அதுவும் இங்கு இல்லை... (அதெல்லாம் இருந்தால் தானே ஒன் சைட்  கேம் நடத்த முடியும், கேம் பிக்சிங்கெல்லாம் செய்து, வீரர்களை மாட்டிவிடத் தேவையிருக்காது...) &lt;br /&gt;&lt;br /&gt;3.எல்லைக் கோட்டைத் தாண்டினால் அனைத்து விளையாட்டிலும் தவறு என்றால் இங்கு மட்டும் நிறைய புள்ளிகள்..(அதனால் தான், விரைவில் வெளியேறினால் நல்லதோ என்று சில வீரர்கள் முடிவு செய்துவிடுகிறார்கள்..(நம் வீரர்கள் முக்கியமாக)&lt;br /&gt;&lt;br /&gt;4. மற்ற விளையாட்டுகளில் அனைவரும் ஓடுவார்கள், ஒருவர் நிற்பார், அல்லது அனைவரும் ஓடுவார்கள்.. இங்கு, ஓரிருவர் ஓட அனைவரும் பெரும்பாலும் நிற்பார்கள்(பெரும்பாலும்...)..(நம்ம பசங்களா, டோர்னமென்ட்டை விட்டே சீக்கிரம் ஓடி வந்து விடுகிறார்கள்..., அங்கு ஓட முடிந்தால் நம் பசங்களில் திறமை தெரியவரும்) &lt;br /&gt;&lt;br /&gt;5.விளையாட்டிற்கு செய்தேன்(ஏன் விளையாடறே) என்பதெல்லாம் ஏன் வந்தது என்றால் தவறு செய்தால் விளையாட்டில் மீண்டும் நன்றாக விளையாடி சரி செய்துவிடலாம் ஆனால் இங்கு...? முடியாது...!(நம்ம பசங்களா எப்பவாவது ஒரு முறை, தூக்கிடுவேன் என்று பூச்சி காட்டினால் மட்டும் விளையாண்டுவிட்டு.. தேவையான மேட்சுகளில் கலுத்தை அருப்பார்கள்) &lt;br /&gt;&lt;br /&gt;6.சாதாரணமாக ஓரிருவர், சரியில்லை என்றால் குழுப் போட்டிகளில் அனைத்து விளையாட்டும் பாதிக்கப்படும் ஆனால் இங்கு ஓரிருவர் நன்றாக செய்தாலே போதும், பெரும்பாலும்வென்றுவிடலாம்...(இதனால் தான் தனக்குப் பிடித்த ஆட்களை, அணியில் சேர்த்துகொள்ள நன்றாக விளையாடுபவர்களை அனுமதிக்கின்றனர்...) &lt;br /&gt;&lt;br /&gt;7. முக்கியமாக அனைத்துவிளையாட்டுகளிலும் "ஸ்டேமினா" இருக்க வேண்டும்.. இங்கு பெரும்பாலும் நிற்கத் தெரிந்தாலே போதும்...&lt;br /&gt;&lt;br /&gt;8. கிழவர்களையெல்லாம் அம்ப்பயர்களாக நிற்க வைக்கலாம், மற்ற விளையாட்டுகளில்(சிலவை தவிர்த்து...) அவர்களும் ஓட வேண்டுமே..&lt;br /&gt;&lt;br /&gt;9.தொலைக்காட்சிப் பெட்டியைப் பார்த்து முடிவு சொல்பது இங்கு மட்டுமே புதிது...வேகம், வேகம் வேகத்தின் போது நமக்கே தெரியாத ஒன்றை எப்படி, அப்படிப் பார்த்து முடிவு செய்யலாம்...?(எப்படி ஏமாத்துறதாம், பிறகு... )&lt;br /&gt;&lt;br /&gt;10.எல்லாவற்றிற்கும் மேல், தெரிந்தே எதிர் அணியிலுள்ள வீரர்களை அடிக்க முடியாததேல்லாம் ஒரு விளையாட்டா..?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/153842835912349353-4563450093318415130?l=malargall.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://malargall.blogspot.com/feeds/4563450093318415130/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=153842835912349353&amp;postID=4563450093318415130' title='6 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/153842835912349353/posts/default/4563450093318415130'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/153842835912349353/posts/default/4563450093318415130'/><link rel='alternate' type='text/html' href='http://malargall.blogspot.com/2007/09/blog-post_18.html' title='கிரிக்கெட்டெல்லாம் ஒரு விளையாட்டா..?'/><author><name>மோகனா</name><uri>http://www.blogger.com/profile/10206294980960996941</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_9nysbCErfEE/SCc0lV224EI/AAAAAAAAENE/T09e-Q_vDbE/S220/DSCF0066.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-153842835912349353.post-4539874454589059913</id><published>2007-09-13T02:48:00.000-07:00</published><updated>2007-11-04T21:38:54.795-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெண்ணியம்'/><title type='text'>பெண்ணியம் பற்றி... பெண்</title><content type='html'>பெண்ணியம் பற்றி... &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த இரு வாரங்களாக பெண்ணியத்தைப் பற்றி, இரு ஆண்கள்(திரு.ஆழியூரான் ,ரத்னேஷ்) எழுதிவிட்டார்கள், என்னால் சும்மா இருக்க முடியலை, இதோ என் பக்க பார்வைகள்... ஆண் பெண்களை அடிமையெல்லாம் கொள்ளவில்லை அதை நான் ஒப்புக் கொள்கின்றேன்... தலைக்கவசம் அணிந்து கொள்ளத்தான் வேண்டுமென்று கூறினால், அரசாங்கம் மக்களை அடிமை கொண்டதாக ஆகிவிடாது... நான் நல்லாதான் வண்டி ஓட்டுவேன், எனக்கு வேண்டாம் என்று யாராவது கூற முடியுமா..? அப்படித் தான் பெண் மீதான கட்டுப் பாடுகள்... நான் தான் வண்டியே ஓட்டுவதில்லையே என்னையும் தலைக் கவசம் அணியச் சொல்லுவார்களோ என்று எண்ணுவது எத்தனை மடமையோ அப்படித் தான், சுதந்திரம் இருக்கும் பெண்களை கணக்கில் எடுத்துக் கொண்டு வாதாடுவதும்.... &lt;br /&gt;&lt;br /&gt;இதில் தலைக்கவசம் என்பது ஒரு (Hard Code...) அதில் general லாக எதை வேண்டுமானாலும் பெண்ணியத்தில் கூறலாம். உதாரணத்திற்கு வெளியிடங்களில் சத்தமாக சிரித்தால் தவறாக எடுத்துக் கொள்வார்கள் என்பது... இது சமுதாயம் சார்ந்து., எடுத்துக் கொள்வது ஆணோ, பெண்ணோ அல்ல,சமுதாயம்...! அந்த சமுதாயத்தின் கட்டுப்பாடு தான் சத்தமாக சிரிக்கக் கூடாது என்பது...! என் Hard Coded உதாரணத்தில் உயிரிழப்பதோ, அடிபடுவதோ ஏற்படும் என்றால், இங்கு கெட்ட பெயர்.! பாதிப்பு தனி மனுசிக்கு.! அரசாங்கம் மக்களிடம் என்னென்ன தவறுகள் செய்ய வாய்ப்புகள் இருக்கின்றதோ அதை பார்த்து சட்டம் இயற்றியது போல், அந்த காலத்தில் பெண்ணிற்கு ஏற்பட்ட பாதிப்புகளை வைத்து சில கட்டுப் பாடுகளை விதித்துள்ளனர்.(இன்றைய அளவில் தேவையில்லாத போதும் நாம் கடைபிடிப்போம் என்று நினைத்திருக்க மாட்டார்கள்)&lt;br /&gt;&lt;br /&gt;ஆண் சாப்பிட்ட தட்டில் சாப்பிட்டுவதற்கு நிறைய காரணங்களைக் கூறினார்கள். நானெல்லாம் அதற்கு ஒரே ஒரு காரணத்தை தான் சொல்வேன், தட்டு கழுவ அலுப்பு பட்டோ, அல்லது இயல்பாகவே மீறுகின்ற உணவுகளை சாப்பிடுவதற்காகவோ தான் அப்படி ஒரு பழக்கம் இருந்திருக்க வேண்டும்... ஏன் குழந்தைகள் மீதம் வைத்ததை சாப்பிடுவதில்லை என்று கேட்காதீர்கள், கணவனுடன் எவரையும் சமநிலையில் பார்க்க முடியாது(மாமியார் சாப்பாடு கோடுக்கவில்லையென்றால், தனக்காக சிறிய அளவை எடுத்து வைத்துக் கொள்ள அந்த பெண்ணிற்கு தெரியாதா என்ன..? அப்படி அப்படிப்பட்ட மாமியார் எப்போதும் சமையலரையிலேயே இருப்பாரா...?)&lt;br /&gt;&lt;br /&gt;தேவையில்லாத, கட்டுப்பாடுகளை மீறும் போது, அதை தவறுகளாக காணக்கூடாது என்ற மனப்பாட்டை சமுதாயத்திடம் உணர்த்துவது பெண்ணியத்தின் முக்கியமான ஒன்று... அதை விட்டுவிட்டு ஆணே சமைப்பதாலோ, பெண் அவள் விரும்பியபடி குடும்பத்தை ஆட்டி வைப்பதாலோ, தனித் தட்டில் சாப்பிடுவதாலோ,உடையணிவதாலோ மட்டுமே பெண்ணியத்தை அடைந்துவிட்டதாய் எண்ண முடியாது..! அது இந்தியா பணக்கார நாடு என்று, பெங்களூரை மட்டும் வைத்துக் கொண்டு முடிவு செய்வதற்கு சமம்...!&lt;br /&gt;&lt;br /&gt;கட்டுப்பாடுகளைக் கொடுத்ததும், கண்கானிப்பதும் சமுதாயமேயன்றி, ஆணோ, பெண்ணோ அல்ல.. ஏன் கூறுகின்றேனென்றால்.. நான் பெங்களூரில் இருக்குமளவு, திருச்சியிலிருக்க முடியாது, என் பாதுகாப்பே காரணம்... பெங்களூரில் 11.30 மணிக்கு கடைக்கு செல்வேன்.. ஆனால், திருச்சியில் முடியாது.. என் பெற்றோரும், நானும் ஒன்று தான், ஏன் மக்களும் கூட.. என் சமுதாயம் மற்றும் அதன் பாதிப்பு தான் வேறு... பெண்ணியம் என்பது இவையெல்லாம் மீறிய ஒன்று... &lt;br /&gt;&lt;br /&gt;இதற்கெல்லாம் தீர்வு என்ன என்பதை இன்னோரு பதிவில் தான் கூற வேண்டும்....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/153842835912349353-4539874454589059913?l=malargall.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://malargall.blogspot.com/feeds/4539874454589059913/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=153842835912349353&amp;postID=4539874454589059913' title='10 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/153842835912349353/posts/default/4539874454589059913'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/153842835912349353/posts/default/4539874454589059913'/><link rel='alternate' type='text/html' href='http://malargall.blogspot.com/2007/09/blog-post.html' title='பெண்ணியம் பற்றி... பெண்'/><author><name>மோகனா</name><uri>http://www.blogger.com/profile/10206294980960996941</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_9nysbCErfEE/SCc0lV224EI/AAAAAAAAENE/T09e-Q_vDbE/S220/DSCF0066.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-153842835912349353.post-8435140169631172354</id><published>2007-09-05T11:43:00.000-07:00</published><updated>2007-11-04T21:37:26.464-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><title type='text'>மாற்றம் ஒன்றே மாறாதது...</title><content type='html'>"வள்ளி நீ மட்டும் மாறவேயில்லை..." தீபா சொன்ன போது மனதுக்குள் வேதனை மிதமாகப் படர்ந்தது, அதே வேதனை அவளையும் தாக்கியிருக்குமா..? அவள் மனதில்லுள்ளதைப் படிக்க நினைத்து அவள் கண்களை ஊடுருவினேன் ஒன்றும் புலப்படவில்லை...&lt;br /&gt;&lt;br /&gt;"சரிம்மா, நான் வரேன் அப்புறம் கைபேசியில் பேசறேன்"  என்று கூறிவிட்டு அவள் குழந்தையை முத்தமிட்டு, வாசம் நுகர்ந்து, டாடா காட்டிவிட்டு கிளம்பினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தீபா, கல்லூரியில் முதல் மதிப்பெண் எடுக்கும் அழகான, புத்திசாலி மாணவி, ஒல்லியானவள், நீண்ட முடியில் எப்போதும் பூவைத்து, அழகாக சேலையோ, தாவணியோ கட்டி கண்களில் பாசமும், கண்டிப்பும் ஒருங்கே சேர்ந்தவள். &lt;br /&gt;&lt;br /&gt;இரட்டை அர்த்ததில் பேசும் தமிழ் ஆசிரியருடன் முரண்பட்டு அவரை மதிக்காமல், அவரிடம் எப்போதும் திட்டுவாங்கி, கண்ணீருடன் நிற்கும் அவளை எப்போதும் நாங்கள் பெருமையாக பார்ப்போம். சிறு ஆண்தன்மையுடனும், எதையுமே கண்டுகொள்ளாமல் இருக்கும் என்னைப் போன்றவர்களை அவர் எப்போதும் சீண்டாத போதிலும், அவர் மேல் உள்ள வெருப்பு அவளால் தானோ என்னவோ சற்று ஆழமானது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ ஒன்றிற்காக பாபுவிடம் அவள் அழும் போது, நான் தள்ளி நின்று வேடிக்கை பார்த்த பொழுதுகள் இன்றும் எனக்குள் ஆழமாக. பாபு என் தோழன், இதை செய், அதை செய்யாதே என்று அறிவுரை கூருவதிலிருந்து,ஆசிரியர் கேட்ட கேள்வியின் தெரியாத விடையினை புத்தகம் பார்த்து இலேசாகக் கூறி என்னைக் காப்பாற்றுவதிலிருந்து, நான் விடுதியில் படித்ததால் சிறு,சிறு உதவி செய்வது வரை அவன் என் உயிர்த் தோழன். என் இருக்கைக்கு பின் உட்கார்ந்து கொண்டு அவனும் அவன் நண்பர்களும் அடித்த லூட்டிகளுக்கு அளவே இல்லை..&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று இரவு பாபுவைப் பார்த்ததிலிருந்து பழைய நினைவுகள் மனதில் அடிக்கடி வந்து போயின, ஒரு வணிக வலாகத்தில் பாபுவை சந்தித்த போது, கல்லூரியில் பார்த்தபடியே இருப்பது போல இருந்தது, ஆனால் சற்றே முதிர்ச்சியும், தெளிவும் இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு உணவுவிடுதியில் சாப்பிட உட்கார்ந்தோம், ஆழமான உணர்வு பரிமாற்றத்தில் மனம் திக்கிக் திணறியது, அவன் கண்களில் அதே ஈர்ப்பு, கண்களைப் ஊடுருவிப் பேசினான், நான் காதலித்தது உனக்குத் தெரியுமா வள்ளி என்ற அவன் கேள்வியில் இருந்த வேதனையை,இயலாமையை நான் இலேசாக ரசித்தேன் அது என்னை சற்று வேதனித்தது. தோழமையான என்னுடைய ஒரு பார்வையில் அவன் வேதனையும், தயக்கங்களையும் மறந்து சராசரியாக பேசத்துவங்கினான்.&lt;br /&gt;&lt;br /&gt;தீபா வீட்டிற்கு அவன், என்னை அழைத்த போது வருவதாய் ஒத்துக்கொண்டு, அடுத்த நாள், கிட்ஸ் கெப்பில் அவனைச் சந்தித்தில் அவன் முகம் வாடியிருந்ததாய்ப்பட்டது. அது உண்மையா அல்லது எனக்கு தான் அப்படி படுகிறதா என்று புரியாமலேயே தீபாவின் குழந்தைக்கு உடுப்புகளும், பொம்மைகளும், ஒரு வண்டியும் வாங்கிக் கொண்டு கிளம்பினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் வீட்டை அதிக சிரமமின்றி கண்டுபிடித்து அடந்தோம். என்னைப் பார்த்த உடன் தீபா முகத்தில் சந்தோசம் படர்ந்தது, என் பின்னாலேயெ பாபுவைப் பார்த்ததும் அவள் முகத்தில் உற்சாகம் குறைந்ததை நான் மட்டும் கவனித்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;"வா வள்ளி, வா பாபு" என்று அவள் வரவேற்று சமையலறையில் நுழந்தாள். பாபு சோபாவில் அமர, நான் மட்டும் அவளுடனேயெ சென்று அவள் குழந்தையை வாங்கிக் கொண்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;"பாபு தான் சர்பிரைசா இருக்கட்டும் என்று சொல்லவேண்டாம் என்றான் உனக்கு சிரமமில்லையே" என்று நான் அவளை சமாதானம் செய்த போது அவள் முகத்தில் சிறு சந்தோசம் தென்பட்டது, அது நிச்சயம் என் மன பிராந்தியாய் இருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;காப்பி போட்டு அவனிடம் தீபா கொடுத்த பின் மிகப் பெரிய அமைதி அங்கு சூழ்ந்தது. நான் குழந்தையை கொஞ்சுவது போல் காலம் கடத்திக்கொண்டிருந்தேன். பிறகு குழந்தையைப்பற்றியும், கல்லூரியைப்பற்றியும் 30 நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;"சரி பாபு, நீ டி.வி பார்த்துக்கொண்டிரு நான் சமைக்கறேன்" என்று கூறி தீபா சமையலறையில் மறைய நானும் கூடவே சென்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;"வள்ளி, உன்னை பாபுவோட பேசாதனு சிரமப்படுதுவேன், நீ தான் அவன் கூட இப்ப வரை இருக்க.... " அவள் தொடர்ந்தாள். &lt;br /&gt;&lt;br /&gt;"நான் ரொம்ப சந்தோசமா இருக்கேண்டி, அவர் என்னை சந்தோசமா வைத்திருக்கார், பாபு கூட அப்படி வைத்திருக்க வாய்ப்பில்லைனு தோணுதுடி..." ஒருவேளை கணவனை விட்டுக் கொடுக்காமல் பேசுகிறாளோ என்று நினைத்தேன் ஆனால் அவள் பேசுவது உண்மைதான் என்று நிச்சயமாகப் பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;"இப்ப கூட, பாபு என்னைப் பார்த்து, நான் சந்தோசமா இருப்பதைப் பார்த்து வேறு திருமணம் செய்துப்பான் அது தான் எனக்கு சந்தோசமா இருக்கு..." அவளின் அந்த வார்த்தைகள் உண்மையாகத்தான் இருந்தது...&lt;br /&gt;&lt;br /&gt;சாப்பிடும் போது, இருவரும் பேசிக்கொண்டிருக்க நான் மட்டும் அமைதியாயிருந்தேன்... எத்தனையோ நாட்கள் கல்லூரியில் இருவரும் என்னை நடுவில் வைத்துக்கொண்டு என்னுடன் ஒரு வார்த்தை கூட பேசாமலேயே இருந்தது வேதனையாய் இருக்கும்..அவர்கள் காதலிப்பது கல்லூரிக்கே தெரிந்திருந்த போதும் எனக்கு இருவருமே கூறாதது ஏன் என்று பல முறை யோசித்துள்ளேன்., என்னிடம் பேசக்கூடாது என்று அவள் பாபுவிடம் கூறியிருந்ததையும் சேர்த்து...&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று பாபு என்னிடம் கூறியதுதான் எத்தனை உண்மை.. கல்லூரியில் காதலில் விழுந்து எத்தனையோ நட்புகளை இழக்கின்றோம் வள்ளி, அது போலத் தான் உன்னிடமும் என்று அவன் கூறிய போது கண்ணீரே வந்துவிட்டது.. அவர்கள் காதல் கைகூடியிருந்தாலும், இல்லாவிட்டாலும் நான் அவர்களுடனேயே இருப்பது அவனை நெகிழ்த்திருக்கும்... &lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் அப்போதெல்லாம் எனக்கும் கூட புரியத்தான் இல்லை, இந்த நட்பு எப்படிப் பட்டது என்று, இன்றும் தொடரும் நட்புகள் தான் ஒரு தியரியை, செய்முறையாக புரிய வைக்கின்றது. அப்போது எனக்கும் கூட அவனை என்னிடமும் பேச வைப்பதே நட்பாகத் தோன்றியது, எனக்குள் இருந்த பொருமை பிடிவாதமாக இருக்கவிடாமல் செய்ததால், நட்பு இன்றும்... அவர்கள் காதல் பிடிவாதமாய் இல்லாததால் இப்படி இன்று...&lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரி நாட்களில் தேவையில்லாத இடங்களில் பிடிவாதம் இருப்பதும், தேவையான இடங்களில் பிடிவாதம் இல்லாமலிருப்பதும் தான் வாழ்க்கையை திசை மாற்றுகின்றது... கல்லூரி கற்றுக் கொடுத்த வாழ்க்கைப் பாடத்தை ஆனாலும் கடைபிடிக்க முடிகின்றதா என்றால் கெள்விக்குறிதான்.. ஆனால் நினைவுகள் .....&lt;br /&gt;&lt;br /&gt;"வள்ளி" இருவரும் ஒன்று சேர்ந்து அழைக்க நினைவு திரும்பினேன்... &lt;br /&gt;&lt;br /&gt;"வா போலாம்" என்று பாபு அழைக்க, கிளம்பினோம்... &lt;br /&gt;&lt;br /&gt;"வள்ளி, அவனிடம் என்னை மறந்து வேரு திருமணம் செய்து கொள்ளச் சொல்... " அதற்கு மேல் அவளுக்கு வார்த்தை வரவில்லையா சொல்ல ஏதுமில்லையா எனத் தெரியவில்லை.. அவனும் அதற்கு தயாராகிவிட்டான் என்று சொல்லாமலேயே அங்கிருந்து கிளம்பினேன்... &lt;br /&gt;&lt;br /&gt;மேலிருந்து பார்த்த போது பாபு அழுதது போலிருந்தது, அவனுக்காக நான் அழுதது போலவே... அப்போது தான் தீபா சொன்னாள் "வள்ளி நீ மட்டும் மாறவேயில்லை..."&lt;br /&gt;&lt;br /&gt;டிஷ்கி:&lt;br /&gt;&lt;br /&gt;இதெல்லாம் தேவையானு என்னைத் திட்டிபுடாதிங்க.. ரொம்ப நாள் ஆசை.. தமிழ்மணம் தான் கிடைத்தது நிறைவேற்றிக் கொடுக்க... கொடுமையா இருந்தா மன்னிக்கவும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/153842835912349353-8435140169631172354?l=malargall.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://malargall.blogspot.com/feeds/8435140169631172354/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=153842835912349353&amp;postID=8435140169631172354' title='4 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/153842835912349353/posts/default/8435140169631172354'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/153842835912349353/posts/default/8435140169631172354'/><link rel='alternate' type='text/html' href='http://malargall.blogspot.com/2007/07/blog-post_17.html' title='மாற்றம் ஒன்றே மாறாதது...'/><author><name>மோகனா</name><uri>http://www.blogger.com/profile/10206294980960996941</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_9nysbCErfEE/SCc0lV224EI/AAAAAAAAENE/T09e-Q_vDbE/S220/DSCF0066.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-153842835912349353.post-5952606860545961463</id><published>2007-08-28T21:13:00.000-07:00</published><updated>2007-11-04T21:36:02.766-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுயம்'/><title type='text'>அடர்ந்த காட்டில் நடைபெற்ற மணம்...</title><content type='html'>தாலி கட்டினா அது திருமணம்னா எனக்கும் கல்யாணம் ஆயிட்டுங்க போங்க.. இதோ என் திருமணக் காதை..&lt;br /&gt;&lt;br /&gt;அழகான ஒரு காலை, சாரல் தூரும் இனிய மழைக்காலம், நனைந்த சாலையில் அம்மாவுடன் கைக்கோர்த்து நடந்தேன், சிறுபிள்ளையாக மாறிவிட்டதாய் குதூகலம், பேருந்துப் பயணத்தில் அம்மாவை வயிரு வலிக்கச் சிரிக்க செய்து கொண்டே, அப்பாவைத் திரும்பி பார்த்தால், அவர் தியானம் செய்கிறேன் என்ற போர்வையில் தூங்கிக்கொண்டு வந்தார்..&lt;br /&gt;&lt;br /&gt;பேருந்து நிலையத்தில் இறங்கிய உடன் எங்கு போக வேண்டுமோ அந்த ஊரை இருவரும் மறந்து தொலைத்துவிட்டு இருந்தார்கள்..எனக்கு குதூகலம் தாங்க முடியவில்லை. பின்னர் அம்மா எப்படியோ "திருவனங்ஞீலி"(வனத்திலுள்ள ஞீலிங்கேஸ்வரர்)என்று கண்டுபிடித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"எங்கேர்ந்து தான் பிடிச்சிங்களோ இந்த ஊர, ஒருத்தன விலை கொடுத்து வாங்க இந்த வேலையெல்லாம் வேற" என்று கிண்டல் செய்தேன், அம்மா திட்டுவாங்கனு பார்த்தா சிரிக்கிறார்கள். அப்பா முறைக்க, பேருந்தை தேடிப்பிடித்து உட்கார்ந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;திரும்பவும் நான் சும்மா எல்லோரையும் கிண்டல் செய்து அம்மாவை சிரிக்கப் பண்ணிக் கொண்டு வந்தேன். பேருந்தில் சிலரே இருந்தார்கள் நடத்துனரும் கூட சந்தோசமாகத் தான் இருந்தார்.. அந்த பேருந்தில் ஒரு பையன் (அழகான) உட்கார்ந்து கொண்டு வந்தான், என் அப்பா அவனுக்கு பின்னால் உட்கார்ந்திருந்தார்.. அம்மா, அப்பா என்ன செய்கிறார் பார் என்று சொன்ன போது(மட்டும்) திரும்பி பார்த்துக் கொண்டே வந்தேன்.. நான் அவனை தான் பார்க்கிறேன் என்று அவனுக்கு சந்தோசம்.. கடைசியில் அப்பாவுடன் பேசிய போது அவன் வழிந்த அசடு இருக்கின்றதே.. என்ன ஒரு காமெடி...&lt;br /&gt;&lt;br /&gt;அந்த சாலை காட்டின் நடுவே போனது, வழியில் அவ்வப்போது சிறு, சிறு கிராமங்கள், வீடுகளைத் தேடிய போது தூரத்தில் அம்மா காட்டினார்கள்... வளைவுகளில் ஓட்டுனர் சப்த்தமெலுப்பினாலும் சில வண்டிகள் இடிக்கும் அளவு வந்தன. இந்த சாலையில் போகும் ஒரே பேருந்து இதுதானோ(!)..&lt;br /&gt;&lt;br /&gt;"இதெல்லாம் வியாபரம்மா, பாரு இந்த கோயிலுக்கு எவனாவது போவானா அதுவும் திருச்சிய மாதிரி 1008 கோயில்களை நகரத்திலேயெ வைத்துக்கொண்டு? அதான், இந்த மாதிரி பரிகாரம், தொசம் கழிக்கறேன் பேர்வழினு ஏமாத்தினா நீ என்னையும் இழுத்துட்டு வந்துட்ட இல்ல..."அம்மாவிடம் கத்தினேன்.ஆனால் அந்த நாளின் குளுமையும், அம்மாவின் அருகாமையும் என்னை மகிழ்வித்ததே உண்மை..&lt;br /&gt;&lt;br /&gt;கோயிலையடைந்தோம்.. பழமையான கோவில், பெரும்பாலும் தம்பதிகளையே பார்க்க முடிந்தது(புதிதாக திருமணமான).. கோயிலில் நுழைந்த உடன் ஒருவர் எங்களை அணுகி, தான் உதவுவதாகவும் குறைந்த பட்சம் 100 ரூபாய் என்றும் சொன்னார்.. (நமக்காய்  பரிகாரம் செய்யத் தெரியாதாம்...)இவர்களும் சரியென்றனர்.. அப்போது சுழல ஆரம்பித்தவர் தான் என் தோசத்தை கழித்து விட்டுத் தான் அடுத்த வேலை பார்த்தார்...&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் பார்த்தது எமதர்ம ராஜன், (ஏன்.....!).. பிறகு விநாயகர் (புதிதாக இல்லை...)..! ஒவ்வொரு இடத்திலும் சூடம் கொழுத்தி, விழுந்து கும்பிட்டு... அப்பப்பா... இதில் குரங்கு வேறு என் கையிலிருக்கும் பழங்களுக்காக... சாமி என்று எவரிடமோ தருவதற்கு, அதனிடமாவது தந்திருக்கலாம்... அதில் அவர்களின் அய்டியாக்களைப் பார்க்கணுமே.. ஒரே அய்யர் தான் எல்லா கோயிலுக்கும்... இவர்(உதவி.. செய்வதாகக் கூறியவர்) விளக்கு ஏற்றும் போது நேரம் ஆகாமலிருக்க திரியின் அடியில் சூடத்தை வைத்து அதை ஏற்ற சொல்கிறார்..(என்ன வேகம்..), இவருக்கு நிகராக அய்யர், எல்லா கோயில்களில் உள்ள மக்களிடமும் தட்சனைப் பெற நேரத்தைப் பக்காவாக உபயோகிக்கிறார்...(மல்டி புராசசிங் தான் போங்க)&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு ஒரு இடத்தில் ஒரு அய்யர் தோசம் கழிக்கப் போவதாகச் சொல்லி என்னென்னவோ செய்தார்(ஒரு நிமிடம்..) மந்திரத்தைச் சொன்னார்(2 நிமிடம்.)... 3 நிமிடம் கூட சொல்லாத மந்திரத்திற்கு 30 ரூபா...! பிறகு தான் கூத்தே.. ஒரு தாலியைக் கொடுத்து வாழை மரத்துக்குக் கட்ட சொல்லிட்டாங்க... எனக்கு கோபம் வருவதைப்பார்த்து அம்மா இது தான் கடைசி என்று தேற்றினார்கள்.. கோபம்னா, கோபம் எனக்கு...முறைத்துக் கொண்டே கட்டினேன், அம்மா சிரித்துக் கொண்டே இருந்தார்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு ஒரு குட்டி மாலையைக் கொடுத்து அதை வீட்டுக்கு முன் கட்டணுமாம், அப்படிக் கட்டினால் எல்லோரும் என்ன, என்னனு கெட்பார்கள் கண் திருச்டி போய்டும்னார்...( அம்மா அது போலவே செய்ய யாரும் என்னனு கேட்கவில்லை என்பதும் காமெடி...).. பிறகு கொஞ்சம் குங்குமத்தைக் கொடுத்து இது தீர்வதற்குள் எனக்கு மாப்பிள்ளை கிடைக்குமென்றார்..(இந்தியனின் காப்பியா, இதின் காப்பி தான் அதுவா..?) நான் அதை உபயோகிப்பதில்லை என்பதைக் கூறவும் வேண்டாம்...&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு ஒரு சாப்பாட்டுப் பொட்டலம் வாங்கி காக்காய்க்கு வைக்கச் சொன்னார், நான் அந்த இடம் போகும் முன்பே எல்லா காக்கைகளும் அங்கு ஆஜர்... உங்க குலதெய்வம் பெண்ணாக இருந்தால் போகும் முன்னே காக்காய்கள் வரும் என்று ஒரு பெரிசு கூறியது( இது அந்த காக்காய்க்கு தெரியுமா...?) அதுமட்டும் போதாதாம்.. என் வயது அளவு சாப்பாட்டு பொட்டலங்கள் வாங்கி அதை தானம் செய்ய வேண்டுமென்றார்.. கொடுக்கப் போகும் போது, பிச்சைக்காரர்களுக்குள் அத்தனை சண்டை.. கெட்ட வார்த்தைகளிலெல்லாம் திட்டிக் கொண்டனர்.. கொடுக்கும் போது கடுப்படிக்கக் கூடாது என்று முகத்தில் புன்சிரிப்பை கட்டாயப்படுத்தி வரவழைத்தேன்...&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு ரொம்ப நேரம் காத்திருந்து பேருந்திலேரி வந்தோம்... இது எந்த வகையிலும் எனக்குப் பயன் தராது என்று தெரியும், அம்மா, அப்பாவிற்கு சிறிது ஈடுபாட்டைத்தரும் என்பதை தவிர.  அப்பா, தாத்தா ரொம்ப பழைய காலத்து ஆட்கள், அவர்களுக்காக ஒப்புக் கொண்டேன்.. (என் எந்த வகையான நியாப்படுத்துதலும் அவர்களின் நம்பிக்கையை தகர்க்காது)ஆனால் அம்மா அப்பாவுடன் சென்று வந்தது மனதுக்கு சந்தோசமாகவும், வித்யாசமான அனுபவமாகவும் (பிளாக் எழுத உபயோகமாகவும்) இருந்தது... &lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக "என்ன போ, என்னை எமாத்தி, வாழாவெட்டியாக்கிட்டியேமா... அந்த வாழ மரத்தையும் தூக்கி கொண்டு வந்து தோட்டத்தில் நட்டிருக்கலாம்" என்று நான் சொன்ன போது அம்மா நீண்ட நேரம் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.. அதற்காக என்ன பைத்தியக்காரத்தனங்கள் வேண்டுமானாலும் செய்யலாம்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/153842835912349353-5952606860545961463?l=malargall.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://malargall.blogspot.com/feeds/5952606860545961463/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=153842835912349353&amp;postID=5952606860545961463' title='4 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/153842835912349353/posts/default/5952606860545961463'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/153842835912349353/posts/default/5952606860545961463'/><link rel='alternate' type='text/html' href='http://malargall.blogspot.com/2007/08/blog-post_28.html' title='அடர்ந்த காட்டில் நடைபெற்ற மணம்...'/><author><name>மோகனா</name><uri>http://www.blogger.com/profile/10206294980960996941</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_9nysbCErfEE/SCc0lV224EI/AAAAAAAAENE/T09e-Q_vDbE/S220/DSCF0066.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-153842835912349353.post-6537645301529820223</id><published>2007-08-20T23:18:00.000-07:00</published><updated>2011-05-20T05:30:08.438-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெண்ணியம்'/><title type='text'>மென் துறையில் பெண்கள் ஒப்புக்குச் சப்பானியா..?</title><content type='html'>பெண்ணியம் இல்லங்கோ.. பரவாலக என் ஆண் நண்பர்களும், அலுவலக நண்பர்களும், உறவினர்களும் இந்த கருத்தை முன்னிருத்துவார்கள்... அதான் நானும் அந்த துறையில் இருப்பதால் அதைப்பற்றி என் கண்ணோட்டம், &lt;br /&gt;&lt;br /&gt;நான் அறிந்த ஆண்கள் அனைவரும் ஆணியம் பேசினாலும் எனக்கு அனைத்து வகையிலும் உதவியாகவே தான் இருப்பார்கள்.. என்னை எந்த வகையிலும் கட்டுப்படுத்த மாட்டார்கள்.. தண்ணி தெளிச்சிவிட்டார்களா என்று தெரியவில்லை...  ஆனாலும் அவர்கள் என்னை மிகவும் கிண்டல் செய்வார்கள்.. அவற்றை யோசித்தால் எனக்கு சில சமயம் கோபமாகவும் வரும், சில சமயம் சிரித்துவிட்டு விட்டுவிடுவேன்... இப்போ எழுத ஊடகம் இருப்பதால் எழுதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் முதுகலை கல்லூரி படித்த போது, பெண்கள் கல்லூரியில் படித்தேன்.. திறமையாக நிகழ்வு(புரோக்கிறாம்) எழுதும் பெண்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்... ஆனால் அது கலை அறிவியல் கல்லூரி.. தொழில் நுட்பக் கல்லூரிகளில் அறிவாளிப் பெண்கள் இருந்திருக்கலாம்.. ஆனால் மற்றவர்களின் பார்வை ஒன்றாகத்தான் இருந்திருக்குமென்று நினைக்கிறேன்...&lt;br /&gt;&lt;br /&gt;விசயத்திற்கு வருகிறேன்... அந்த விரல் விட்டு எண்ணும் பெண்களில் பலர் திருச்சியை விட்டு வெளியே வரவே மாட்டார்கள்... வேலை எல்லாம் கனவுதான். நல்ல அறிவாளிப் பெண்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை, வாய்ப்பு கிடைப்பவர்கள் எல்லாம் அறிவாளிகலும் இல்லை.. பெரிய பின்னடைவு என்னெவென்றால் "ஆங்கிலம்".. ஆண்களை விட பெண்களே அங்கிலம் நன்றாக பேசுவதை கவனித்துள்ளேன்.. ஆனால் அவர்கள் புத்திசாலியாகவும் இருக்க மாட்டார்கள்.. அந்த ஆங்கிலத்திற்காகவே வேலையில் அமர்த்தும் நிறுவனங்களும் அதிகம்... அப்படிப்பட்ட நேரத்தில் திறமையான பெண்கள் வாய்ப்பை நலுவ விடுகிறார்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;சரி, கெம்ப்பச்சில் வேலை தேடலாம் என்றால் அங்கு தான் விசயம் ஆரம்பிக்கின்றது.. நானும் ஒரு பெத்த கம்பெனியில் நேர்முகத்தில் கலந்து கொண்டேன்... நான் கவரும் அளவு அழகெல்லாம் இல்லை... தேர்ச்சி பெற்ற அனவரும் அ வையும் பி யயும் கூட்டி சி யில் போடக் கூட தெரியாதவர்கள்... அழகானவர்கள்... மதிப்பெண் அதிகம் 12த் தில்.. &lt;br /&gt;&lt;br /&gt;மிகவும் உடைந்து போனேன்.. நமக்கு கிடைக்கலையே.. கான்செப்ட் கூரும் முன் கோட் எழுதும் எனக்கு வந்த இயல்பான கோபம்., போங்கடா யாரை நம்பி நான் பிறந்தேன் என்று பெங்களூரில் வந்து இப்போது சேர்ந்திருக்கும் கம்பெனியில் கூட நல்ல பெயர். ஏன் சொல்ல வந்தேன்னா.. திறமை பார்த்து வேலைக்கு அமர்த்தினால் தான் வேலை பார்ப்பார்கள், அழகு பார்த்து அமர்த்தினால் அவர்கள் கொலு பொம்மையாகத் தான் இருப்பார்கள்... அது தானே லாஜிக்..&lt;br /&gt;&lt;br /&gt;என் அம்மான் அவர்கள் மைக்குரோ சாப்ட்டில் வேலை பார்க்கிறார், அவர் சொல்லுவார் எங்க டீமில் 15 பேர், அதில் 2 பெண்கள்னா நாங்க 13 நாக தான் டீமை நினைப்போம் என்று... மைக்குரோ சாப்ட்டிலேயே இப்படியா..? அதுவும் அலுவலகத்தில் அழகு பெண்கள் இருப்பதை பலர் விரும்புகிறார்கள்.. திறமைக்கும் இடம் உண்டு என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன்.. &lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலான இடங்களில் திறமையை விட அழகும், ஆங்கிலமும், பந்தாவுமே எடுபடுகின்றன.. மனிதர்களுக்கு மற்றவர்களை கவனிக்கும் திறன் அல்லது கலை பொதுவாக குறைந்து வருகிறது.. அதனால் வெளி தோற்றத்திற்கு மதிப்பு கொடுத்து தவறான கண்ணொட்டத்தில் உள்ளவர்களை அதிகம் பார்க்கிறேன்.. ஆனால் முதல் கோணல் முற்றிலும் கோணல்.. அதனால் தேர்வு செய்யும் போது கோட்டை விடும் ஆண்கள் இருக்கும் வரை, கிண்டல் செய்யும் ஆண்களும் இருப்பார்கள்... கண்டுகொள்ளாமல் போவது தான் புத்திசாலித்தனம்..&lt;br /&gt;&lt;br /&gt;நன்றாக வேலை செய்தால் ஈகோ பார்க்கும் ஆண் நண்பர்களும், பெண்களுடன்  கண் பார்த்து பேசும் தைரியம் இல்லாமல் தரை பார்த்து பேசும் அலுவலக பெரிய தலைகளும், பெண்களைக் கவர கோட் எழுதி உதவி செய்யும் ஆண்களும் அலுவலகத்தில் அதிகம்.. அவர்களை நினைத்தால் எரிச்சல் தான் வரும்., அவர்களின் இந்த நடவடிக்கை மனதளவில் பாதிக்கும், பல முறை நாம் வேலை செய்வதைப் பற்றி கூட எங்களிடம் பேச தயங்கும் ஆண்களை நிறைய பார்க்கிறேன்.. (இத்தனைக்கும் நான் எளிமை மற்றும் பந்தா இல்லாத பார்ட்டி) அதனால் அவர்களின் அறிவை நாங்கள் பகிர்ந்து கொள்ள முடியாது.. ஆண்கள் அவர்களுக்குள் பகிர்ந்து கொள்ளும் அளவு, பெண்களுடன் பகிர்ந்து கொள்வதில்லை அதை நான் நிறைய கண்டுள்ளேன்..&lt;br /&gt;&lt;br /&gt;என்னை முதலில் வேலைக்கு அமர்த்திய சிறிய கம்பெனி முதலாளி, தான் பெண்களை வேலைக்கு அமர்த்துவதில்லை என்றும் என்னை மட்டுமே அமர்த்துவதாகவும் கூறுவார்...(!!!!) நான் 11 மணி வரை கூட இருந்து சில முறை வேலைப் பார்ப்பேன்...( தேவைப்பட்டால்..) அதிக நேரம் வேலைப்பார்ப்பதில் எனக்கு உடன் பாடு இல்லை, ஆண்களாக இருந்தாலும், மென் துறையாக இருந்தாலும் 8 மணி நேரமே அதிகம் என்பதே என் கருத்து.. இரவு பூராக இருக்கும் ஆண்கள் தான் அதிகம் வேலை பார்க்கிறார்கள் என்றால் அது அபத்தம்... தேவையும் அற்றது...&lt;br /&gt;&lt;br /&gt;அதனாலேயெ பெண் மென் துறை வல்லுனர்களுக்கு பொருப்பு இல்லை என்று கூறும் ஆண்களை நான் கண்டு கொள்வதே இல்லை., என்னால் 8 மணி நேரத்தில் எழுத முடியாததை 16 மணி நேரம் கொடுத்தாலும் எழுத முடியாது., இது என் கருத்து.. என் வழக்கம்.. இப்போது நான் வேலைப் பார்க்கும் அலுவலகத்தில் சப்போர்ட்டுக்காக வரும் மென் பொறியாளை கூட இதை வலியுருத்துவார்.. பெண்கள் ரொம்ப நேரம் இருக்காதிங்கம்மா என்று, சில ஆண் அலுவலக நண்பர்களும் கூறுவதுண்டு அவசியமில்லையென்று...(நான் இருப்பது)&lt;br /&gt;&lt;br /&gt;அடடா எதை விடுவது, எதை எடுத்துக்கொள்வது, மொத்தத்தில் திறமையிருந்தால் மதிப்பார்கள், ஆனல் திறமைக்கு இடமும் கொடுக்க வேண்டும்.. எதைத் தேடுகிறோமோ அது தான் கிடைக்கும், அறிவைத் தேடினால் அறிவும், அழகைத் தேடினால் அழகும்... அழகானவர்கள் அறிவில்லாதவர்கள் என்றும் சொல்ல வரவில்லை... முக்கியத்துவம் என்றும் அறிவிற்கே கொடுக்கப்பட வேண்டும், அலுவலகத்திலாவது(.........!)&lt;br /&gt;&lt;br /&gt;எளிதாகக் கிடைக்கும் பழங்கள், மரத்தடியிலேயே கிடக்கும், நல்ல பழங்களுக்கு மரத்தில் ஏறி துன்பப்படத்தான் வேண்டும்.. ஏற சோம்பேரித்தனம் பட்டுக் கொண்டு நல்ல பழங்களே இல்லை என்பது முட்டாள் தனம்... (எங்காவது நம்ப தலைப்பிற்கு பொருந்துகிறதா?)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/153842835912349353-6537645301529820223?l=malargall.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://malargall.blogspot.com/feeds/6537645301529820223/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=153842835912349353&amp;postID=6537645301529820223' title='23 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/153842835912349353/posts/default/6537645301529820223'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/153842835912349353/posts/default/6537645301529820223'/><link rel='alternate' type='text/html' href='http://malargall.blogspot.com/2007/08/blog-post_20.html' title='மென் துறையில் பெண்கள் ஒப்புக்குச் சப்பானியா..?'/><author><name>மோகனா</name><uri>http://www.blogger.com/profile/10206294980960996941</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_9nysbCErfEE/SCc0lV224EI/AAAAAAAAENE/T09e-Q_vDbE/S220/DSCF0066.jpg'/></author><thr:total>23</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-153842835912349353.post-2469288925796294888</id><published>2007-08-20T04:14:00.000-07:00</published><updated>2007-11-04T21:32:17.201-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வெட்டி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஒட்டியது'/><title type='text'>தலைப்புச் செய்திகள் 2023</title><content type='html'>1. இந்திய ஜனாதிபதி சோனியா காந்தியும், பிரதமர் பிரியங்கா காந்தியும், இத்தாலியப் பிரதமர் ராகுல் காந்தியை புது தில்லி விமான நிலையத்தில் நேற்று வர வேற்றனர்..&lt;br /&gt;2. தூம் 17 திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது என்று அப்படத்தின் தாயரிப்பாளர் தெரிவித்தார்.....&lt;br /&gt;3. நான் அடுத்த உலகக் கோப்பையில் விளையாடுவேன் - சச்சின் பேட்டி..&lt;br /&gt;4. சல்மான், விவேக் மற்றும் அபிசேக் அய்ஷ்வர்யாராயின் மூன்றாவது திருமண விழாவில் கலந்து கொண்டனர்...&lt;br /&gt;5. பெட்ரோல் விலை Rs.999/Lt&lt;br /&gt;6. இந்திய பயிற்சியாளர் சவ்ரோவ் கங்குலி, கென்யாவுடனான மோசமான தோல்விக்குப் பின் தன் வேலையை ராஜினாமா செய்தார்...&lt;br /&gt;7. கிரிக்கெட் வர்ணனையாளர் சித்து, தன்னுடைய புதிய தொலைக்காட்சி சேனலைத் துவக்குகிறார், அதன் மூலம் தான் நாள் முழுவதும் பேசமுடியும் என நம்பிக்கைத் தெரிவித்தார்...&lt;br /&gt;8. சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் "எம்.ஜி.ஆர்"ரில் பெரும் பகுதி முடிந்து விட்டதாகவும், ஷ்ரேயா அதில் அவருடைய அம்மா வேடத்தில் அருமையாக நடித்துள்ளதாகவும் வெற்றிப் பட இயக்குநர் மங்கர் தெரிவித்துள்ளார்,,,&lt;br /&gt;9. இன்றும் நான் இளமையாகவே உள்ளேன்.. தேவ் ஆனந்த்&lt;br /&gt;10. கோலங்கள் இரண்டாம் பகுதி, 25,000 வது எப்பிசோட்...... வெற்றிகரமாக தொடரை எடுத்துச் செல்லும் இயக்குனருக்கு பல்வேரு தரப்பு ஆண், பெண்களிடம் பலத்த வரவெற்பு...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/153842835912349353-2469288925796294888?l=malargall.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://malargall.blogspot.com/feeds/2469288925796294888/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=153842835912349353&amp;postID=2469288925796294888' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/153842835912349353/posts/default/2469288925796294888'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/153842835912349353/posts/default/2469288925796294888'/><link rel='alternate' type='text/html' href='http://malargall.blogspot.com/2007/08/2023.html' title='தலைப்புச் செய்திகள் 2023'/><author><name>மோகனா</name><uri>http://www.blogger.com/profile/10206294980960996941</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_9nysbCErfEE/SCc0lV224EI/AAAAAAAAENE/T09e-Q_vDbE/S220/DSCF0066.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-153842835912349353.post-5214613205811548055</id><published>2007-08-16T02:58:00.001-07:00</published><updated>2007-10-21T05:33:40.263-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுற்றுலா பெங்களூரு'/><title type='text'>நடந்தாய் வாழி காவேரி</title><content type='html'>காவேரி என்றாலே பிரச்சனை என்பதை மட்டுமே அறிந்திருந்த பெங்களூர்-திருச்சி வாசியான நான் காவேரியின் பசுமை ஆட்சியைக் கண்டு மலைத்து நிற்கிறேன்.. ஆம் இனிய மழை நாளில் கூர்க்கை(குடகு) நோக்கிய ஒரு மறக்க இயலாத பயணத்தை காவேரி தான் எனக்குத் தந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மார்கழியில் காஷ்மீர் போல், மழை நாளில் குடகை நோக்கிய பாதைகளும், குடகும் முழுமையானது. பசுமை ஆட்சி செய்து கொண்டு தளிர் நடை போடும் காவேரி தான் எத்தனை அழகு, பசுமையையும், செழிப்பையும் கொட்டிக் கொடுக்கும் வள்ளல் அவள்... அவளை எதிர் கொண்ட பாதைகளிலெல்லாம் பசுமையை மட்டுமே காண முடிகிறது...&lt;br /&gt;&lt;br /&gt;மைசூரைத் தாண்டிய கணத்திலிருந்து, குடகை நோக்கிய பாதையில் இரு புறமும் பசுமை, பசுமை, பசுமை மட்டுமே... எந்த வயலும் வெறுமையில்லை, காய்ந்தில்லை.. அவர்களின் செழிப்பு வயல்களிலேயே தெரிகிறது.. சோளம், காப்பி, கேள்வரகு என்று ஏதாவது பயிர்கள்.. பச்சை பசேலென மனதைப் பறித்தது&lt;br /&gt;&lt;br /&gt;குடகிற்கு 50 கிலோ மீட்டர் முன் திபெத் மக்களுக்காக நம் அரசு கொடுத்திருக்கும் பகுதி வருகிறது.. அவர்கள் எப்போதும் பூசை செய்து கொண்டிருக்கிறார்கள், அவர்களுக்கு கொடுத்த பூமியை அவர்கள் பங்கிற்கு சுவர்க்க பூமியாக செய்திருக்கிறார்கள்.. கோல்டன் டெம்ப்பிலில் பல வெளி நாட்டினரைப் பார்க்க முடிகிறது.. நம் கோயில்களில் சிற்பங்களைப் போல், அவர்களும் சுவர்களில் ஓவியங்கள் வரைந்துள்ளனர்.. புத்தர் சிலைகள் எப்போதும் போல பெரியதாக உள்ளன அவர்கள் செய்யும் பூசை பிரம்மாண்டமாக, அழகாக உள்ளது... மடம் உள்ளது., ஆண்கள் மட்டுமே உள்ளனர்(....!!).. சிறு குழந்தைகளிலிருந்து, முதியோர்கள் வரை உள்ளனர்..&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பிறகு 10 கிலோ மீட்டர் தொலைவில் காவேரி சுற்றிக்கொண்டு ஓடுகிறது.. அதை சுற்றுலாத் தாலமாக செய்துள்ளனர்.. அதன் பிறகு ஒரு 15 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு அணையும் ஊள்ளது.. கிருஷ்ண ராஜ சாகருக்கு முன்பு உள்ள ஒரு அணை அது... மழை பொய்க்காமலிருந்தால் அது தேவையற்றதோ எனுமளவு வழியெங்கும் மழை..&lt;br /&gt;&lt;br /&gt;காவேரி நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை என்பதால் நல்ல மழை பெய்து கொண்டிருந்தது.. அந்த மழையில், மலையில் இயற்கைக் காட்சிகள் மனதைக் கொள்ளை கொண்டது... இரு புறங்களிலும் மலை, மழை மேகங்கள், பசுமையான, பனி மூடிய மலை  உச்சி, அதே போல் ஒரு மலையில் பயணிக்கிறோம் என்பதே இன்பம்...மனதில் ஒரு சிலிர்ப்பு...&lt;br /&gt;&lt;br /&gt;ஆம், மழை மேகங்களுடன் பயணித்தது, நீர்த்துளியாகாத ஈரம் உணர்ந்து, பனி மூடிய மலையில், எனை மூடிய பனியில் குளிர்ந்து.. தூரத்தில் தெரியும் மலை பார்த்து, அது போலொரு மலையில் நிற்கிறோமென குதூகலித்து.. அந்த உணர்வுகளை சொல்ல வார்த்தைகளில்லை....... பெங்களூர் போல் குளிரவில்லை, பனி மூட்டத்தால் மூடிய சாலைகளை விட, மழை மேகங்களால் மூடிய சாலைகள் ரசிக்கத்தக்கவை...&lt;br /&gt;&lt;br /&gt;எனை கடந்து போன மேகங்கள், நான் கடந்து போன மேகங்கள், என்னிடம் ஒட்டிக் கொண்ட ஈரம் என அனத்தும் என் இருதி வரை கூட வருமோவென்றிருந்தது... இவையனைத்தும் பொழியும், பெருகி வழியும், வழிந்து சிற்சிறு ஓடங்களாய்(....?) குவியும்.. கண்கள் இது தான் காவேரியா எனப் பல முறை சந்தேகித்தது.. கிலோ மீட்டரில் இரு பக்கங்களையும் தொட்டுக்கொண்டோடும் காவேரியையே பார்த்த எனக்கு, 100 மீட்டரில் பல காவேரியோ என்றே தோன்றியது... நதி மூலம் பார்க்கக்கூடாது....! &lt;br /&gt;&lt;br /&gt;குடகு மலையிலிருந்து 40 கிலோ மீட்டரில் தலைக்காவேரி(!).. சிறியதாய் ஓடுவதைக் காட்டி இதே தலைக் காவெரி என்றனர். அங்கு வேரு எதும் சிறப்பாக இல்லை... மழை நாளில் சென்றதால் சுவர்கமாகப் பட்டது... குடகில் அருவிகள் இருந்தது.. அழகான காட்டுப் பகுதியில் அருவிகள்...  வீடுகளில்லாமல், பெரிய கடைகளோ, கட்டடங்களோ இல்லாமல்,கணிணியில்லாமல், மலைகளை, காடுகளைக் காணவே இன்பமாயிருந்தது..&lt;br /&gt;&lt;br /&gt;ஆறு மாதங்கள் கூட விடாமல் மழை பொழியுமாம், அந்த மக்களின் அன்றாட வாழ்வில் தான் எத்தனை துன்பங்கள்.. மின்சார இணைப்பு துண்டித்து, தொலை பேசி இணைப்பும் துண்டித்து துன்பப்படுகின்றனர்.. ""எங்கள் ஊரில் பொழியும் மழையை நாங்கள் ஏன் தர வேண்டும்"" என்ற கன்னட மக்களின் கேள்வி, நியாயமோ என்று ஒரு நொடி (மட்டும்) தோன்றியது...&lt;br /&gt;&lt;br /&gt;அங்கிருக்கும் திரையரங்குகளில் தமிழ் படங்கள்., கேட்டால் அங்கிருக்கும் பெரிய, பெரிய எச்டேட்டுக்கள் பல சென்னை வாசிகளுடையது என்றனர்.. நல்ல உணவும் கிடக்கிறது.. அடிக்கடி படப்பிடிப்பு நகக்கிறது.. எப்போதும் மழை பொழிகிறது....!&lt;br /&gt;&lt;br /&gt;கைப்பேசியில் வைத்திருந்த சிலப்பதிகாரத்தில் காவேரியின் எழிலைப் படித்துக் கொண்டே, காவேரியுடன் கைக்கோர்த்து நடந்ததைப் போல், அதனுடனே நடந்தப் பொழுதுகள்.... "முங்காரு மலை" என்ற கன்னட படத்தில் வந்த பிரபலமான பாடலைக் கேட்டுக் கொண்டே குடகில் நடந்த பொழுதுகள்..(அங்கே படப்பிடிப்பு நடந்தது..)... அடாது பெய்த மழையிலும், விடாது நனைந்து சுற்றித்திரிந்த காலங்கள்.. மனதில் என்றும் நீங்காத ஒரு நிகழ்வு.. &lt;br /&gt;&lt;br /&gt;என் ஊரில் கூட காவேரி பாய்கிறது, இத்தனை பசுமையா காண்கிறது என்ற கேள்வி சற்றே பொறாமையை, என் மனதில் சிறு தூரலாய் தூவியது... ஆனால் காவேரி இல்லாமல் என் ஊரை நினைத்தும் பார்க்க முடியவில்லை... காவேரி அங்கும், இங்கும் செல்லுமிடமெல்லாம் பசுமையை, அழகுகளைக் கொடுக்கிறது... அணைகளெனும் விபத்தில் சிக்கினாலும், போராட்டக்காரர்களின் சொல்லில் தயங்கினாலும், என் ஊர் மக்களை மனதில் கொண்டோ, இயல்பாகவோ, நடந்தாய் வாழி காவேரி...நடக்கிறாய் வாழ்க காவேரி...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/153842835912349353-5214613205811548055?l=malargall.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://malargall.blogspot.com/feeds/5214613205811548055/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=153842835912349353&amp;postID=5214613205811548055' title='4 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/153842835912349353/posts/default/5214613205811548055'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/153842835912349353/posts/default/5214613205811548055'/><link rel='alternate' type='text/html' href='http://malargall.blogspot.com/2007/08/blog-post.html' title='நடந்தாய் வாழி காவேரி'/><author><name>மோகனா</name><uri>http://www.blogger.com/profile/10206294980960996941</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_9nysbCErfEE/SCc0lV224EI/AAAAAAAAENE/T09e-Q_vDbE/S220/DSCF0066.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-153842835912349353.post-4643598231795719088</id><published>2007-08-06T11:23:00.000-07:00</published><updated>2007-11-04T21:31:01.147-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுயம்'/><title type='text'>இனியவை 40 - 32 (அலப்பறை 8)</title><content type='html'>ஏற்கனவே என்னை அலப்பறை என்று நிறைய பேர் கிண்டல் செய்து இருந்தார்கள் ஆனாலும் நன்றாகவும் எழுதியிருந்தேன் என்று கூறியிருந்ததால் என்னைப் பற்றி நான் பெருமைப்படும் எட்டு காரணிகள்....8 போட நண்பர் கதிரவன் (http://vrkathir.blogspot.com/2007/07/8.html) அழைத்திருந்தார்.. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பெருமைப்பட இருப்பவை.......&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கையெழுத்தும், நேர்த்தியும்...&lt;br /&gt;&lt;br /&gt;இயற்கையாகவே என் கையெழுத்து அழகாக இருக்கும்... அது எனக்கு நிறைய உதவியாக இருந்தது... நல்ல மதிப்பெண் வாங்க, பள்ளி மற்றும் கல்லூரிகளில் கருப்பலகையில் வரைய மற்றும் எழுத என்று, நான் அனைவருக்கும் தெரியும் முகமாக இருக்க அதுவும் ஒரு காரணமாக இருந்தது...&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் பிரச்சனை என்னவென்றால் என் கையெழுத்து அழகாய் இருப்பதால் மட்டும் தான் எனக்கு மதிப்பெண் வருகிறது என்று தோழிகள் கிண்டல் பண்ண நான் என்னை நிரூப்பிக்க வேண்டியிருக்கும்(ஆரம்பத்தில்...)!&lt;br /&gt;&lt;br /&gt;அது போல் என் செயல்கள் நேர்த்தியாக இருக்கும், செய்முறை ஏட்டில் நல்லது(குட்) என்பதை விட நேர்த்தி( நீட்) என்று அதிகம் இருக்கும்... என் அம்மா சொல்லுவார்கள் குப்பையை கொட்டினால் கூட அழகா கொட்டனும் (!...)என்று. எதையும் அழகா செய்வது பிடிக்கும்.. இப்போ கணிணிணியில் வேலை என்பதால் ரொம்மவும் கடைபிடிக்க முடிவதில்லை...&lt;br /&gt;&lt;br /&gt;பரிசுகள்...&lt;br /&gt;&lt;br /&gt;நான் நிறைய பரிசுகள் வாங்கியுள்ளேன்... தேசிய, மாநில அளவில், மாவட்ட அளவில், பள்ளி கல்லூரிகளில், பழ்கலைக்கலக அளவில் என்று ஒரு வரிசை,. எவற்றில் என்றால் முக்கியமாக விளையாட்டு, மதிப்பெண்ணிற்காக, கட்டுரைப் போட்டி, சில துறை சார்ந்த போட்டிகளுக்காக அந்த பரிசுகள் என்று அது ஒரு வரிசை... என் கல்யாணத்திற்கு பொருட்களே வாங்க வேண்டாம் என்று கிண்டல் செய்யும் அளவு பாத்திரங்கள், கடிகாரங்கள், மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் என்று அது ஒரு வரிசை... அதில்லாமல் கோப்பைகள், மிகவும் பெருமையான ஒன்று இது, சுதந்திரதினம் அல்லது குடியரசுதினத்தில் மாவட்ட அட்சியர் கையால் 5, 6 வருடம் தொடர்ந்து  பரிசு வாங்கி அது நாளிதளில்களில் வந்துள்ளது... &lt;br /&gt;முதுகலை கல்லூரிப் படிப்பு முடிக்கும் வரை பரிசு வேட்டை தொடர்ந்தது... முதல் மதிப்பெண் மற்றும், விளையாட்டுக்கான ஒட்டு மொத்த விருது என்று, அது முடிந்தது... என்னால் பரிசு வாங்காமல் ஒரு விளையாட்டைக் கூட பார்க்க முடியாது(நேராக)என்பது தான் உண்மை...&lt;br /&gt;&lt;br /&gt;விளையாட்டு....&lt;br /&gt;&lt;br /&gt;நான் முக்கியமாக பெருமையாக நினைப்பது நான் விளையாட்டில் இருந்ததைதான்... அது &lt;br /&gt;என்னுள் இன்றும் பாதிக்கப்பட்டுள்ள ஒன்று.. கனவில் தகுதித் தேர்வு நடப்பதும் அதில்&lt;br /&gt;நான் வெற்றி பெருவதாகவும், தோல்வியுருவதாகவும் வருவது வாடிக்கை..&lt;br /&gt;&lt;br /&gt;அதுமட்டுமல்ல  அலுவலகத்தில் எவரையாவது வெளியில் பார்த்தால் உள்ள போகலையா என்று கெட்பதற்கு பதில், இரங்கலையா என்றும், அலுவலகம் வரலையா என்பதற்கு விளையாட வரலையா என்றும், இப்போதும் சட்டென்று என்னையும் அறியாமல் வாயில் வந்து விடும்...&lt;br /&gt;&lt;br /&gt;அந்த அளவு நான் மூழ்கிய மற்றும் பெருமைப்படும் காரணி, நான் விளையாட்டில் இருந்தது...&lt;br /&gt;&lt;br /&gt;எளிமை....&lt;br /&gt;&lt;br /&gt;விளையாட்டில் இருந்ததால் நகை போட்டுக்கொள்ளும் பழக்கமும், அழகுப் பொருட்கள் உபயோகிக்கும் பழக்கமும் இல்லாமல் போனது. விளையாட்டு உடைகளே பெரும்பாலும் உபயோகித்ததால் நல்ல உடைகள் போடும் பழக்கமும் இல்லை. உடையில் இப்போது கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம்.. ஆனால் மற்றது இரண்டும் இன்றும் வர மாட்டேன் என்கிறது, &lt;br /&gt;&lt;br /&gt;பார்வையில் மட்டுமல்ல பழகுவதிலும் எளிமையாகத் தான் இருப்பேன், இப்போதும் சிரிப்புடனே இருப்பேன்., அனைவரும் என்னை சுலபமாக உதவிக்கு அணுகும் அளவு இருப்பேன்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பெருமைப்பட செய்ய இருப்பவை.......&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;உதவிகள்...&lt;br /&gt;முடிந்த அளவு பிறருக்கு உதவ உள்ளேன்... இப்போதும் உதவுகிறேன் என்றாலும், அதனால் நானும் சிலமுறை கடினமாக மாட்டிக்கொள்கிறேன்., அதைத் தவிர்த்து நானும் இன்பமாக இருந்து, மற்றவர்களுக்கும் உதவ வேண்டும்&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல தாயாக...&lt;br /&gt;வாய்ப்பு இருந்தால் ஒரு குழந்தைக்கு நல்ல தாயாக இருக்க வேண்டும், அறிவையும், நல்லெண்ணங்களையும் கொடுத்து, சமுதயத்திற்கு உதவும் குழந்தையாக வளர்க்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;புத்திசாலித்தனம்...&lt;br /&gt;நிறைய படித்து, கற்றுக்கொள்ள வேண்டும்., துறை சார்ந்ததும் அல்லாததும்...&lt;br /&gt;&lt;br /&gt;இன்பம்..&lt;br /&gt;வாழ்க்கையை அதன் போக்கில் அழகாக, எதார்த்தமாக எடுத்துக் கொண்டு போக வேண்டும். எந்த சூழலிலும் மனதை விட்டுவிடாமல், தத்துவார்த்தமாக வாழப் பழக வேண்டும்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பலரும் 8 போட்டு முடித்து விட்டார்கள். நான் என் பங்கிற்கு 8 பேரை அழைக்கிறேன். அவர்கள் தொடர்வார்கள் என நம்புவோம் :-)&lt;br /&gt;&lt;br /&gt;1) சூரியன் - தி பாஸ்&lt;br /&gt;2) கரையோரத் தென்றல் - அருட்பெருங்கோ&lt;br /&gt;3) இந்திய குடிமகன் - CITIZEN&lt;br /&gt;4) எட்டு போடாதவர்கள்&lt;br /&gt;5) Survival : பிழைப்பு - LakshmanaRaja&lt;br /&gt;6) ப்ரசன்னா - குறைகுடம்&lt;br /&gt;7) திரு.கென்&lt;br /&gt;8) பிரியா - பிரிய(மான) தோழி&lt;br /&gt;&lt;br /&gt;விளையாட்டின் விதிகள்:&lt;br /&gt;&lt;br /&gt;1. ஆடுபவர் 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/153842835912349353-4643598231795719088?l=malargall.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://malargall.blogspot.com/feeds/4643598231795719088/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=153842835912349353&amp;postID=4643598231795719088' title='6 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/153842835912349353/posts/default/4643598231795719088'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/153842835912349353/posts/default/4643598231795719088'/><link rel='alternate' type='text/html' href='http://malargall.blogspot.com/2007/08/40-32-8.html' title='இனியவை 40 - 32 (அலப்பறை 8)'/><author><name>மோகனா</name><uri>http://www.blogger.com/profile/10206294980960996941</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_9nysbCErfEE/SCc0lV224EI/AAAAAAAAENE/T09e-Q_vDbE/S220/DSCF0066.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-153842835912349353.post-138447829214630707</id><published>2007-07-28T06:32:00.001-07:00</published><updated>2007-11-04T21:29:56.958-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><title type='text'>சிவாஜி தேடும் பெண்ணும் : நானும்....</title><content type='html'>சிவாஜி படத்தில், ரஜினி "தமிழ் கலாச்சாரத்துடன் கூடிய பெண் வேண்டும்" என்று கோயில்களில் பெண் பார்த்த காட்சிகளைப் பார்த்த போது, எனக்கு நான் கோயில்களுக்கு போன பொழுதுகள் நியாபகம் வந்தது. அப்படி நான் கோயிலில் இருக்கும் போது, ஒரு வேலை ரஜினி அதே போல் என்னைப் பார்த்து விரும்பியிருந்தால் எப்படி இருக்கும் என்று தோன்றியது அதான் இந்த பதிவு...&lt;br /&gt;&lt;br /&gt;ரஜினினு எடுத்துக்கொள்ளாதீர்கள், அவரைப் போல பெண் தேடும் ஆண்கள் என்றோ அல்லது யாரோ ஒருவர் அப்படி பார்த்து விரும்புகிறார் என்றோ கொள்ளலாம்...&lt;br /&gt;&lt;br /&gt;நான் கோயிலுக்கு நிச்சயம் புடவை,தாவணி அல்லது சுடிதாரில், பெரும்பாலும் பாட்டியுடன் தான் போவேன். கையில் பூஜை சாமன்கள் இருக்கும் (விளக்குகள், எண்ணை, திரி, தீப்பெட்டி இப்படி) எல்லா சாமிகளுக்கும்(சிலைகளுக்கும்) முன்னால் விளக்கு வைத்து, பூ வைத்து ரொம்ப பக்தியுடன் கும்பிடுவேன். கடைசியில் துர்க்கையம்மன் முன் உட்கார்ந்து பாட்டியுடன் சேர்ந்து ஏதாவது பாடல் பாடுவேன், கிளம்பும் முன் நிச்சயம் அந்த பூசாரி நல்லா பாடினாயம்மா என்று சாமிக்கு(சிலைக்கு) போட்டிருந்த பூவை என் கையில் தருவார் (சில சமயம் மாருதி சிலையின் வாயில் வத்திருந்த வெண்ணையை விசேசமாக தருவார்.) &lt;br /&gt;&lt;br /&gt;இந்த சூழலில் என்னைப் பார்த்தால் சிவஜிக்கு நிச்சயம் பிடிக்கும், சிரேயா அளவுக்கு அழகு இல்லையென்றாலும் சுமாராக சராசரி தமிழ் பெண்ணாக இருப்பேன். சரி எப்படியோ பிடித்து போய் விட்டது என்று வைத்துக் கொள்ளலாம். அதுக்காக நான் தெய்வ நம்பிக்கையுடைய பெண் என்றால் இல்லை, என் பாட்டியின் சந்தோசமும், வாழ்க்கையும் ஏன் பொழுது போக்கும் கூட கோயில்களும், சிலைகளும் தான். அவர் வளர்த்த ஆள் நானென்பதால் அவருடன் இருக்கும் போது சிலைக்கு பாலபிசேசங்களும், மலர்மாலைகளுமாக அலைந்து கொண்டிருப்பேன் மற்றபடி நாம பக்கா தி.க தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அடித்த காட்சி... விவேக் என்னைப்பற்றி சிவாஜிடம் இப்படி சொல்லலாம்... "சிவாஜி, நீ அன்றைக்கு கோயிலில் பார்த்தியே அந்த பெண் MCA வை, ஒரு சிறிய மாவட்டத்தில் கலை அறிவியல் கல்லூரியில் (பெண்கள் கல்லூரியில்) படித்துவிட்டு பெங்களூரில் கண்ணியில் வேலை பார்க்குதாம். கணிணியில் வேலைப் பார்த்தாலும் புடவையில் தான் வேலைக்கு போகுமாம், பெங்களூரில குடும்பத்துடன் இருக்காம், இப்ப பாட்டி வீட்டுக்கு வந்திருக்காம். உனக்கு ஏத்த பொண்ணுப்பா படிச்சும் இருக்கு..." &lt;br /&gt; &lt;br /&gt;அடுத்தது எங்க வீட்டிற்கு வரார்... அப்போ நான் அழகாக பூ கட்டிக் கொண்டு இருப்பேன், இல்லனா பாசி மணியை வைத்து ஏதாவது பின்னிக்கொண்டு இருப்பேன், இல்லனா வண்ண நூல்களை வைத்து துணியில் தைத்துக்கொண்டு இருப்பேன். கைத்தரி சுடிதாரில், துப்பட்டா போட்டுக் கொண்டு இருப்பேன். அதைப் பார்த்து ரஜினி இன்னும் பெரிதாக சாய்ந்து விடுவார்..&lt;br /&gt;&lt;br /&gt;அதற்காக நான் பிற்போக்கானவள் என்றால் அல்ல, பூ கட்டி முடித்த கையில் வலைப் பூவில் பெண்ணியம் பேசிக்கொண்டு இருப்பேன், துணியில் தைத்த பின் பின்னூட்டத்தில் யாரையாவது வெய்து கொண்டிருப்பேன், பாசி பிடித்த கைகளில் எதாவது புத்தகங்கள் படித்துக் கொண்டிருப்பேன்...! &lt;br /&gt;&lt;br /&gt;அந்த நகைச்சுவை என்ன ஆச்சினு கேட்கறிங்களா..? என் அப்பா, அம்மா ஆசிரியர்கள்.. பொதுவாக ஆசிரியர்கள் தான் அப்படிப் பட்ட கண்க்குகளை எடுப்பார்கள். அதனால் என் பெற்றோர்கள் ரஜினியிடம் "நீங்க எந்த பள்ளி உங்களை தெரியலையே, எங்க வீட்டுக்கு கணக்கெடுக்க என் பள்ளியிலிருந்துள்ள ஆசிரியர்கள் தானே வருவார்கள்" என்று புது நகைச்சுவையை அரங்கேற்றியிருப்பார்கள்... (அடப்பாவிங்களா பெண் மட்டும் அப்பாவியா இருந்தா போதாதா, அவ குடும்பாமே அப்பாவியா இருக்கனுமா என்ன... என்ன கொடும சார் இது.....)&lt;br /&gt;&lt;br /&gt;சரின்னு என் அலுவலகத்திற்கு ரஜினி வரார்... அங்கு நான் சுடிதாரில் ரெண்டு பக்கமும் பின் இட்டு துப்பட்டா போட்டுக்கொண்டு, சின்ன பொட்டு வைத்து அதன் மேல் சந்தணம் வெத்துக் கொண்டு இருக்கிறேன்..( நிஜமாலுமே அப்படி நான் அலுவலகம் போவதுண்டு..) அங்கு அனைவரும் என்னை அக்கா, அக்கா என்று பாசமாக அழைக்கிறார்கள், அவர்களிடம் ரஜினி ஏனப்பா அவ உன்னை விட இளையவள் தானே, ஏன் அக்கானு கூப்பிடறிங்கனு கேட்கிறார்.. அதுக்கு நம்ம பாசக்கார பயபிள்ளைகள்,  "நாங்க விகல்ப்பம் இல்லாம பழகினாலும் யாராவது தப்பா எங்களைப் பேசிடக் கூடாதேனு அக்கா, அக்க
